புதன் 30 2011

சிறுதுளி பெருவெள்ளம்

அன்பார்ந்த வாக்காள பெருமக்களே!

வருகின்ற சட்டமன்ற தேர்தல்திருவிழாவில் எந்த கொள்ளைகாரனுக்கு, கொள்ளகாரிக்கு ஓட்டளிக்கப் போகிறீர்கள

“பழையன கழிதலும்,புதியன புகுதலும்”. மாதிரி பழைய சம்பவங்களை மறந்துவிட்டீர்களா?அல்லது பெருந்தன்மையுடன் ஒதுக்கிவிட்டீர்களா? அரசு அதிகாரிகள் உள்பட பல்வேறு தரப்பினர் ஓட்டு போடாமல்இருக்க்கூடாது என்றதால் பயந்து விட்டீர்களா? 

 பலர் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி குழப்பிவிட்டதனால் குழம்பிவிட்டிர்களா? இல்ல எதையுமே கண்டுக்கிறாம நமக்கென்னனு ஒதுங்கியிருக்கீங்களா? இவை எதுமேயில்லாமல் மொத்தமா குடுகுடுப்பைகாரன நம்பி எதிர்பார்த்துகிட்டு இருக்கீங்களா?


நீங்கள் ஓட்டு போட்டாலும் போடாவிட்டாலும் ஆட்சி அதுபாட்டுகு நடந்துகிட்டுதான் இருக்கும்.தேர்தல்திருவிழா வந்தாலும் வராவிட்டாலும் ஆட்சி நடந்துகிட்டுதான் இருக்கும். விலைவாசிகள் மற்றும் எல்லாம் விஷம்போல ஏறிகிட்டுதான் இருக்கும்.

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாகுமா? ஓட்டுசீட்டு நமக்கு வாழ்க்கை தருமா? ஓட்டு போட்டால்மட்டும் விலைவாசி, பெட்ரோல்,கரண்ட்கட் போன்றவை  குறையுமா?

ஓட்டு போடாவிட்டால் ஊழல், இலஞசம், நாசம், அடக்குமுறை பெருகுமா? நீங்கள் ஓட்டு போட்டாலும், போடாவிட்டாலும், எந்தவிலையும், எந்த முறைகேடுகளும் குறையப்போவதில்லை.

நீங்கள் காசு வாங்கி ஓட்டுபோட்டாலும்,காசு வாங்காமல் நேர்மையாக ஓட்டுபோட்டாலும் தேர்தல்திருவிழா முடிந்தபின் வெற்றி பெற்றவரோ அல்லது தோற்றவரோ உங்களை கணவில்கூட நினைத்துப்பார்க்கமாட்டார். நினைத்தாலும் அவரால் ஒன்றும் செய்துவிடமுடியாது.

“சுயநலமே! தன்முன்னேற்றம்” என்ற இந்தக்காலத்தில் எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை.ஓட்டுரிமை பெற்றதலிருந்து. நீங்களும் மற்றவர்களும் ஓட்டு போட்டுருப்பீர்கள .உங்களுக்கோ, மற்றவர்களுக்கோ. இந்த நாட்டு ஏழை மக்களுக்கோ நிம்மதியாக கஞ்சி குடிப்பதறகு வழி கிடைத்திற்க்கா? 

பெற்ற சுதந்திரம் என்கிறார்களே.அந்த சுதந்திரத்தை ஓட்டுவாங்கிப்போன அமைச்சர்களாவது பாதுகாத்து இருக்கிறார்களா? அவர்கள் பாதுகாப்பது பெரும் முதலாளிகளையும், அந்நியர்களையுதான்

நீங்கள் போடும்ஓட்டால் வெற்றிபெற்றகட்சிக்கு சொத்து பெருகும் பேறும்புகழும் வளரும். தோற்ற கட்சிக்கு தோற்றதினால் சொத்தும்பேரும் புகழும் குறையாது.

நீங்கள் ஓட்டு போடாமல் இருந்துவிட்டால், அதற்காக ரோட்டில் பாலாறும் தேனாறும் ஓடாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.ஓட்டு போடாதினால் நீங்கள் சிந்திக்க தொடங்கியிருக்கிறீர்கள். கொள்ளையடிப்பவர்களுக்கும், ஊழல் பேர்வழிகளுக்கும் அங்கீகாரம் அளிக்கவில்லை ஆளுகின்றவர்கள் அவர்கள் இஷ்டத்துக்கு உலகவங்கியிடம் கடன் வாங்கி குவித்தால் நாம் பொறுப்பேற்க்கமுடியுமா? 

 நாம்மட்டும் நேர்மையாளராக இருந்தால் போதுமா? நம் சமுகத்தையும் நேர்மையுள்ளதாக மாற்ற வேண்டும். அதற்கு முதல் படிதான் (ஜயப்பாவின் 18படியல்ல) புறக்கணியுங்கள். ஓட்டு யாருக்கும் போடாதீர்கள.
“சிறுதுளி பெருவெள்ளம்”
-------------------------------------------------------------------
எங்கள்வணக்கம் எங்கள்வணக்கம்
ஓட்டுகேட்டு வராதவங்களுக்கு எங்கள்வணக்கம்
எங்கள்வணக்கம் எங்கள்வணக்கம்
ஓட்டு யாருக்கும் போடாதவர்களுக்கு எங்கள்வணக்கம்.
-நன்றி. மக்கள்கலைஇலக்கியகழகம். தமிழ்நாடு

3 கருத்துகள்:

  1. 24.4,14 மாலை 6.30 க்குத்தான் தாயகம் திரும்புகிரேன் ஒரு நாள் முன்பு வந்தால் ஓட்டு போடலாமே என்ற நெறுடல் இருந்தது இப்போது இலல்லை
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  2. 24.4,14 மாலை 6.30 க்குத்தான் தாயகம் திரும்புகிரேன் ஒரு நாள் முன்பு வந்தால் ஓட்டு போடலாமே என்ற நெறுடல் இருந்தது இப்போது இலல்லை
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...