செவ்வாய் 26 2011

யாருக்கும் பாரமாய்............

எனக்கு டீ குடிக்கும்
பழக்கமில்லை-அதனால்
டீ கடைக்கு போவதில்லை

மது குடிக்கும் பழக்கமில்லை
ஆனால் மது கடைக்கு
போகமல் இருந்தில்லை

சாமி கும்பிடும் பழக்கமில்லை
ஆனாலும் சாமி கும்பிடாமல்
இருப்பதில்லை

சாப்பாடு கிடைப்பதில்லை
அதற்காக சாப்பிடாமல்
இருக்க முடிவதில்லை

யாரிடமும் பேசுவதில்லை
பேசினால் அவர்களை
விடுவதில்லை

யாரும் என்னை சிரிக்க
வைக்க முடிவதில்லை
அதற்க்காக நானும்
 அழுவதில்லை

வாழ்க்கையை ரசிக்க
தெரியவில்லை-அதற்காக
தற்கொலைக்கு
போனதில்லை

புமி எனக்கு பாரமாய்
இருந்ததில்லை-அதனால்
யாருக்கும் பாரமாய்
இருக்க போதில்லை.


2 கருத்துகள்:

  1. புமி எனக்கு பாரமாய்
    இருந்ததில்லை-அதனால்
    யாருக்கும் பாரமாய்
    இருக்க போதில்லை.//

    மண்ணுக்கு மரம் பாரமா?
    மரத்துக்குக் கிளை பாரமா?

    பதிலளிநீக்கு
  2. சில நேரங்களில் மண்ணுக்கு மரம் பாரமாகவும் மரத்துக்கு கிளை பாரமாகவும் ஆகிவிடுகிறதே!

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...