செவ்வாய் 14 2012

நண்டு கதை கேளுங்கோ......கொக்கு கதை கேளுங்கோ.....

மகா.மகா, மக்கு சனங்களே!!

தமிழகத்துக்கு மூன்றாவது முறையாக இருண்ட
காலத்தை ஆடசிக் கட்டிலில் அமர்த்திவிட்டு
குத்துதே, குடையுதே! என்றும் புலம்பும்
 மற்றும் புலம்பாத அடுத்ததேர்தல்வரை
காத்து இருக்கும் வேலை வெட்டி இல்லா
சனங்களே!



உங்களுக்காக, ஆத்தா,கதை சொல்லியிருக்காங்கோ,
 நண்டு கதை கேளுங்கோ..கொக்கு கதை கேளுங்கோ............



இதுல, நண்டு யாரு, கொக்கு யாருன்னு கண்டு
பிடியுங்கோ, கண்டுபுடுச்சு சொல்லலைன்னா,
உங்க தல வெடிக்காதுங்கோ........பயப்படாதிங்கோ....

இப்போ,நண்டு கதை கேளுங்கோ..........
கொக்கு கதை கேளுங்கோ..................

தமிழ் நாட்டிலுள்ள குளத்தில் மீன்களை பிடித்து
தின்ற கொக்கு ஒன்று ஒரு நாள் சோகத்தில்
இருந்துச்சாம், அப்போது அங்கு வந்த நண்டு
ஏன்? சோகமாய் இருக்கிறாய் என்று கேட்டுச்சாம்.

அதற்கு, கொக்கு..குள்த்தை குத்தகைக்கு
எடுத்தவர் தண்ணீரை இறைத்து விட்டு
மீன்களை பிடித்து சென்று விடுவாரே,
 அதனால் மீன்களில் கதி என்னவாகுமோ?
என்ற கவலையால் தான் சோகமாக
இருப்பதாக சொல்லுச்சாம்.

அடகொக்கா...மக்கா.கொக்குவின்
சோகத்த கேட்டீங்களா?..............

கொக்குவின் சோகத்தைக்கேட்ட நண்டு
ஒரே ஓட்டமாகச் சென்று மீன்களிடம்
சென்று கொக்குவின் சோகத்தை சொல்லுச்சாம்.

அதைக்கேட்ட மீன்கள் .கொக்குவிடமே.
தங்களை காப்பற்றுமாறு யோசனை
கேட்டச்சாம். எப்படியிருக்கு?

அதற்கு. அந்த கொக்குஉங்களுக்காக சிரமம்
பார்க்காமல்.கஷ்டத்தை பொறுத்துக்கொண்டு,
அருகில் உள்ள வேறு ஒரு குளத்தில் விட்டு
 விடுவதாக சொல்லுச்சாம்.

மதிகெட்ட மீன்களும் தங்களை வாழ்விக்க
வந்த கொக்கேன்னு, பிளக்ஸ் போர்டு வச்சு
புகழ்ந்து தள்ளியிருக்குமுல்ல,?????

மீன்களை காப்பாற்றுவதற்கே அவதாரம்
எடுத்து வந்த கொக்கும். மீன்களை துாக்கிச்
செல்வதுபோல் பாவ்லா காட்டி,  அண்ணன்
 கேப்டன் நாட்டு மக்களை தீவிரவாதிகளிட
மிருந்து காப்பது மாதிரின்னு வச்சுகுங்க..............

அந்தக் கொக்கு மீன்களை துாக்கிச் சென்று
 பாறையில் வைத்து மீன்களை அவசரப்படாமல்
அவதிப்படாமல் நிதனாமாக தின்று கொழுத்து
 வந்ததாம்.

நண்டுவும் மீன்களை மாதிரி தன்னையும்
அடுத்த குளத்தில் விட்டுவீடுமாறு
கூறி கொக்குவின் கழுத்தை பிடித்துக்கொண்டதாம்.
 கொக்கு பறந்த நிலையில்பாறைகளில் மீன்களின்
 முட்கள் கிடப்பதைக் பார்த்த நண்டு. தாம் ஏமாற்றப்
பட்டு கொல்லப்படுவோம் என்பதை தெரிந்து
கொண்டதாம்..அதனால் கோபம்கொண்ட நண்டு.
 கொக்குவின் கழுத்தை நெரித்து கொன்றதாம்.

கொலைக்கு கொலை, பழிக்கு பழின்னு
நெனெச்சிடகூடாது....மக்கா......

இறந்த கொக்குவின் தலையுடன் வந்த
 நண்டு, மீன்களிடம் நடந்த கதையை
கொக்குவின் நயவஞ்சகத்தை கூறியதாம்.
கொக்குவிடமிருந்து தப்பித்த மீன்கள்
மகிழ்ச்சி அடைந்தனவாம்.
அப்புறம் சந்தோசமா சாகுறதுக்குன்னு
நிணைக்கக்கூடாது.

நண்டு கதைய கேட்டீங்களா??....
 கொக்கு கதைய கேட்டீங்களா???....

இந்தக் கதையில கொக்கு யாரு?
நண்டு யாரு? அட மீன்கள் யாரு?

சொன்னாலும் சொல்லாவிட்டாலும்
குத்தமில்லீங்கோ!!!! உங்களுக்கு
அவ்வளவுதான் சரக்குன்னு
நெனச்சிருவேனுங்கோ!!!!!!!

இன்னும்.. என்ன நோண்டிகிட்டு
இருக்கீங்க...... கதை அம்புட்டு தாங்கோ!!!!



4 கருத்துகள்:

  1. சிறுவயதில் படித்த கதை.இன்றைய தமிழக அரசியல் ஆட்டத்தில் சரியாக பொருத்தி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான கதை & பதிவு .பாவம் தமிழக மக்களை நினைத்தால் தான் கவலையாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொக்கும் இப்படித்தான் கவலைப்பட்டதாக, ஆத்தாவின் கொக்கு கதையில சொல்லியிருக்காங்க, அவர்கள் பாத்து?

      நீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...