ஞாயிறு 27 2012

பணம் செலவழித்து பத்மஸ்ரீ விருது வாங்கிய நடிகர்



காசு கொடுத்து பட்டம் வாங்குவது மாதிரி,காசு கொடுத்து பள்ளி அட்மிஷன் வாங்குவது மாதிரி, காசு செலவழித்து எம்எல்ஏ,எம்பி சீட் வாங்குவது மாதிரி காசுகொடுத்து ஓடடு வாங்குவது மாதிரி,இப்படி காசு கொடுத்து கொடுத்து வாங்கியது மாதிரி....சுதந்திரஇந்தியாவில்கலைஞர்களுக்குவழங்கும் பத்மஸ்ரீ விருதுக்காக ஒரு நடிகர்.அதுவும் நாடக நடிகர் ஒருவர். தமிழின நாடக தந்தையான சங்கராஸ் அளவுக்கு சொல்லும்படியான கூத்துபட்டறை நாடக அமைப்பை நடத்தி அதன்மூலம் ஒலக சிறந்த சினிமா இயக்குநர்களையும் நடிகர்களையும் உருவாக்கியவர்.
நடேசன் முத்துசாமி
        
 கூத்து வடிவத்தை நவீன நாடகத்தில் புகுத்தி.கொலம்பியா வரை சென்று வந்த இவருக்கு. சாதனையை பாராட்டி“பத்மஸ்ரீ” விருது வழங்க முடிவு எடுத்து இந்த விருதை வாங்குவதற்க்காக, நாடகத்தில் ஒத்திகை பார்ப்பது போல.இவரின் நாற்பது வருட நாடக ஒத்திகை அனுபவத்தைக்கூட மதிக்காமல்,
       
 இந்திய நாட்டின் மாபெரும் ரப்பர் ஸ்டாம்பும், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையுமான ஜனாதிபதியிடம் விருது வாங்குவது எப்படின்னு, ஒத்திகை நடத்தியிருக்கிறார்கள்.

திருநெல்வேலிக்கே அல்வா கொடுத்த கதையாக.நாற்பது வருடமாக ஒத்திகை பார்த்தே அனுபவமான கூத்துப்பட்டறை முத்துசாமிக்கும் ஒத்திகை நடத்தி இருக்கிறார்கள். யானைக்கும் அடி சறுக்கும் என்ற கதையாக. ஒத்திகைக்கான பரபரப்பில் நாடக நடிகர் தவறி விழுந்துவிட்டார் கிழே விழுந்ததினால் தோள் பட்டையில் மூன்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைமை ஏற்ப்பட்டது
விளைவு, அந்த சிகிச்கைக்காக ஒரு லட்சத்து எண்பதாயிரம் செலவழித்து அந்த கலைஞர்களுக்கான “பத்மஸ்ரீ“ விருதை வாங்கியிருக்கிறார். அந்த விருதையும் சக்கர நாற்காலியில் சென்றுதான் வாங்கியிருக்கிறார்.

விருது போதையும்,புகழ் போதையும் டாஸ்மாக் போதை மாதரி,. எப்படிஎல்லாம் ஆட்டி படைக்கிறது என்பதற்கு கூத்துப்பட்டறை முத்துசாமி நடிகரும் சாட்சி..

5 கருத்துகள்:

  1. பெயரில்லா28 மே, 2012 அன்று PM 1:32

    உண்மையில் ஒரு எளவும் புரியல சாமி.......

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா28 மே, 2012 அன்று PM 2:39

    தலைப்பையும்கடைசி பாராவையும் படித்து பார்த்துட்டு திரும்பவும் விபரங்களை படிக்கவும்

    பதிலளிநீக்கு
  3. பாவம் இவ்வளவு ஒத்திகைப் பார்த்து கடைசியில் நடிக்க வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விட்டதே...

    ஒரு சந்தேகம் இவர்கள் இறந்தப்பின், சவ அடக்கத்தின்போது எப்படி நடந்து கொள்ளவேண்டுமென்றும் ஒத்திகை பார்பாங்களோ?

    பதிலளிநீக்கு
  4. பாவம் இவ்வளவு ஒத்திகைப் பார்த்து கடைசியில் நடிக்க வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விட்டதே...
    ஒரு சந்தேகம் இவர்கள் இறந்தப்பின், சவ அடக்கத்தின்போது எப்படி நடந்து கொள்ளவேண்டுமென்றும் ஒத்திகை பார்பாங்களோ?

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...