வெள்ளி 01 2012

ஒலக கொலைகார படையின் விருந்தில் ஒலக நாயகன்...

ஒலகத்தில் மொத்த ஜனநாயகத்துக்கும்,சுதந்திரத்துக்கும மனித
நேயத்துக்கும், அமைதிக்கும் ஒரே அத்தாரிட்டியான அமரிக்காவும்
அதன் படைகலன்களும் இருப்பதாக ஒலகம்பூராவும் போஸடர்
ஒட்டாமல் விளம்பரத்தப்பட்ட வாசகம்.

இந்த ஒலக போலீசு யாருக்கான ஜனநாயகத்தையும் சுதந்திரத்
தையும்பாதுகாக்கிற்து என்பது சமூக அரசியல் தெரிந்தவர்களுக்கு
 நன்கு தெரிந்தவிசயம். கொன்றால் பாவம்.தின்றால் போச்ச-
என்ற உவமையே இந்தஓலக கொலைகார படைக்கே பொருந்தும்.

அப்பேர்பட்ட ஒலக படையிடம். எப்படி எப்படியெல்லாம் பத்து
அவதாரமேக்கப்போட்டு நடித்து ஆஸ்கார் விருதுக்காக ஏங்கி
தவித்து ஆரம்பத்தில்“ முத்தநாயகன் ”என்ற இளநிலை பட்டம்
பெற்று பின்“ஆஸ்கார் நாயகன் ”பட்டம் பெற முயற்சித்தும் கிடைக்காமல்,தற்போது “ஒலக நாயகன் ” என்ற முதுநிலை
பட்டம்பெற்று,தான் ஒரு அறிவுஜீவி என்றபோர்டு மாட்டி ஒலக
வலம் வரும் இந்த நடிகன்.

தான் நடித்து தயாரித்து வரும் “ விஸவரூபம்” என்ற படத்தில்
ஒலகஅமைதி மற்றும் ஒலக புலனாய்வு பற்றி பல விசயங்கள்
இடம் பெருவதற்க்காக ஒலக கொலைகாரப்ப்படையின் ஒலக
அதிகாரியிடம்பல தகவல்களை திரட்டி படத்தில் சேர்த்து இருக்
கிறாராம். இப்படத்தின்முக்கிய காட்சிகள் ஒலக கொலைகார
நாடான அமெரிக்காவில் படமாக்கியிருக்கிறாராம்.

கொலைகார நாட்டிலிருந்து இருந்து சினிமா படம் எடுக்க
வருபவர்களுக்குஎன்ன உதவி கேட்டாலும் அமெரிக்காவின்
ஒலக கொலைகாரப்படை உடனே செய்யும். படத்தை இராணுவ
தளத்தில் படம் பிடிக்கவும் அணுமதியும் உண்டு

பல நாடுகளில் மீது ஆதிக்கம் செலுத்தி அங்கிருந்து கொள்ளை 
அடித்துவரும் செல்வத்தினால்தான் அமெரிக்காஇராணுவ 
வல்லரசாக இருக்கிறதுஎன்பதை மறைத்து. ராம்போ முதல் இண்டிபெண்டன்ஸ்டே வரையிலானபடங்களில் சொல்லப்
படுகிற மாதிரியாக அமெரிக்க கொலைகார படையின்
வீர பரமாக்கிற கஷ்ட நஷ்டங்களை சொல்லுகிற படியான ,
ஜால்ராஅடிக்கும் கதைகளுக்கே எல்லா உதவியும் கிடைக்கும்

ஒலக அமைதி,புலனாய்வு என்று ஒலக கொலைகார படையின்
வழியேசென்று “விஸ்வரூபம்” படத்தில் இடம்பெறச் செய்ததற்கு
பரிசாக,

ஒலக அமைதிக்காக, ஒலக பயங்கரவாதிகளை ஒடுக்கு
வதற்க்காக.சென்னையில் முகாமிட்டுருந்த ஒலக வல்லரசின் கொலைகார படையின் அனு சக்தி கப்பலான யு.எஸ்.எஸ்.
கார்ல்வின்ஸ் கப்பலில் நடந்தவிருந்தில் ஒலக நாயகனுக்கு
 அழைப்பு கொடுக்கப்பட்டு ,ஒலக நாயகனும் கலந்து கொண்டு கௌவிரக்கப்பட்டாராம்

 ஒலக வரிசையில் இடம்பிடித்த இந்திய ஊடகங்களும் அடிமைத்
தனத்தையே பார் புகழும் பெருமையாக “அமெரிக்கப்போர்க்கப்பலில்
நடந்த விருந்துக்கு அழைக்கப்பட்ட முதல் இந்திய நடிகன் என்று
வாழ்த்துபா..பாடி புளகாங்கிதம் அடைகின்றன.

ஒலக வல்லரசுவின் தயவில் அறிவுஜீவீயான ஒலக நாயகனின்
 ஒப்ற்ற காவியம் விஸ்வரூபம் , படம் வந்து ஒலக நாயகனின்
கல்லாவை நிரப்பினாலும். நாய் விற்ற காசு, குரைக்கவா
போகிறது.




3 கருத்துகள்:

  1. முதல்ல படம் வரட்டுங்க... அப்பறம் ஒங்க கொலைவெறிய காண்பிங்க... இப்பேவே ஏன் அச்சாரம் போடறிங்க

    பதிலளிநீக்கு
  2. இந்த லாவணிப்பதிவைக் கண்டவுடன் உலகநாயகன் திருந்தி அடுத்து வரும் படங்களை செங்கொடி பாசறைகளிலேயே எடுத்து புரட்சி செய்வார் என நம்புவோமாக! அன்பே சிவம்..வயிற்றெரிச்சலே சவம்!

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    பயமற்ற கருத்துக்கள்
    தங்கள் வலைப்பதிவு மிக அருமை
    என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
    என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
    வாசிக்க இங்கே சொடுக்கவும்
    http://kavithai7.blogspot.in/
    புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
    நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
    என்றும் அன்புடன்
    செழியன்.....

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...