முன்னோரு காலத்தில் மீனாட்சி அம்மன்
கோவிலுக்குள் சூத்திரர்கள்,தாழ்த்தப்பட்டவர்கள் நுழையக்கூடாது என்று எதிர்ப்பு
தெரிவித்தவர்கள் தற்போதைய மீனாட்சி கோவில் அர்ச்சக பட்டர்களின் முன்னோர்கள்.
கோவில் நுழைவுப் போராட்டம் வெற்றியடைந்த நிலையில் மீனாட்சியை அம்போன்னு
தவிக்கவிட்டு ஓடிப்போனவர்கள்தான் ஆதி சிவாச்சாரியர்கள் என்ற பட்டர்கள் .
பிரிட்டீஷ் ஆட்சி போனவுடன் எங்களது
அதிகாரமும் போய்விட்டது என்று சொல்லி வெள்ளைப் பரங்கியர்களுக்கு வெஞ்சாமரம் வீசிய
“தேசபக்தர்கள்” தான் இந்த சிவாச்சாரியார்கள். இன்றைக்கு அனைத்து
சாதியினரும் அர்ச்சகர் ஆக்க்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
போட்டவர்களும் இவர்கள் வழிவந்த
சிவாச்சாரியர்கள்தான்.
இநத
சிவாச்சாரியார்களிடம் பக்தி மட்டும் அல்ல,கடவுள் மீது மரியாதைக்கூட கிடையாது.
இருந்திருந்தால்.கோவில்நுழைவப் போராட்டத்தின் போது மீனாட்சியை புறக்கணித்து பூசை செய்யாமல் ஓடிப்
போயிருப்பார்களா? கோவிலில் சாமியின் பெயரால் அடிக்கின்ற கொள்ளையின் உரிமை
பறிபோய்விடக்கூடாது என்பதே அவர்கள் நோக்கம்.
அதனால்தான் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக
விடாமல் இந்து மத உரிமையைக் காட்டி மீனாட்சி கோவில் பட்டர்கள் தடுத்து
வருகின்றனர்.
பெரியார் பிறந்த மண்
என்று மூச்சுக்கு முன்னூறு தடவை பேசினாலும் பயன் ஏற்ப்படுமா? கருவறைத் தீண்டாமையை
ஒழிக்காமல் வெளியில் ஈனசாதியாய்,சூத்திரர்களாய் வாழ்வதைவிடகருவறைக்குள் நிலவும் சட்டபூர்வ சாதி திண்டாமைக்கு எதிராக கிளர்ச்சி செய்துவது
மேல் அல்லவா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக