என் வலைதளத்தில் நான் எழுதிய பல பதிவுகளை, பதிவுகளின் கருத்துக்களை பிடிக்காதவர்கள். தங்களுடைய இணைய அறிவின் வல்லமையால் மட்டமான வேலையை செய்துள்ளார்கள்.
இந்த மட்டமானவர்களின் மட்டமான செயல்கள் தற்போதுதான் என் கண்ணில் பட்டது.
ஒரு கருத்து பிடிக்கவில்லை என்றால் கருத்தால் மோத வேண்டும்.
அல்லது அரட்டையில் திட்டவேண்டும்.. என் சிந்தனைக்கு என்ன தோன்றியதோ அதை பதிவிட்டு இருக்கிறேன்.
அது உண்மையிலே தவறாக இருக்கும் பட்சத்தில் எவ்வித சமரசமின்றி தவறை திருத்திக் கொள்வேன்.
அதவிட்டுபுட்டு, இப்படி கில்லித்தனமா, புல்லூருவித்தனமா, பதிவில் சில இடங்களில் வெள்ளை கோடிட்டு அழித்திருப்பது. இணையத்தில் உலாவுகிற ஆபாச படத்தைவிட மகா..மகா மட்டமான, மோசமான செயல், என்று எனக்கு படுகிறது.
எனவே, வாசகர்களே! பதிவர்களே! இப்படிபட்ட கேடு கேட்ட தனத்தில் ஈடுபடுவர்கள் தங்களுக்கு தெரிந்தவராக இருந்தால் அறிவுரை கூறுங்கள்,
கேட்காவிட்டால்............ அந்த மூஞ்சியை எனக்கும் காட்டுங்கள்.
நானும் ஒருவாட்டி அந்த மூஞ்சியை பாத்துக்கிறேன்.
இதை தடுப்பதற்கு வேறு வழி இருந்தால் கூறுங்கள்.
நானும் தெரிந்து கொள்கிறேன். அதற்கு
குரு தட்சனை எதுவும் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.
நன்றி!!!!
இப்படியும் கெளம்பியிருக்காங்களா? என்ன கொடுமை?
பதிலளிநீக்குஅனுதாபங்கள். யாராச்சும் வழி சொல்லுவாங்கன்னு நம்புகிறேன்.
அட ராமா.....:(((((((((((
பதிலளிநீக்குஇப்படி எல்லாம் கூட செய்ய முடியுமா?
பதிலளிநீக்குதங்கள் எண்ணத்தை கருத்துரையில் பதிய வேண்டுமே தவிர இதுபோல் செய்வது கண்டிக்கத் தக்கது.