புதன் 31 2013

தின(மலர்)மலத்துக்கு போட்டியாக வரலாற்றை திரித்து கூறும் தின(கரன்) மூத்திரம்...




சந்திரசேகர் ஆசாத் பற்றி வெற்றி வரலாறு என்ற பெயரில் தினகரன் நாளிதழ, உண்மை வராற்றை திரித்து பொய்யாய் புனைக் கதை,,திரைக்கதை வெளியீட்டுள்ளது. 

முழுப்பொய்யைவிட அரைகுறை உண்மை ஆபத்தானது.

என்னவென்றால், ஆசாத் படத்தை போட்டு,அலகாபாத்தில் உள்ள ஆல்பிரட் பூங்காவில்,சந்திரசேகர் ஆசாத்தும்,சுகதேவும் பேசிக் கொண்டு இருந்தாகவும், இது தெரிந்து அங்கு வந்த ஆங்கில போலீசு,இவர்களை சுற்றி வளைத்ததாகவும்,

சுகதேவ்-வை தப்ப வைத்த சந்திர சேகர் ஆசாத்.தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டதாகவும்  தினகரன் தன் மூத்திரத்தை பெய்துள்ளது.

எல்லா நாய்களுமே சூரியனை பார்த்து குலைக்கத்தான் செய்கின்றன. அது நாலுகால் பிராணிகளின் குணம்.

அந்த வகையில் உண்மை வரலாற்றை மறைப்பதும் பொய்யை விதைப்பதும் இரண்டு கால் பிராணிகளின் குணம் .இதில் தினமலமும், தின மூத்திரமும் ஒன்றையொன்று சளைத்தவை அல்ல..........

உண்மை வரலாறு என்ன என்பதை “ நாத்திகம்-பி.இராமசாமி எழுதிய நாத்திக சிங்கம் பகத்சிங் -என்ற நூலிருந்து  தெரிந்து கொள்ளலாம். அதிலிருந்து  சந்திர சேகர் ஆசாத்தைப் பற்றி சில.................
மாவீரர் சந்திரசேகர் ஆசாத்




லாகூர் நீதிமன்றத்தில்  பகத்சிங்.ராஜகுரு,சுகதேவ் மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து சிறைக் கதவுகளை உடைத்து தோழர்கள் மூவரையும்,விடுதலை செய்துவிடவேண்டும் என்ற சிந்தனையில் குறியாய் இருந்த ஆசாத். அதற்க்கான செயல்களில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்.

அந்த வேலையின நிமித்தமாக, முன்னால் தோழனும்,நண்பனுமான ஒருவனை சந்திக்கச் சென்றார். அந்த நண்பனோ,அலகாபாத் ஆல்பிரட் பூங்காவில் பேசுவோம் என்று சொல்லிவிட்டு பிரிட்டீஷ் போலீசுக்கு ஆள் காட்டி வேலை செய்துவிட்டான். அவனை நம்பி மாவீரர் சந்திரசேகர் ஆசாத் அவனுடன் பூங்காவுக்கு சென்றார்.

1931 ம்ஆண்டு பிப்ரவரி 27ம் நாள்.காலை 10 மணிக்கு பூங்காவிலுள்ள மரம் செடி,உள்ள மறைவிடங்களில் எல்லாம் 60.70 போலீசுகள் ஒளிந்து கொண்டு இருந்தார்கள்.

நிலைமையை புரிந்து கொண்ட ஆசாத்,நம்பி வந்த நண்பன் காட்டி கொடுத்து விட்டு ஓடி விட்டாலும் அச்சப்படாமல் அங்கிருந்த பெரிய ஆலமரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டார்.

அவர் ஒளிந்து இருந்ததை கண்ட 60,70 போலீசும், ஆசாத்தை சரமரியாக சுட்டார்கள். பதிலுக்கு ஆசாத்-ம் சுட்டதால் பல போலீசார் காயம்பட்டு விழுந்தனர்.

வெறிகொண்ட போலீசு ஆசாத்தை சுற்றி வளைத்து சுட்டது. தொடையில் குண்ட்டிபட்டு சரிந்த போதும், சல்லடையாக துப்பாக்கியால் சல்லடையாக துளைத்து எடுத்தார்கள். ( போராடி, போலீசால் குண்ட்டி பட்டவரை, தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்நதாக தின மூத்திரம்  கதை விடுகிறது.---பார்க்க படத்தை)

அப்படி சல்லடையாக குண்டுகளால் துளைக்கப்பட்டும்,மாவீரர் ஆசாத் உடல் அருகே செல்ல போலீஸ் படைகள் அஞ்சி நடுங்கியது. “திடிரென்று எழுந்து சுடத் தொடங்கி விடுவாரோஎன்று பயந்து நடுங்கியது. அந்தப் பயத்தால் ஆசாத்தின் உடலை நெருங்க அஞ்சியது போலீசு படை.

காலை 10 மணிக்கு சுடப்பட்டு சாய்ந்த மாவீரர் ஆசாத் உடலை மாலை 5 மணிவரையிலும் பிரிட்டீஷ் போலீசு படை நெருங்கவில்லை.

பயத்தினால், ஆசாத்-ன் உயிர் பிரிந்த அவரது சடலத்தின் மீது மீண்டும் பலமுறை சுட்டார்கள். துப்பாக்கி கூர்வாளால் மார்பை பலமுறை குத்தினார்கள்.

அப்போதும் பிரிட்டீஷ் போலீசுக்கு பயம் தெளியவில்லை, இந்தநிலையில் பயமும் வெறியும் அடங்காத வெள்ளை போலீசு அதிகாரி ஒருவன் தன் நாயை ஏவி விட்டான்.

அந்த நாலுகால் நாயானது.மாவீரர் ஆசாத்-ன் உடலில் இருந்து வழிந்த இரத்தத்தை நக்கிய பின்பே, போலீசுகாரர்கள். மாவீரரின் உடலைத் தொட்டார்கள். பூட்சுகாலால் உதைத்தார்கள்,பின்னர்தான் தைரியம் வந்து மாவீரர் ஆசாத் உடலைத் தொட்டு தூக்கி போலீஸ் வண்டியிலே போட்டார்கள்.

மாவீரர் ஆசாத்தின் பத்து ஆண்டுகால புரட்சி போராட்ட வாழ்க்கையில்  ஒரு நாள்கூட போலீஸ்காரர்களால் பார்க்க முடியவில்லை, பிடிக்கவும் முடியவில்லை,

ஆல்பிரட் பூங்காவில் 80 குண்டுகளை தாங்கி சாய்ந்த பிறகுதான் வெள்ளை பரங்கிய போலீசு அவரது உடலையே தொட முடிந்தது.


மாவீரர் சந்திரசேகர் ஆசாத் மீது இருந்த 28 பிடி வாரண்டு வழக்குகளில் போலீசார் அளித்த வாக்குமூலம் என்ன தெரியுமா ???????

மாவீரர் சந்திரசேகர் ஆசாத்தை நாடு பூராவிலும் தேடிவிட்டோம். அவரை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதே!!!!!


போரிட்டு மாய்ந்த ,மாவீரர் சந்திரசேகர் ஆசாத்தை, தன்னைத்தானே,சுட்டுக் கொண்டதாகவும், ஆல்பிரட் பூங்காவில்  சுகதேவ் உடன் பேசிக் கொண்டு இருந்ததாகவும் வரலாற்றை திரித்து வெளியிட்ட,   

கருப்பு பார்ப்பன மலக்குட்டையான தின(கரன்)மூத்திரமும்  பொய்யை விதைத்து, இன்னொரு பார்ப்பன மலக்குட்டையாக தன்னை வெளிப்படுத்துகிறது.

ஆக,  தினமலம் முழு சோற்றில் பூசனிக்காய் மறைப்பான் என்றால தினமூத்திரம்,  மலை முழுங்கி மகாதேவனாக, வரலாற்றை திரித்து கூறுகிறான், 

ஆக,இருவருமே  வில்லாதி வில்லன்கள்தான். சமூகத்திற்கு எதிரானவர்கள்தான்.







2 கருத்துகள்:

  1. நன்றி...

    உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com

    பதிலளிநீக்கு
  2. நாத்திகம் ராமசாமி சொன்னா சரியா தான் இருக்கும், போலிசு சுடும்போது பக்கத்துல இருந்து பாத்து எழுதி இருப்பார்,

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...