புதன் 02 2013

கட்டிய மனைவிக்கு துரோகம் புரிந்த தேசப்பிதா.......




தேசப்பிதாவைவிட வயதில் ஆறுமாதம்  மூத்தவர். சிறு வயதிலே மணமுடிக்கப்பட்டு, தேசப்பிதாவின் இல்லற வாழ்க்கை,ஆசிரம வாழ்க்கை, சிறை வாழ்க்கை என  தேசப்பிதாவின் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் இணைந்தே நிழலாக வாழ்ந்தவர் கஸ்தூரிபா.....

பெண்களுக்கே விதிக்கப்பட்டஅன்பு,அடக்கம்,சகிப்புத்தன்மை,
பொறுமை, தியாகம், போன்ற குணங்களுடன் வாழ்ந்தவர்.

வாய்பொத்தி,மொய்பொத்தி மங்கையர் திலகம் என பேர் எடுத்த அன்னைக்கு.தேசப்பிதா,தனது 37 வது வயதிலிருந்து துரோகம்
செய்யத் துவங்கினார்.

ஆடையில்லா இளம் பக்கிகளுடன் படுத்து தன் இளமையை கூட்டிக் கொள்வதற்க்காக, தன் மனைவியிடம் ஒரு பொய்யைச் சொன்னார்.

மக்கள் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு தாம்பத்ய உறவு,தடங்கலாக.தடைக் கற்கலாக அமையும். அதனால் பிரம்மச்சரிய விரதம் மேற்க் கொள்ள விரும்புகிறேன். ஆகையினால் எனக்கு  நீ அனுமதி தரவேண்டும் என்று கேட்டு தன் மனைவியை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கினார்.

கணவன்வழியே! தன்வழி! என்று கஸ்தூரிபா,தன் கணவருக்காக இமலாய துன்பங்களை ஏற்றுக் கொண்டார்.

துரோகத்தின் மொத்த உருவமான தேசப்பிதா,அன்று முதல் பிரமச்சரிய விரதம் என்ற பெயரில் ஆடையில்லா இளம் பக்கிகளுடன் ஆடையில்லாமல் படுத்துறங்கி எழுந்தருளினார்.



(என்னசெய்வது,தேசப்பிதாவின் பிறந்தநாளில் தேசப்பிதா நாட்டுக்கும் தன்மனைவி மக்களுக்கும் செய்த ஒவ்வொரு துரோகம்தான்   எனக்கு நிணைவில் வருகிறது)

7 கருத்துகள்:

  1. ஆடையில்லாப் பக்கிகளுடன் படுத்துத் தன் மனக் கட்டுப்பாட்டைப் பரிசீலித்தார் காந்தி என்று சொல்லப்படுவதுண்டு.[ஆதாரம் ஏதுமில்லை]

    தாங்கள் சொல்வது இதற்கு மாறுபட்டிருக்கிறது.

    தன் சுய சரிதையான ‘சத்திய சோதனை’யில், காம இச்சை தொடர்பான தன் பலவீனங்களை ஒளிவு மறைவில்லாமல் சொன்னவர் காந்தி.

    எழுத்துரிமை நம் அனைவருக்கும் உண்டு.

    தங்கள் கருத்துக்குச் சரியான ஆதாரம் தருவது தங்கள் கடமை.

    தருவதும் தராமலிருப்பதும் தங்கள் விருப்பம்.

    பதிலளிநீக்கு
  2. காந்தியின் துரோகத்தை பற்றிய ஆதாரங்கள் ஏகப்பட்டவை இருக்கினறன்.
    அவற்றில் ஒன்று தன் மனைவிக்கு செய்த துரோகம். காந்தியின் சுயசரிதையில் சொல்லியதற்கு தாங்களே ஆதாரம் இல்லை என்று சொல்லிவிட்டீர்கள். உங்களுக்கு சில.
    1.புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி வெளியீடான. காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு.
    2. வினவில் காந்தியைப்பற்றி கட்டுரை.
    3. புதியகலாச்சாரம்,புதியஜனநாயகம் இதழ்களில் வந்துள்ள கட்டுரைகள்.
    4. செங்கொடி தளத்தில் வந்துள்ள கட்டுரை
    இவைகள் போதுமென்று நிணைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. வே.மதிமாறனின் நூல்களையும். அவரின் தளத்திலும் சென்று பாருங்கள். காந்தியைப்பற்றி தெரிந்து கொள்ளலாம்.

    நன்றி!காமகிழத்தன்

    பதிலளிநீக்கு
  4. நன்றி வலிப்போக்கன்.

    தாங்கள் தந்துள்ள ஆதாரங்களை இயன்றவரை படிக்க முயல்வேன்.

    மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அட்ரா சக்கை..அட்ரா சக்கை ! தேடி வந்தேன் ! ஏமாற்றவில்லை நண்பா!

    ஆதாரம் எல்லாமே உங்க ஆளுங்க எழுத்தாவே இருக்குதே..? செல்லாது..செல்லாது !

    மாற்றுப்புரட்டாசி ஆளுகளை...கலாய்த்து கேவலப் படுத்தும், ஐடியலாஜிகல் வார்...என்றுமே வெற்றி தராது!

    ஆயிரம் சேகு சேதுங்குகள் வந்தாலும்..ஒரே ஒரு
    மா"தூ" வை அழிக்க முடியாது...மைண்ட் இட் !

    பதிலளிநீக்கு
  6. பாதை மாறுகிறது...எழுத்துகளில்!
    இதுவல்ல நீங்கள் எடுத்துச் செல்லும் புரட்சி!
    உங்களுக்கு போதிக்கப்பட்ட கொள்கைகளை..,
    அவமானத்தும் விதமாக உள்ளது...உமது கருத்துகள்!
    நீங்கள் தவறு செய்தால்..அது உமது தவறல்ல!
    நீங்கள் போர்த்திக் கொண்டுள்ள சிவப்பு நிறத்தின், சித்தாந்தத்தின் தோல்வி!

    மாற்றம் தேவை...எழுத்துகளிலும்,சிந்தனையிலும்!
    உங்கள் பதில் கிண்டல் தொணியில் இருந்தால், அதைப் பற்றி வருத்தமில்லை !
    சுய பரிசோதனை தேவை!

    உங்களின் இது போன்ற எழுத்துக்களை, உங்கள் அறிவார்ந்த கொள்கை ஆசிரியர்களும் வாசித்திருப்பர் என்றே நம்புகிறேன்!
    அவர்களுக்கு என் அனுதாபங்கள் !

    பதிலளிநீக்கு
  7. காமக் கிழத்தன் சொல்வதை மனதில் கொள்ளுங்கள் நண்பரே! இது போன்று ஒரு உலகம் போற்றும் மாமனிதரை தூற்றும் பதிவுகளை எழுதுமுன் பலமுறை யோசியுங்கள்.
    நீங்கள் கூறிய ஆதாரங்கள் எல்லாம் உங்களைப் போன்ற மன நிலை கொண்டவர்கள் எழுதியதுதானே! நடு நிலையுடன் எழுதுபவர்களின் கட்டுரைகளைப் படியுங்கள். காந்தி பற்றி ஏராளமான கட்டுரைகளை ஜெயமோகன் எழுதி இருக்கிறார். அதை எல்லாம் கொஞ்சம் படித்துப் பாருங்கள். அரைகுறையாக எதையாவது பதிவு செய்வது அழகல்ல.

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...