ஞாயிறு 24 2013

வசூல் ராஜாவிடமே வசூல் செய்த வல்லவர்.....!!!

படம். நண்டு@ நொரண்டு

















பஞ்சாப் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து களைத்து  போன அரை ஆடையை பரிசோதிக்க, அரை ஆடையின் பக்தரான பிரபல  வசூல்ராஜாவான டாக்டர் ஒருவர் அரை ஆடையை பரிசோதிக்க  வந்தார்.

வந்த வசூல் ராஜாவிடம் அரை ஆடை தன் உடலை காட்ட மறுத்துவிட்டார்.

வந்திருந்த வசூல்ராஜாவுக்கோ,தங்கள் உடலை பரிசோதிக்காத வரை தனக்கு சமதானமாகது என்று கூறி பரிசோதிக்க வேண்டினார்.

உங்கள் சமதானத்துக்கு வேனுமென்றால் பரிசோதிக்கலாம் என்று விட்டு,ஒரு நிபந்தனை விதித்தார் அரை ஆடை., அந்த நிபந்தனை என்னவென்றால்.

வசூல்ராஜா “எனக்கு பீஸ் கொடுத்தால்தான் என் உடலை பரிசோதிக்க அனுமதிப்பேன்” என்றார்.அகிம்சா மூர்த்தி.

உடனே,வசூல்ராஜா,தன் பையிலிருந்த பணத்தையெல்லாம் அரை ஆடையிடம் கொடுத்து. இங்கு வருவதற்கு முன் ஒரு நோயாளியை பார்க்கப் போனேன். அங்கு கிடைத்த தொகை முழுவதையும் கொடுத்துவிட்டேன் என்றார்.

வசூல் ராஜாவிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்ட  வல்லவரான அரை ஆடை அந்தப் பணத்தை ” அரிசனன்னு பேரு வைத்த நிதியில் சேர்க்குமாறு கூறினார்.

(ஏற்கனவே,இவர்........வ.உ.சி.யின் பணமானரூ 5000/-த்தை அவரிடம் சேர்க்காமல் காந்தி கணக்கில் சேர்த்து மொங்கா போட்டவர். )

“பெரீய்ய மனிதர்கள் அரீய்ய சாதனைகள்” என்ற நூலிருந்து(தினமணி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...