திங்கள் 09 2013

வர்னாசிரமத்தை எதிர்த்த பெரியாரும், பாதுகாத்த அரைஆடை பக்கிரியும்,

படம். மதிமாறன்.



















நெல்லை மாவட்டம் சேரன் மாதேவியில் “பரத்வாஜர் ஆசிரமம்” என்ற பெயரில் ஒரு குரு குலத்தை நடத்தி வந்தார் வா.வே.சு.அய்யர் என்பவர்.

காங்கிரஸ் கட்சி கொடுக்கும் நிதியில் நடத்தப்பட்ட ஆசிரமத்தில் பிராமனாள் சாதியை சேர்ந்த மாணவர்களுக்கு தனியாகவும், மற்ற சாதியை சேர்ந்தவர்களுக்கு தனியாகவும் வர்னாசிரமத்தின் அடிப்படையில் தனித்தனியாக உணவு பரிமாறப்பட்டு வந்தது.

இதைக் கேள்விப்பட்ட ,அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பெரியார். இந்த அநீதிக்கு எதிராக கடுமையான போராட்டத்தை நடத்தினார்.

பெரியார் நடத்திய போராட்டம் விஸ்வருபம் எடுத்ததை சரி கட்டுவதற்க்காக அரைஆடை பக்கிரியானவர். ஒரு சமரசத் தீர்வை முன் வைத்தார்.

“ஏற்கனவே,அதாவது முன்பே  குரு குலத்தில் சேர்ந்திருந்த மாணவர்களுக்கு தனித்தனியாகவும்,இனிமேல் சேருகின்ற மாணவர்களுக்கு ஒன்றாகவும் உணவு பறிமாறலாம் என்பதே அந்தத் தீர்வு”

அரை ஆடை பக்கிரியின் இந்தத் தீர்வானது. வர்னாசிரமத்தை பாதுகாக்கவே பயன்படும். வர்னாசிரமத்தை ஒழிக்காது  சம தர்மத்தை படைக்காது என்று பெரியார் ஏற்றுக் கொள்ள மறுத்து , அரை ஆடை பக்கிரியின் தீர்வைஎதிர்த்தார்.

இந்தியாவில் வர்னாசிரமத்தை பாதுகாத்தவர்தான் இந்தியாவின் மகா ஆத்மாவாம்.

உள்ளங் கையிலே சீனி என்று எழுதி  வைத்து,அதை நக்கி பார்க்கும்போது இனித்தால் மகாஆத்மா என்று நம்பலாம்.




2 கருத்துகள்:

  1. ///உள்ளங் கையிலே சீனி என்று எழுதி வைத்து,அதை நக்க பார்க்கும்போது இனித்தால் மகாஆத்மா என்று நம்பலாம்.///

    மிகச் சரியாக சொன்னீர்கள் வழிப்போக்கன்

    பதிலளிநீக்கு
  2. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! Avargal Unmaigal

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...