வியாழன் 30 2014

வாய்ச் சொல்லில் ஏமாற்றும் வேட்பாளர்கள்..........

இருபத்தியொரு வயதில்
எனக்கு கிடைத்த
உரிமை என்ற
வோட்டை விலைவாசியை
குறைப்பதாக வாக்களித்த
கட்சிக்கு வாக்கு
அளித்தேன்...........

அடுத்த தேர்தல் வரும்
வரை விலை வாசி
குறையவே இல்லை

இருபத்தியாரு வயதில்
எனக்கு  வழங்கிய
உரிமை என்ற
வோட்டை இலஞ்சத்தை
அடியோடு  ஒழிப்பதாக
வாக்களித்த வேட்பாளர்க்கு
என் வாக்கை  போட்டேன்.

அந்த வேட்பாளர்
திரும்பவும் வாக்கு
கேட்டு   வந்த
பின்னும் இலஞ்சம்
ஒழியவே இல்லை.

முப்பத்தியோரு வயதில்
 மீண்டும் கிடைத்த
உரிமையான வோட்டை
 வேலை வாய்ப்பை
பெருக்குவோம் என்று
முழங்கிய தலைவருக்கு
திரும்பவும் என்
வாக்கை பதிந்தேன.

சீக்கிரமாக வந்த
இத்தினியாவது
தேர்தல் முடிந்து
அடுத்தக் கட்சி
நாற்காலி பதவியில்
அமரும்  வரை
 எனக்கு வேலை
கிடைக்கவே இல்லை.

முப்பத்தியாறு வயதில்
தொடர்ந்து கிடைத்த
உரிமையான என்
வோட்டுக்காக........

ஓட்டு வாங்கும் போது
ஓடி வந்து ஏமாத்தி
உத்தமனைப் போல் வாய்ச்
சொல்லில் பறை சாற்றி

சென்றவர்களின் உதிர்ந்த
மயிரைக் கூட   புடுங்க
முடியாது என் ஓட்டால்
என்று  பட்ட அனுபவத்தால்
உணர்ந்து கொண்டேன.

என்க்கு கிடைத்த
வாக்கு  எனும்
உரிமைச் சீட்டால்
பேண்ட குழந்தையின்
மலத்தைக் கூட
அப்புறப்  படுத்த
முடியா யென்பதை
கண்டுணர்ந்தேன்.........

வரும் தேர்தல் என்ன?
எத்தினியாவுது தேர்தல்
என்று பீத்தீனால் என்ன?
என் வாக்குக்கு அதிகாரம்
கிடைக்கும்  வரை..........
.
எவனுக்கும் எவளுக்கும்
அவர்கள் கொள்ளை அடித்து
சுகபோகமாய்  வாழ
 நான் வாக்களிப்பதில்லை
 என்று..முடிவெடுத்தேன்.

நான் வாககு அளிப்பதும்
வாக்கு அளிக்காமல்
இருப்பதும்....... என்து
உரிமை.........



2 கருத்துகள்:

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...