வியாழன் 20 2014

ஒருசத்தியம் பொங்கச்சோறாச்சு..........

தமிழு அருவி மணியன் என்ற காங்கிரஸ்காரர்.. காங்கிரஸில் கோலோச்சியபோது கல்லா கட்ட வழியில்லாததால்.. நெடு......மாறன் மாதிரி  காங்கிரசில் இருந்து விலகி.......தமிழு.......தமிழன் என்று பழங்கதைகளுடன் பல புதுக்கதைகளை அருவியாய் அவிழ்த்துவிட்டு........ இந்திய கரன்சி நோட்டிலுள்ளவரின் பெயரில் காந்தீய மக்கள்  இயக்கத்தை தொடங்கினார்.

அன்று அந்த இயக்கத்தை தொடங்கியபோது  தமிழில் சொன்னார்.காந்தீய மக்கள் இயக்கம்   தேர்தலில் போட்டியிடாது, பதவி சுகத்தை அனுபவிக்க மாட்டேன் .என்று....சனங்கள் நம்புவதற்க்காக  சத்தியமும் செய்தார்.

 இன்று அந்த சத்தியம் பொங்கச்சோறு என்றாகிவிட்டது

காந்தீய மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டுள்ளது. இந்தக் கட்சியின் கொள்ளை என்னவென்றால். தமிழகத்தை மதுவற்ற மாநிலமாக மாற்றுவது..ஊழலற்ற நிர்வாகத்தை உருவாக்கவது.

இதை செயல்படுத்துவதற்க்காக  2016ல் வரும் சட்டமன்ற தேர்தலில் குதிப்பது தமிழகத்தில் முதல்முறையாக கூட்டணி ஆட்சிஅமைப்பது, கூட்டணி ஆட்சியில் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு அமுல் படுத்துவதற்க்கானதாக இருக்குமாம். இதற்க்காக 18 வகையான நெறிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளதாம்.

அப்போ்.............

சத்தியம் என்னாச்சு..............தமிழுஅருவி மணியன்கிட்ட கேளுங்க.......அது    பொங்கச்சோறாச்சு.........என்ற விபரம் தெரிய வரும்..








1 கருத்து:

  1. அவர்தான் அரசியல்வியாதி ஆயிட்டாரே ,அவரிடம் போய் சத்தியம் என்னாச் சுன்னு கேட்க முடியுமா ?
    இன்னோவாவுக்கு ஆசைப்படலேன்னு ஆறுதல் பட்டுக்க வேண்டியதுதான் !
    த ம 1

    இன்றைய என் ஜாலி பதிவு >>>http://www.jokkaali.in/2014/02/blog-post_22.html
    சைட் அடிக்கவா மனைவி கூப்பிடுவா ?ஆனால் என் சைட்டை பார்க்க நான் அழைக்கிறேன்!

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...