செவ்வாய் 04 2014

மழுங்கடித்துவிட்ட சிந்தனையை, ஆளாளுக்கு சிந்தியுங்கள் என்கிறார்கள்.

 இருக்கிற எல்லா பத்தரிக்கைகளும் சினிமா, தொலைக்காட்சி ஊடகங்களும் அரசியல் கட்சிகளும்,சாதிவெறி கட்சிகளும் தமிழ் நாட்டு மக்களின் மூளையின் சிந்தனையை மழுங்கடித்துவிட்டார்கள். அப்படி மழுங்கடித்துவிட்ட  மூளையை  தேர்தல் வந்தவுடன் ஆளாளுக்கு சிந்திக்க சொல்கிறார்கள் இவர்கள்.

..மழுங்கடிக்கப்பட்டவர்கள் சிந்திக்கதான் முடியுமா??????????????........................

தமிழ்நாட்டில் அதிமுக நடத்துவது ஆட்சி அல்ல. காட்சி, அதற்கு விரைவில் வரப்போகிறது வீழ்ச்சி-அதனால் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்---- ------------திமுக பொருளாளர்


ஏழ்மை,வறுமையை ஒழிப்பதற்கு பதிலாக.தற்போதைய அட்சியாளர்கள் மதுவை கொடுத்து ஏழைகளின் வாழ்வை சீரழித்து விட்டார்கள். பணம் வாங்கிக் கொண்டு வாக்களித்தால் மதுவை ஒழிக்க முடியாது.. பணமா? மானமா?பெண்களே முடிவு செய்ய வேண்டும்----------அனைத்து சாதிவெறி சமுதாய தலைவர்-பாமக..


மதுரை மாவட்த்தில் பெண் வாக்காளர்கள்தான் அதிகம். பெண்களின் பங்களிப்பு இருந்தால் ஜனநாயகத்தை வலுப்படுத்த முடியும். எனவே,பெண்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற,நல்லவர்களை தேர்வு செய்ய சுயமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.------மதுரை மாவட்ட ஆட்சியர்


ஜனநாயக உரிமையை செயல்படத்தாமல் யாரையும் கேள்வி கேட்பதில் அர்த்தம் இல்லை. நண்மை செய்யக்கூடியவர்கள் என்பதை அறிந்து வாக்களிக்க வேண்டும்----------------------மதுரை மாவட்ட காவல் கண்கானிப்பாளர்

தேர்தலில் வாக்களிப்பது அனைவரது அடிப்படை கடமை. வாக்காளர்கள் தவறாமல் நிறைவேற்ற வேண்டும்.அப்போதுதான் இந்திய ஜனநாயகம் வலுப்பெறும். முதல் முறையாக வாக்களிக்கவுள்ள இளம் வாக்காளர்கள் குறுகிய கண்ணோட்டத்தில் வாக்களிக்காமல் நன்கு ஆராய்ந்து வாக்களிக்க வேண்டும்-------------------- குடி அரசு தலைவர்.

2 கருத்துகள்:

  1. சிந்தித்து பார்த்து செய்கையை மாற்று என்று சொல்கிறார்களோ ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. செக்கு மாட்டுகிட்ட செக்குமாடா இருக்காதீங்க மாடா இருங்கன்னு சொல்றதுக்குதான் சிந்திக்க சொல்றாங்க............

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...