வெள்ளி 21 2014

இந்தியாவின் ஆபத்தான ஆறுகள்..ஆறு....???




Cauveri in Trichy.jpg

அனு உலைக்கு எதிராக இந்தியாவின் காந்தி கண்டுபிடித்த அமைதிவழியில போராட்டத்தை நடத்தி அந்த உண்ணாவிரதப் போராட்டத்தால் இந்திய அரசின் கெண்டைக்கால் மயிரைக்கூட அசைக்க முடியாது என்று நிருபித்தவர்கள்.

கடைசியில்  டெல்லியில் 49 நாட்கள் ஆண்டும் எதுவுமே செய்ய முடியாமல்  ராஜினாமா செய்து பெருமை பெற்று ஜனநாயகத்தை தூக்கி  நிறுத்த , எளிய தமிழர்களை இளிச்ச வாயர்களாக ஆக்கும் ஆ...ம்.. ஆத்மீ கட்சியில் இணைத்துக் கொண்ட அனுஉலைக்கு எதிரான போராட்டகுழு

தமிழ்நாட்டில் உள்ள   ஆறு ஆறுகளை ஆபத்தான ஆறுகள்   என    பட்டியலிட்டுள்ளது.

அந்த பட்டியலில் உள்ள இந்தியாவையும் தமிழ்நாட்டையும்  ஏற்கனவே நாசப்படுத்திய  ,இனி படுத்த போகும் ஆறுகள். இவைகள்தான்.

காங்கிரஸ்,பாஜக,அதிமுக,திமுக, வலது கேப்மாரி,இடது கேப்மாரி,  முதலிய கட்சிகள்தான்.

(இவைகளுடன் அந்தந்த கிளை ஆறுகளும்  ஆபத்தான ஆறுகளுடன். சேர்ந்துள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ளவும்)

இந்த எளிய மக்கள் கட்சிதானா !!அம்மாம் பெரிய ஆறுகளை தடுத்து நிறுத்தப்போகுது.......????

 ஆற்றின் போக்கையே தடுத்து நிறுத்த போவதாக சவால் விட்ட எளிய மக்கள் கட்சி டில்லியிலுள்ள ஆறுகளையே தடுத்து நிறுத்த முடியல.............

இது எப்படி தமிழ்நாட்டு ஆறுகளை தடுத்து நிறுத்தப்போவுது. என்னதான்  அனு சக்திக்கு எதிரானவர்கள்  உண்மை அறிக்கை விட்டாலும் ஆற்றில் விழந்த மக்களை கரை சேர்க்கத்தான் முடியுமா??

நூறு பலசாலிகளை ஒல்லியான கதாநாயகன் அடித்து வீழ்த்துவது போல தமிழ் நாட்டிலேயும்   ஒருவாட்டி  பாக்கலாம்.

2 கருத்துகள்:

  1. பழைய ஆறுகள் கூவமாய் மாறிவிட்டன ,இந்த ஆறாவது பொங்கி பிரவாகமாய் வந்தால் நல்லதுதானே ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. இதுவும் கூவமாய் மாறிவிடும் என்பதுதானே பிரச்சினையே!!!

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...