புதன் 09 2014

இரண்டு நாயும் ஒரு மனிதனும்-சிறுகதை



ஒரு மனிதன் உதவி செலுத்துவதற்க்காக இரண்டு நாய்களை வளர்த்தான்.  தான் சாப்பிடும் உணவினை மூன்றாக பிரித்து தனக்கும் இரண்டு நாய்களுக்கும் தனித்தனியாக வைத்தான்.

இரு நாய்களுக்கான உணவினை வைக்கும்போது.ஒரு நாய் தன பங்கான உணவை தின்று கொண்டு இருக்கும்பொழுதே....அடுத்த நாயக்குரிய பங்கில் வாய் வைக்கும். அதன் பங்குக் உரிய நாயை தின்ன விடாமல் தன் கோர பற்களை காட்டி பயங்கரமாக உறுமி மிரட்டும்

அந்த நாயின் உருட்டல் மிரட்டலால் இந்த நாய் பயந்து ஒடுங்கும். நாயின் உறுமல் சத்தத்தைக் கேட்ட மனிதன் ஒரு நாயின் செய்கையை கண்டு அதட்டினான. இதனால் பயந்துபோல் பதுங்கி தன் பங்கை லபக் லபக்கென்று விரைவாக தின்று முடித்து அடுத்ததில் வாய் வைக்கும்.

இப்படியாக மனிதன்  ஒவ்வொரு தடவையும்  நாய்களுக்கு உணவு வைக்கும்போது ஒரு நாய் மிரட்டுவதும் ஒரு நாய் ஒதுங்குவதுமாய் நடந்து வந்தது.

சில நேரங்களில் உணவை பறிகொடுத்த நாய்க்கு தன்னுடைய உணவினை கொடுப்பான்

தன் பங்குக்குரிய உணவினை பறித்தெடுக்கும் நாயை எதிர்க்க துணிவின்றி அடங்கி ஒடுங்கி விடுவதால், பறித்தெடுக்கும் நாயே வலுத்தும் கொழுத்தும் மனிதனுக்கும் மற்றவர்களுக்கும் பயத்தை ஏற்ப்படுத்தியது.

இந்த இரு நாய்களின் குணத்தைப் போலவே.......மனிதர்களிலும் நாய் குணத்தை பெற்ற மனிதர்களும் இருக்கிறார்கள்.

வழுத்தவன் வாழ்கிறான். இளைத்தவன் சாகிறான்

இளைத்த நாய்கள் ஒன்று சேர்ந்தால்.....................

ப்பூ...   சிந்திக்கதெரிந்த  மனிதர்களே!!! ஒன்று சேர்வதில்லை.
இந்நிலையில் நாயாவது ஒன்று சேர்வதாவது.............

2 கருத்துகள்:

  1. மனதைத் தளர விடாதீர்கள் ...நாய்கள் கூட ஒன்று சேர்ந்து விடும் !
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. தாங்கள் சொல்வதைப்பார்த்தால் நாயை விட கேவலமானவன் மனிதன் என்பதாக தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு

“மார்ச் 8 உலக மகளிர் தினம்-”

                                                              கிளாரா ஜெட்கின். உண்மையான ஜனநாயகம், சமத்துவம் நோக்கி மனிதகுலத்தை முன்னெடுத்துச...