வெள்ளி 25 2014

கில்லாடிக்கு கில்லாடிகள்





மதுரை மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரனை கைதிகள் என 1300க்கு மேற்பட்டவர்கள் ஆட்டு கிடை போல் அடைக்கப் பட்டுள்ளனர்.

இந்த ஆட்டுக்கிடையில் அடைக்கப்பட்ட கைதிகளை பார்க்க உற்றார் உறவினர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.

அப்படி அனுமதிக்கப்பட்ட உற்றார் உறவினர்கள் பார்க்க வரும்போது.,கைதிகளுக்கு வெளியிலிருந்து கஞ்சா போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் கொடுக்கப்படுவதாக செய்தி ஏடுகளில் செய்திகள் வந்தன.

இதனை தடுக்கும் பொருட்டு, உற்றார்,உறவினர்களை சிறை போலீசு,கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, பின்னரே, கைதிகளை பார்க்க அனுமதிப்பார்கள்.

ஏற்கனவே, விசாரனை கைதிகளை அழைத்து வந்து வரிசையாக நிறுத்தப்பட்டு பார்க்கப்படும் இடங்களில் விரல்  என்ன ,அதாவது குண்டூசி கூட நுழையமுடியாதபடிக்கு கம்பி தடுப்பும்,பத்தாதிற்கு கண்ணாடி தடுப்பும் போடப்பட்ட அதி பயங்கரமான தடைகள் ஏற்ப்படுத்தப்பட்டு இருக்கும்.

இப்படியான,பாதுகாப்பும், தடையும் உள்ளேயும், வெளியிலிருந்து கஞ்சா பொருட்களை வீசும் நபர்களை பிடிக்க 24 மணி நேர பாதுகாப்பும் போடப்பட்டும் இவற்றையும் மீறி சில கில்லாடிகள் தங்களது கில்லாடி தனத்தை காட்டி வருகிறார்கள்.

அப்படி ஒரு கில்லாடியான ஒருவர். சிறையில் உள்ள தன் நண்பரை பார்க்க வந்தபோது, டூத் பேஸ்ட்க்குள் கஞ்சாவை மறைத்து கொண்டு வந்ததை கில்லாடிக்கு கில்லாடியானவர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள்.

டூத்பேஸ்ட்டுக்குள் மறைத்து வைத்துக் கொண்டு வந்த கஞ்சாவையும் உள்ளாடைக்குள் மறைத்து வைத்துக் கொண்டு வந்த கஞ்சாவையும் இந்தக் கில்லாடிகள் கண்டுபிடித்துவிட்டனர்.

கண்டுபிடித்த கஞ்சா இத்தனைக் கிராம் என்று தாரசு வைத்து நிறுத்தியோ அல்லது தங்களது அனுபவத்தில் பழக்கபட்டதால்  துல்லியமாக சொல்கிறார்கள்.

டூத்பேஸட்க்குள்ள கஞ்சா 5 கிராம், உள்ளாடைக்குள் மறைத்து  வைத்த கஞ்சா
15 கிராம் என்று, கஞ்சாவை கொண்டு வந்த கில்லாடியே வியக்கும் வண்ணம் கில்லாடிக்கு கில்லாடிகள் தெரிவிக்கிறார்கள்.

கெட்டதுகளை துல்லியமாக கண்டுபிடிக்கும். கில்லாடிக்கு கில்லாடிகள். நல்லதுகளை கண்டுபிடித்து நல்லதுகளை நிலைநிறுத்துவதற்கு  இவ்வளவு மெனக்கெடுவார்களா???

4 கருத்துகள்:


  1. இதில் மெனக்கெடும்போது உடன் பலன் கிடைத்து விடுமே,,,

    பதிலளிநீக்கு
  2. நல்லதுக்கு நல்லது கண்டுபிடித்தால் துட்டு கிடைக்கும்னா செய்வார்கள் !
    த ம 1

    பதிலளிநீக்கு
  3. மெனக்கெடுவது இல்லையே என்பதுதான் பிரச்சினையே கில்லர்.

    பதிலளிநீக்கு
  4. இருக்கிறவர்கள் கொடுத்துவிடுவார்கள் இல்லாதவர்கள்....

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...