திங்கள் 14 2014

காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் தூக்கிட்டு போன கதை


படம்.vayalaan.blogspot.com
காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் தூக்கிட்டு போன கதை  உங்களுக்கு தெரியுமா?  அந்தக் கதை இதுதான் படியுங்கள்.

சாதி பெருமை பேசிய நடிகன், நடிக்காத வேடமே இல்லை என்று பில்டப் செய்வார்கள் அவரின் ரசிக குஞ்சுமணிகள்.

மன்றாடியர் வி.சி.கணேசன் என்ற நடிகர். “கை கொடுக்கும் கை” என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் பாரதி யார் வேடமிட்டு நடித்திருந்தார்.

அதற்கு முன்பே, இவருக்கு பாரதி வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற தீராத வெறி..

பாரதி கதையை யாராவது கொண்டு வந்து கொடுத்தால் உடனே.கால்ஷீட் கொடுத்து நடிக்க தயாராக இருந்தார்.

ஒரு பாடலில் பாரதி யாராக நடித்த படத்தை பார்த்தவர்கள், அச்ச அசலாக பாரதி மாதிரியே இருக்கிறீர்கள் என்று நடிகரை ஏற்றிவிட, சாதி பெருமை பேசிய நடிகரோ.. பாரதி நடிப்புக்காக ஏங்கிக் கொண்டு காத்து  கிடந்தார்.

இதற்கிடையில் சாதிக் குலப் பெருமையை நிலை நாட்டிய சாதிக் குலகொழுந்தான ,ஆஸ்கர் நாய்கனும்.பாரதியாக நடிக்க வேண்டும் என்று ஆசையை வளர்த்துக் கொண்டு ஏங்கிக் கொண்டு காத்து கிடந்தார்.

பாரதியாக தான் நடிக்க விரும்பவதாக சாதி குலக்கொழுந்து சொன்னபோது சாதி பெருமை பேசிய நடிகர்,சாதிக் குலக் கொழுந்தை கட்டி அணைத்து உச்சி மோர்ந்து வாழ்த்து சொன்னது.

ஆக. இந்த ரெண்டும் பாரதியாக நடிக்க  காத்து கொண்டு இருந்தது.

2000ம் ஆண்டில் பாரதி கதையை பாரதி பெயரில் படமெடுக்க போவதாக அறிவிப்பு  வந்த நிலையில்....

காத்து கிடந்த ரெண்டு இதுகளுமே எதிர் பார்க்காத அளவுக்கு.மார்வாடி சேட்டு மாதிரி இருந்த  சயாஜி என்ற  வில்லன் நடிகருக்கு சேர்ந்தது பாரதியாக நடிப்பதற்கு...........

இப்போது தலைப்பை படித்து பாருங்கள். உங்களுக்கு புரியும். “காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் தூக்கிட்டு போன கதை..”

நன்றி! ...பிலிம் நியூஸ் ஆனந்தன்.

படம்..www.vinavu.com


2 கருத்துகள்:


  1. சினிமா ''கசா''நாயகர்களை தலையில் தூக்கி கூத்தாடும் இன்றைய சமூகத்தில் என்னைப்போல் தாங்களும் மாறுபட்டது கண்டு மகிழ்ச்சியே நண்பரே....
    தங்களின் மெயில் ப்ளீஸ்
    sivappukanneer@gmail.com

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...