வியாழன் 21 2014

சாதியாய் பிரிந்து ... சாதிவெறியால் இணைந்த சாதிவெறித் தமிழர்கள்..!!

படம்-www.vinavu.com

புலியை முறத்தால்
விரட்டி அடித்தாள்
வீரத் தமிழச்சி.....

குற்றமிழைத்தவன் தன்
மகன் என்றும் பாராமல்
தேர்க்காலில் ஏற்றிக்
கொண்றார் மனு நீதி சோழன்...

போரில் புறமுதுகில்
வேல்வாங்கி வந்தான்
மகன் என்று அவனுக்கு
பாலூட்டிய முலைகளை
அறுத்து எறிந்தாள்...
மாணமிகு தமித்தாய்........

கனக விசயனின் தலையில்
கல் சுமந்து வந்து
 கண்ணகிக்கு சிலை
வடித்தான் சேரன் செங்குட்டுவன்...

இமயத்தில் மீன் கொடி 
ஏற்றி பாரில் தமிழ்
பெருமையை பறை
சாற்றினான் பாண்டியன்..

தமிழனின் தமிழச்சியின்
விரத்தையும்,மானத்தையும்
நீதி தவறாத பண்பையும்
மேடைதோறும்,அரங்குதோறும்
முழங்கி வந்த சாதியத் தமிழர்கள்

தனியார்மயம்,தாரளாமயம்,
உலகமயத்தால் வந்த வாழ்வையும்
அடக்கு முறையின் விதியையும்
கண்டு தப்பிக்கிறார்கள்.......

சாதியாய் பிரிந்து சாதி 
வெறியால் இணைந்த
சாதிவெறித்தமிழர்கள்.


4 கருத்துகள்:


  1. சவுக்கடி வாக்கியங்கள் நண்பா,,,
    சாதீ பிடித்து கருகட்டும்.

    பதிலளிநீக்கு
  2. இந்த சாதி வெறியர்கள் பெரியார் மண்ணில் என்றுமே ஜெயிக்க முடியாது !
    த ம 1

    பதிலளிநீக்கு
  3. என்னதான் சவுக்கடி கொடுத்தாலும் சாதி வெறி ஒழிய மாட்டுதே நண்பா...

    பதிலளிநீக்கு
  4. அதே பெரியார் மண்ணில்தான் இப்படிபட்ட சாதி வெறியர்களும் கை கோர்த்து வலம் வருகிறார்கள்.

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...