திங்கள் 01 2014

பாட்டாளி வர்க்க அதிபரிடம் வாழ்த்துக்கள் பெற்ற இந்திய ஆசிரியர்..

stalin
படம்--https://vrinternationalists.wordpress.com/

உலகத்தில் மிகவும் கொடுரமானவர் என்று கொடூரமானவர்களால்  மோசமாக புழுதிவாரி துாற்றப்படும்   தோழர்  ஸ்டாலின் அவர்கள்  சோவியத்தின் பாட்டாளி வர்க்க அரசின் அதிபராக  இருந்த பொழுது

1950 ஆண்டு வாக்கில்   பாட்டாளி வர்க்க நாட்டில்  இந்தியத் தூதராக ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டார்.

மரியாதை நிமித்தமாக  சந்திப்பின் போது இந்தியத் தூதுருக்கும்  பாட்டாளி வர்க்க அரசின் அதிபருக்கும் ஒரு உரையாடல் நடந்தது. அந்த உரையாடலின் போது.. இந்தியத் தூதர்...

எங்கள் நாட்டில் ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னால். இருந்த ஒரு அரசர் போர் புரிந்த போது,  போர்களத்தில்  சிதறிக் கிடந்த மனித உடல்களையும், பெருக்கெடுத்து ஓடிய இரத்த ஆறுகளையும் கண்டு , அதிர்ச்சி அடைந்து, பதறி, மனம் வருந்தினார்.

அதன் பயனாக, அந்தச் சம்பவத்திற்குப்பின் இனி, போரே.. வேண்டாம் என்று முடிவுக்கு வந்தார்.

அதே போன்று, தாங்களும் போரின் மூலம் ஏற்ப்பட்ட இழப்புகளை கண்டு, அவரைப்போல மாற வேண்டும் என்றார்.

அதைக் கேட்ட பாட்டாளி வர்க்கத்தின் அதிபர் , சிரித்துக் கொண்டே பதில் ஏதும் சொல்லாமல்  இருந்தார்.

இந்த உரையாடலுக்கு பிறகு, இந்தியத் தூதராக பணியாற்றிய ஆசிரியரின் பதவிக்காலம் முடிந்து இந்தியா திரும்பும் போது, அப்போதும் மரியாதை நிமித்தமாக விடைபெறுவதற்க்காக சந்தித்த போது...

பாட்டாளி வர்க்கத்து அதிபர் தோழர் ஸ்டாலின் அவர்கள். அந்த ஆசிரியரின் முதுகைத் தட்டிக் கொடுத்து சொன்னார்.

என்னை கொடூரமானவராக பார்க்காமல், மனிதராக பார்த்த முதல் நபர் நீங்கள்தான்...“ நீங்கள் நீடுழி வாழ ஆசைப் படுகின்றேன். என்று வாழ்த்தினார்.

2 கருத்துகள்:

  1. கொடூரன் கடைசிவரை திருந்தவே இல்லை .இவ்வளவு தைரியமாக சொன்னவர் யார் ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. அவர் கொடூரமானவராக பழிக்கப்பட்டவர். சொன்னவர்க்குதான் செப்டம்பர்5 அவருக்குத்தான்.

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...