புதன் 03 2014

வல்லரசாகும் இந்தியாவில் இது எந்த வகையான உறவுமுறை..

படம-www.nhm.in


ஒருவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை பொறந்தது. அந்தக் குழந்தை நடக்கும் காலத்தில் குழந்தை தனக்கு பிறக்க வில்லை என்று. கணவர் மனைவியை சந்தேகப்பட்டு  இம்சை செய்ய,. இம்சை பொறுக்க முடியாத மனைவியானவர். குழந்தையை  அந்த இம்சை காரனிடமே விட்டுவிட்டு, இன்னொருத்தியின் கணவருடன் எஸ்கேப் ஆகவிட்டார்.  

மூன்று பெண் குழந்தைக்கு தந்தையான் ஒருவர்,திடிரென்று அகால மரணமடைந்துவிட, மூன்று குழந்தைக்கு தாயான் பெண், வேறு ஒரு நபரின் துணையுடன் மூன்று குழந்தைகளுடன் கிராமத்தைவிட்டு,நகரத்துக்கு குடியேறி,கட்டுமானத் தொழிலில் சித்தாளாக வேலை பார்த்து வர..

 அந்தத் தொழிலின் போது தன்னைவிட.இளவயது கொத்தானரை  சேர்த்துக் கொண்டு குடும்பம் நடத்திக் கொண்டு வரும்பொழுது, இளவயது கொத்தனார்க்கு அவரது வீட்டார் ஒரு பென்ணைப்பார்த்து திருமணத்தை முடித்துவிட்டதால், இள வயது கொத்தனரால் சித்தாள் கைகழுவி விட.ப்பட்டார்.....


ஓடிப்போன மனைவிக்கு பிறந்த குழந்தையை மனைவியின் வீட்டாரிடம் ஒப்படைத்துவிட்டு , கட்டுமானத் தொழிலில்  சென்ட்ரிங் பலகை  அடைக்கும் தொழில் செய்து வருகையில்...ஒரு சில மாதங்களில்  வேலைக்கு சென்ற இடத்தில் வாழா வெட்டியாய் இருந்த ஒரு பெண்ணை கூட்டி வந்து வாழ்ந்தபோது  அந்தப் பொண்ணுக்கு பிள்ளையே பிறக்கவில்லை...இது இப்படி இருக்க...

இளவயது கொத்தனாரால் கைவிடப்பட்ட சித்தாளும் பிள்ளை ஏக்கத்தில் இருந்த சென்ட்ரிங் தொழிலாளியும் ஒரே இடத்தில் வேலை பார்த்த முதல் நாளில்  முதல் பார்வையிலே இருவரும் காதல் கொண்டு கனவன் மனைவியாக   தனியாக ஒரு வீட்டில்  சேர்ந்து வாழ்ந்தனர்.

இப்படியாக, இருவரும் சேர்ந்து வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கு இரண்டு ஆண், ஒரு பெண் குழந்தை பிறந்தது.

சித்தாளின் முன்னாள் இறந்துவிட்ட கணவருக்கு பிறந்த மூன்று பெண் குழந்தைகளில் மூத்தப் பெண்ணை, பெரிய அரசியல் பிரமுகர் வீட்டில், வீட்டு வேலை செய்வதற்கும் அவர்களே ! வளர்த்து திருமணம் முடித்து விடுவதாக பேசிய பேச்சில் சிறிது பணத்தைப் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு தத்து கொடுத்துவிட.............

இரண்டாவது பெண்னோ... சித்தாள் வேலை பார்த்தபோது ஏற்கனவே, திருமணம் முடித்து இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான கொத்தனாரை கட்டிக்கொள்ள....

மூன்றாவதாக உள்ள பெண்ணோ , தாயாருடன் சித்தாள் வேலை பார்த்து வரும் சித்தாள் மூலம் தாய் தந்தை இல்லாத ஒரு பையனுக்கு கழுத்தை நீட்டிவிட..

இந்நிலையில் செண்டரிங் தொழிலாளி, தனக்கு பிறந்தது .முதலாவதாக பிறந்த ஆண் மட்டும்தான் மற்ற இரண்டும் தனக்கு பிறக்கவில்லை அது  பில்டிங் கான்ட்ராக்ட்காரனுக்கு பிறந்தது என்று சித்தாள் பெண்ணுடன் சண்டையிட...............

அந்தச் சண்டையை சென்ட்ரிங் தொழிலாளியின்  சொந்த மச்சான் விலக்கி விடுவதற்க்காக அவ்வப்போது வந்து போகும் நிலையில், மனைவியான சித்தாள்  பெ்ண், அவரின் மச்சானை அண்ணா....அண்ணா என்று மூச்சுக்கு முன்னூறு தடவை கூப்பிட்டு பழக..... அதே போல் எல்லாப் பிள்ளைகளும் மாமா....மாமா.....மாமா..... என்று கூப்பிட்டு குடியருக்கும் தெருவுக்கே “டமாரம்” அடித்து தெரிவிக்க்க..................

ஊடல் புரிவதும், ஊடல் முடிந்தவுடன் கூடுவதும், கூடி முடித்தப் பின் சண்டையிடுவதுமாக சென்று கொண்டு இருந்த காலத்தில்  ஒருநாள்.

அதிகமான டாஸ்மாக் போதையில் சென்ட்ரிங்தொழிலாளியும் சித்தாளின் தற்போதைய கனவனுமானவன் உயிர் துறந்தான். அவன் செத்த பின்.,பிள்ளை இல்லாதவள் சென்ட்ரிங் தொழிலாளியின் சகலையுடன் எஸ்கேப் ஆகிவிட்டாள்.

அவன் இறந்து மூன்று நான்கு மாதங்கள் கழித்து, அடிக்கடி வந்து போய்க் கொண்டுருந்த செத்தவனின் மச்சான்காரன்.., அதாவது செத்தவனின்  மனைவியான சித்தாளால் அண்ணா..அண்ணா என்று அழைக்கப் பட்டவர் சித்தாளின் அத்தானாக மாறிவிட்டார். மாமா..என்று கூப்பிட்ட அத்தனை பிள்ளைகளும் பிளேட்டை மாற்றி போட்டு “ அப்பா” என்று அழைக்கத் துவங்கிவிட்டன.

இவர்கள் இருவரும் உறவு கொண்டு இருப்பதை நேரில் கண்ட செத்தவனுக்கு பிறந்த மூத்த மகன் ..  தெருவே ரணகளமாகச் சவுண்டுவிட்டு சண்டையிட்டுப் பார்த்தும் அவர்கள் இருவரும் சேர்ந்து இருப்பதை அவனால் தடுக்க முடியவில்லை. 

வெறுத்துப் போனா அவன், பந்தல் தொழிலுக்காக சென்ற இடத்தில்,  தான் காதலித்த ,தந்தையின் சாதியைச் சேர்ந்த ஒரு பென்னை  திருமணம் முடித்துவிட்டு அந்தத் தெருவிலே இல்லாமல் வேறு தெருவுக்கு குடிபோகிவிட்டான்.

அண்ணாவாக இருந்து அத்தானாக மாறிவிட்டவருக்கு தனியாக குடும்பம் குட்டி எதுவும் இல்லை போலிருக்கிறது. மைத்துனனின் மனைவியை தன் மனைவியாக மாற்றிக் கொண்டார். மாமாவாக இருந்தவர் அப்பாவாக மாறி அந்தக் குடும்பத்தோடு ஒன்றிவிட்டார். இந்த மாதிரியான நிகழ்வுகள்.

 வல்லரசாகும் இந்தியாவில் இது எந்த வகையான் உறவு முறை..???????????

7 கருத்துகள்:


  1. எனக்கு நாக்கில் சூடுபட்டு பேசமுடியாத காரணத்தால் இந்த குழறுபடிக்கு தீர்ப்பு எமது இனிய நண்பர் பகவான்ஜி அவர்கள் வழங்குவார்கள் என்பதை அறிவிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. எல்லா அசிங்கங்களும் சேர்ந்தாதானே வல்லரசு ஆக முடியும் ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  3. கைக்கும் ,வாய்க்கும் சம்பந்தம் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன். நணப்ரே!

    பதிலளிநீக்கு
  4. அடடா,இப்பேடியோரு பாடத்திட்டம் இருக்கிறதா...வல்லரசாவதற்கு....!!

    பதிலளிநீக்கு
  5. நன்றாக அலசி உள்ளீர்கள்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  6. விசு பட வசன மாதிரியா போய்கிட்டே இருக்கு... முடியலையா??... உடனே முடிச்சுறேன் சார்.

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...