வியாழன் 18 2014

விஞ்ஞானத்தை பயன்படுத்தி அஞ்ஞானத்தை பரப்பும் தொலைக்காட்சிகள்.

vidhai2virutcham.com



சன் தொலைக்காட்சியில் செய்தியின் ஊடே “கொல்லிமலை இரகசியங்கள்” என்ற பெயரில் கடந்த மூன்று நாட்களாக  செத்துப்போன சித்தர்களின் வாரிசுகள் என்று குட்டி சித்தர்களின் அஞ்ஞானத்தை பரப்புரை செய்து வருகிறது.

அதில் காட்டப்படுவதெல்லாம் மூலிகைகள் தவிர மற்றவைகள் எல்லாம் மூட நம்பிக்கைகளே... வசூல் ராஜாக்கள் எம்பிபிஎஸ்கள் குணப்படுத்தும் மற்றும் குணப்படுத்த முடியாத வியாதிகளையெல்லாம் இதில் செலவு இல்லாமல்  குட்டிசித்தர்கள் குணப்படுத்தவதாக காட்சி படுத்தி பரப்புரை செய்கிறது.

அதில் தகரத்தை தங்கமாக மாற்றுவதாக சொல்வதும், குட்டிச்சித்தர் ஒருவர் எலும்பிச்சை பழத்தை செல்பேசியாக பயன்படுத்வுதையும்  அந்த எலும்பிச்சை செல்பேசியை பயன்படுத்தியே பக்தர்களின் நோயை குணப்படுத்தியாக குட்டிசித்தரின் பேட்டியையும் பரபரப்புரை செய்கிறது. இது மாதிரி  பல வகைகள்.

இந்த தொலைக்காட்சி மட்டுமல்ல...எல்லா  தொலைக்காட்சிகளுமே அதனதன் ரேஞ்சுக்கு விஞ்ஞானத்தை பயன்படுத்தி அஞ்ஞானத்தையே பரப்புகின்றன. பரப்பி வருகின்றன......


4 கருத்துகள்:

  1. நம்ம விஞ்ஞானிங்க pslv ராக்கெட் மாதிரியை கோவிலில் பூஜை செய்பவர்கள் ஆயிற்றே !நம்
    tv சேனலும் அதே பாணியில் தானே போகும் ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...