செவ்வாய் 28 2014

“பாரத ரத்னா” படும்பாடு......

யார் இந்த சு.சாமி – பொறுப்பே இல்லாதவர்க்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது - பொன் ராதாகிருஸ்ணன்:-
உலக தமிழ்ச் செய்திகள்

அங்க என்னப்பா .......ரெண்டு பேரு சண்டை போட்டுகிட்டு இருக்காங்க..

அது  சண்டை இல்லாப்பா........ விவாதம் பன்னிகிட்டு இருக்காங்க....

.அட இப்படியெல்லாம் குடி(கார) மக்கள் விவாதம் செய்யுறாங்களா...?

அத ஏன்? கேக்கறீங்க........ நீண்ட நேரமாக நடந்துகிட்டு இருக்கு..இன்னும் முடிவுதான் ஏற்ப்படல.......

எதப்பத்தின விவாதம்முன்னு தெரியுமா....?

“பாரத ரத்னா” விருதுன்னு ஒன்னு இருக்காமே..அத யாருக்கு கொடுக்கிறதுன்னு........

அதத்தான்..சுனா சாமி என்பவரு...ராஜபட்சேவ்வுக்கு கொடுத்திடலாமுன்னு மோசடிகிட்டே சொல்லி முடிவு பன்னியாச்சே.......

அதுலதான் குடி(கார) மக்களுக்கு விவாதமே நடக்குது... ஒருத்தரு...ராஜபட்சேவுக்கு கொடுப்பதற்கு முன் மொழிந்த சுனா. சாமிக்கு மொதல்ல கொடுத்த பிறகுதான் ராஜபட்சேவுக்கு கொடுக்கனும் என்றார் 

இன்னொருத்தர் ராஜபட்சேவுக்கு கொடுத்துட்டுதான் சுனா.சாமிக்கு கொடுக்கனுமுன்னு என்றார்.அவன் விடாக்கண்டன் என்றால்..இவன் கொடாக்கண்டன் என்கிறான்...........

அடப் பாவமே.....இதுக்கா ரெண்டு பேரும் இம்புட்டு நேரமா......விவதாம் பன்னிகிட்டு.,ஏப்பா.அது என்ன அவிங்க அப்பன் வுீட்டு சொத்தா.?.அந்த பாரத ரத்னா..எப்படியப்பா இருக்கும்

அது  மெடல்மாதி இருக்குமப்பா..............

அத ஒடச்சு ரெண்டு பேருக்கும் பாதி பாதியாக கொடுத்தா..
விவாதம் முடிஞ்சு போயிரும்ல...... என்னப்பா...நாஞ் சொல்ற அய்டியா எப்படி?

சூப்பருப்பா..............இதுகூட தெரியாம....... அவிங்க விவாதம் பன்னிகிட்டு இருக்காங்கே......முட்டாப்பசங்க....................


8 கருத்துகள்:

  1. சுனா மோனாக்களின் ஆட்சியில் சாதாரணக் குடிமக்களின் கருத்தையெல்லாம் கருத்தையெல்லாம் பற்றிக் கவலைப் படவா போகிறார்கள் இந்தப் பெருங்“குடி“மகன்கள்!!
    பாரதரத்னா ஒபாமாவின் நாய்க்குக் கூட இனி கொடுக்கப்படலாம்.
    நல்ல பகிர்வு அய்யா!
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. ஓ..பாமாவின் நாய்.. இன்டியன் பாரத ரத்னாவையெல்லாம் மோந்துகூட பாக்காதுங்க..திரு.ஊமைக்கனவுகள் அவர்களே!

    பதிலளிநீக்கு
  3. பாதிரத்னா விருது ரெண்டு பேருக்கும் ரொம்ப பொருத்தம் !
    த ம 1

    பதிலளிநீக்கு

  4. சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  5. குடிகார மக்களின் முடிவு இதுதான்
    பாரத ரத்னா ராஜ பக்-ஷேவுக்கு
    சிங்கள ரத்னா(புது அறிமுக விருது) சுப்ரமணிய சாமிக்கு
    போதும்பா போதும்! இப்ப நாங்க தெளிவாயிட்டும் இல்லே!
    ரெண்டு பேரும் அவுங்க அவுங்க விருதை கொடுத்துங்கின்னா
    நாங்க அதை வித்து அடுத்த ரவுண்டுக்கு ரெடி ஆயிடுவோம் இல்ல!
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ! திரு. யாழ்பாவணன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  7. குடிகார தேசமும் கொலைகார தேசமும் தங்கள் வேலையை மாற்றி அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகி விட்டார்கள் திரு.யாதவன் நம்பி அவர்களே!!

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...