புதன் 26 2014

அந்த முன்னுரைக்கு இதுதான் கதை....


முன் கதையை படிக்க----அந்த கதைக்கு இதுதான் முன்னுரை

பேக்கரி தொழிலகத்தில்  பல பெண்களுடன்  வேலை செய்துவருபவர் ரமா . அதே தொழிலகத்தில் சில ஆண்கள் எண்ணிக்கையில் வேலை செய்து வருபவர் சந்திரன்.

எப்போதும் போலவே.. தயாரான பேக்கரி அயிட்டங்களை வேன் வண்டியில் ஏற்றிக் கொண்டு இருந்தார்கள். சில பெண்கள் பேக்கரி  வகைகளை சுமந்து வந்து வேனுக்கு உள்ளே இருந்த ரமாவிடம் கொடுக்க.. சந்திரன் ரமாவிடம் இருந்து பேக்கரி வகைகளை வாங்கி பாதுகாப்பாக வரிசையாக அடுக்கி கொண்டு இருந்தான்.

இப்படி ஒவ்வொரு தடவையும் பேக்கரி பொருட்களை வாங்கும்போது ரமா வின் கை சந்திரன் கையில் படுவதும், சந்திரன் கை ரமாவின் கையில் படுவதுமாய் இருக்கும். இதற்கு முன் ரமா இருந்த இடத்தில் சீதாத்தான் இருந்தாள். சீதாவுக்கும்  சந்திரனுக்கும் பிரச்சனை ஏற்பட்டு.சீதா பாதிப்படைந்து விட்டதால் சீதா வேலையிலிருந்து நின்று விட்டாள். சீதாவுக்கு பதிலாக சீதாவின் தோழி ரமா இந்த இடத்தில்....

சந்திரனுக்கு திருமணம் முடிந்து ஒரு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ரமாவுக்கு இன்னும் ஆகவில்லை.சாதி வழக்கப்படி பெண் கேட்டு வந்த ஒன்றிரண்டு பேர்கள்  சீர்செட்டு மற்றும் வரதட்சனைகள் கூடுதலாகக் கேட்டதால்.. தடை பட்டுக்கொண்டு வந்துள்ளது.

ரமா பார்ப்பதற்கு மற்ற பெண்களைப்போல அழகாக இருந்தாலும். ரமாவின் உடல் வளர்ச்சி..மற்றவர்களை ஏறேடுத்து பார்க்க வைத்துள்ளது. ரமா வேலை செய்யும் இடத்தில் உள்ள ஆண்களை ரமாவுக்கு பிடிக்கவில்லை.. இருந்தாலும் வேலை செய்யும் இடத்தில் நடக்கும் கிண்டல்,கேலி,ரெட்டை வசனங்கள் இருந்தாலும் அவைகளை ரமாவால் ஒதுக்கி விட முடியவில்லை....

 வேலையின் போது மற்றவர்களை விட சந்திரன் ரமாவிடம் ரெம்பவும் கேலி .கிண்டல், செய்வான்..  சந்திரனும் ரமாவும் உறவுறுக்காரர்களாக இல்லாவிட்டாலும் ஒரே சாதி என்ற அடிப்படையில் இரு வீட்டார்களும் ஒறவுக்காரகாளக இருந்து வந்துள்ளனர். ரமா வீட்டுக்கச் சற்று தள்ளியுள்ள காம்பவுண்டில் உள்ள ஒரு வீட்டில்தான் தன் மனைவியுடன் வசித்து வருகிறான்..

வேலையின் போது கைகளை பிடிப்பது, போகும்போதும், வரும்போது உரசிக் கொள்வது. அப்புறம் முட்டிக் கொள்வது பிறகு அதற்க்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வது இதெல்லாம் நடந்து கொண்டு இருந்தது.  இதற்கெல்லாம் ரமாவும் தடை சொல்லாமலும் எதிர்த்து கேள்வி கேட்காமலும் இருந்து வந்தாள் .

இப்படியாக எந்த எதிர்ப்பும், முனு முனுப்பும் காட்டாததால் சந்திரனுக்கு ரமா மீது ரெம்ப ஆசை வந்து விட்டது. தீபாவளிக்கு சிறிது நாளுக்கு முன்பே போனஸ் போடப்பட்டது. எல்லோரும் போனஸ் வாங்க வரிசையில் நின்றபோது  . ரமாவை தன்னை பார்த்துவிட்டு செல்லுமாறு கூறினான் சந்திரன்.

முதலாளி வேறு ஒரு வேலையாக சந்திரனை வெளியே அனுப்பிய போது, அவன் வரும்வரை காத்திருந்து அவனை பார்த்துவிட்டு வந்தாள் ரமா... அவனை பார்த்த போது , விலை உயர்ந்த சேலை ஒன்றினை பரிசாக அளித்தான்.

ரமா  அதை வாங்க மறுத்தபோது. சின்னஞ்சிறு கதைகளச் சொன்னான். ரமாவை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையின் முன் தான் வாங்கிக் கொடுத்த சேலையை கட்டிக் கொண்டு நின்றால்...மாப்பிள்ளை மயங்கி உன்னைக் கட்டிக் கொள்வான் என்றான்.

பிறகு என்ன நினைத்தாளோ... அவன் பேச்சில் மயங்கியவளாக சேலையை பெற்றுக் கொண்டாள்..

 இதற்கிடையில் ஒரு நாள்  தொழிலகத்தின் சாப்பாட்டு இடைவேளையின் போது சந்திரன் ரமாவிடம் ,“ நாம இருவரும் அப்பா- அம்மா விளையாட்டு விளையாடலாமா...? என்று கேட்டான்.

அப்பா-- அம்மா வியைாட்டா.... என்று அதைப்பற்றி தெரியாதவள் போல கேட்டாள்.

ஒனக்கு தெரியலையா.... நான் சொல்லித் தருகிறேன் என்றபோது... ஓஃஓ. அந்த விளையாட்டா... எனக்குத் தெரியுமே...? எங்கம்மா..எங்கப்பாவ பின்னி எடுத்துடுவாங்க..... அப்போ ..எங்கப்பா அழுகிறத  பாத்தா..பாவமா..இருக்கும் என்றாள்.

அவன் “ எங்க வீட்டுல எங்கப்பாதான் - எங்கம்மாவ  வெளுத்து வாங்கவார்.

அவன் மேற்கொண்டு பேசும்போது உடன் வேலை செய்யும் சரசக்கா வந்ததால்  சந்திரன் அவ்விடத்தைவிட்டு நகர்ந்தான்.

அவன் சென்றதை கவனித்துவிட்டு. சரசக்கா..ரமாவிடம்  சந்திரன் சென்ற திக்கை பார்த்தபடி கிசு கிசு த்தாள்.  சரசக்கா சொல்வதைக் கேட்டு ரமா பல்லை கடித்துக் கொண்டாள்.

 தீபாவளியும் வந்து போனது.. தீபாவளிக்காக கூடுதலாக மூன்று நாட்கள் பேக்கரி தொழிலகம் விடுமுறை விடப்பட்டு இருந்தது.   தீபாவளியிலிருந்து ரமாவிடம் விளையாடுவதற்குக்கான  தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு  ரமா மட்டும் வீட்டில் தனியாக இருப்பது  தெரிந்தது. அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வதற்க்காக ரமா வீட்டிற்குச் சென்றான் சந்திரன்.

 வீட்டிற்குள்  சந்திரன்   வந்து நின்றதும் ரமா பயந்து  போனாள்..பொருக்கிபய இப்படி சமயம் பாத்து வந்து தொலைப்பான் என்று நிணைக்க வில்லை. சிறிது நேரம் கைகால் உதறல் எடுத்தது. வந்தவனை உட்கார வைத்துவி்டடு பாத் ரூம்க்கு போயிட்டு வருவதாக ஒரு விரலை காட்டியபடி வெளியே வந்தாள்.

அடுத்தடுத்த வீடுகளிலுள்ள அக்கா மார்களை கூப்பிட்டு பார்த்தாள். யாரும் இல்லை. என்பதை தெரிந்து கொண்டுதான் இவன் வந்திருக்கான் தெரிந்து கொண்டாள். சீதாவுக்கு இவன் செய்த துரோகத்துக்கு சரியான பாடம் கற்பிக்கனும்.  என்று மனதில்   நிணைத்தவாறு வீட்டுக்குள் வந்தாள்.

சந்திரன் ரெம்பவும் மகிழ்ந்தவனாக  விளையாட்டைத் தொடங்கலாமா ??ஃ என்று கேட்டவாறு  எழுந்தவன் கதவை அடைக்கச் சென்றான்.

கதவை அடைக்க வேண்டாம் .லேசாக சாத்திவிட்டு..வா...என்றாள் ரமா...

ரமாவின் உத்தரவுக்கு கிழ்படிந்தவனாக வெறுமனவே கதவை சாத்திவிட்டு திரும்பியவனுக்கு எதிர்பாராமல்  முகத்தில் விழுந்த அடியால் நிலை குலைந்து போனான் முகத்தில் அடியோடு.. மேலும்  மேலும் விடாமல் அடி விழுந்தது. அவன் சுதாகரிப்பதற்கு வாய்ப்பே கொடுக்கப்படாமல் அடி திடிர் திடிர் என்று விழுந்தது. விழுந்த ஒவ்வொரும் அடியும் ஒவ்வொரு வார்த்தை வசவுகளாக சொல்லி சொல்லி விழுந்தது.

அப்பா..அம்மா விளையாட்டா கேட்குது.. இதுதாண்டா-. எங்கப்பா  ஒன்ன மாதிரி  அடுத்த பொம்பளயோட ..அப்பா அம்மா விளையாடும்போது எங்கம்மா கொடுத்த அடி....., இப்படித்தனடா சீதாவைச்  கெடுத்த பொறுக்கி நாயே என்று சொல்லி .ஒரு பேச்சுக்கு ரெண்டு அடி வீதம்  ரமாவின் தம்பிய வைத்திருந்த கிரிகெட் பேட்டால் வெளுத்து வாங்கி விட்டாள்.

நாயடி.. பேயடியால் நிற்க முடியமல்...முனங்கியபடி கீழே விழுந்தவனை வெளியே இழுத்துப்  போட்டாள்..... என்னை என்ன கேனச்சின்னு நிணச்சியாடா உசிலம்பட்டி கள்ளச்சிடா......  நீ எந்த ஊரு கள்ளன்டா  பொறுக்கி நாயே என்று திட்டியபடி மீண்டும் அடித்தாள்

ரமாவின் சத்தம் கேட்டு பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் ஓடிவந்து ரமாவை சமாதனப்படுத்தினார்கள். வேலையின் போது சந்திரன் செய்த ஒவ்வொரு சில்ஷிமம்.கிண்டல் நக்கல்கள்  ஒவ்வொன்றையும் சொல்லி சொல்லி அடித்தாள். அங்க கடிச்சு இங்க கடிச்சு .இப்போ என் வீட்டுகுள்ளே கடிக்க வந்துட்டியாடா. பொறுக்கி.என்று அடி போட்டாள்..

அவனால் சத்தம் போட முடியாமல் கத்தினான். பின் ரமாவீட்டாரும் மற்றவர்களும் சேர்ந்து  போலீஸ் வழக்கு என்று போகாமல் பிரச்சினையை அப்படியே அமுக்கி விட்டனர்.

ரமா சொல்லிச் சொல்லி சந்திரனை அடித்ததைத்தான் கடையில் சொல்லிச் சொல்லி சிரித்தார்கள். வெளியில் தெரிந்தால் பிரச்சினை என்றுதான் என்னைக் கண்டதும் அமைதியானார்கள்.

ரமா.. சொந்த சாதிக்காரனை திருமணம் முடித்தாலும்... தனக்கு பிடித்தவனை சாதி மறுப்பு திருமணம் முடித்தாலும் ..ரமாவை பழிக்கு பழியாக பழிவாங்க..சந்திரன்தான்  சாதிவெறி அஸ்திவார புத்தியுடன் முதலில்  நிற்பான் என்று எனக்கு  அப்போது  தோன்றியது..




21 கருத்துகள்:


  1. இவளைப்போல ஊருக்கு பத்துப்பேரு இருந்தால் சந்திரனை சூரிளாக்கிடலாம் போலயே....
    த.ம.1

    பதிலளிநீக்கு
  2. உங்களுக்கு தோன்றியது சரிதான் ,ஆனால் தைரியமான அந்த பெண்ணுக்கு திருமணம் நடக்கும் ,இவனால் ஒன்றும் செய்ய முடியாது !
    த ம 2

    பதிலளிநீக்கு
  3. தைரியமானவர்கள் ஊருக்கு சில பேர்கள்தான் இருக்கிறார்கள். அவர்கள் கூட கடைசி வரையில் தைரியமானவர்களாக இருப்பது இல்லையே கிலலர்ஜி..

    பதிலளிநீக்கு
  4. சாதி வெறியர்கள் துணை அவனுக்கு இருப்பதால் அந்தப் பெண்னை சும்மா விட்டுவிடுவார்களா??? பகவான்ஜி

    பதிலளிநீக்கு
  5. முன்னுரைக்கான கதை நன்றாக இருந்தது. வித்தியாசமான பாணி.

    பதிலளிநீக்கு
  6. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! ஐயா...

    பதிலளிநீக்கு
  7. ஜாதி என்னும் போர்வைக்குள் ஓநாய். இயற்கையாக பெண்களிடம் இருக்கும் வீரத்தை இதுபோல் ஓநாய்களிடம் காட்டினாலே புதுமை பெண்களாக மாறிவிடுவார்கள். கதை நடை அழகு. அறிமுகபடுத்திய புதுவை வேலு அவர்களுக்கு நன்றி. வாழ்த்துக்கள் சமுக வலி போக்கும் மனிதரே.

    sattia vingadassamy

    பதிலளிநீக்கு
  8. அடிபட்ட நாகம் என்று சினிமாவில் வில்லன் சொல்லிக்கொள்வானே?!

    பதிலளிநீக்கு
  9. அருமையான கதை
    நல்ல அலசல்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் இப்போது தான் முதன் முதலாய் இந்தத் தளத்திற்கு வருகிறேன். இனி வருவேன். நான் பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டிருப்பதால் உங்களுக்கு கருத்திட நான்?????...வந்ததைச் சொல்லிட இது . என் வலை தளம் வாருங்கள்..http://chinnavalsurya.blogspot.in/2015/11/blog-post.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லது நணபரே... அவசியம் தங்கள் தள்த்திற்கு வருகிறேன் நண்பரே....

      நீக்கு
  11. இது நிஜசம்பவமா?
    எப்படியும் வாழலாம் எனும்பலரில் இப்படித்தான் வாழலாம் ஒரு சிலர்! ர்

    பதிலளிநீக்கு
  12. வலைப்பூவை பின்தொடர்ந்தேன்

    பதிலளிநீக்கு
  13. ஓய்வினில் மீண்டும் வருகின்றேன் நண்பரே! தளத்தில் இணைந்துவிட்டேன். தொடர்வேன் ....

    பதிலளிநீக்கு
  14. ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு யுக ரணங்களை கடக்கவேண்டிய நிலை பெண்களுக்கு... தன்னம்பிக்கையும் இறைநம்பிக்கயும் ஒன்றிணையும்போது மலைகூட மடுவுதான்..

    நல்ல கருக்கொண்ட கதை..

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...