வெள்ளி 14 2014

செய்கின்ற தொழிலை ஈடுபாட்டோடு செய்து வளர்ச்சி அடைந்தவர்கள்...!!!

படம்-வினவு.
ஒரு ரூபா சம்பளத்துக்கு ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னுத்தி ஒன்றாம் ஆண்டில் ஆட்சி தொழிலுக்கு வந்து அய்ந்தே வருடத்தில் 66கோடியே 65 இலட்சம் உழைத்து, .செய்யும் தொழிலை ஈடுபாட்டோடு செய்து வளர்ச்சி அடைந்து காட்டி“.ஊழல் ராணி”,“வாய்தா ராணி” என்ற பட்டங்களை பெற்று தமிழக தொழில் முனைவோர்க்கு முன்னுதாரணமாக விளங்கி காட்டினார்.


அடுத்தாக ஒருவர்.சிறந்த “மலை முழுங்கி மலைக்கள்ளன்”  என்ற அரிய பட்டத்துடன் மைய அரசால் பலமுறை விருது பெற்ற ..தான் செய்கின்ற கிரானைட் தொழிலை ஈடுபாட்டுடன் செய்து ஒரு மலையையே காணாமல் ஆக்கிய  பெருமையுடன் அடி முதல் நுனி வரை போடு பணம் போட்டு சிறந்த தொழில் வளர்ச்சியை  காட்டி தொழில் முனைவோர்க்கு எடுத்துக்காட்டாக தெரிந்தார்.


வைகுண்டராஜனின் சூறையாடல்
http://www.vinavu.com/2013/09/18/vaigundarajan-garnet-puja/
இந்த இருவருக்கும் ஈடு இணை இல்லாதவராக சொல்லும் அளவுக்கு கடலையே கொள்ளை அடிக்கும் தொழிலை  மிகுந்த ஈடுபாட்டுடன் செய்து மைய அரசின் சி.பி.ஐ யே கானவில்லை என்று பொய் சொல்லுமளவுக்கு மிக நேர்த்தியான முறையில் தெற்கத்திய தாது மணல் கொள்ளையன் என்ற பெரும் பட்டத்தை சுமக்க விரும்பாதவராக காட்டிக் கொள்ளும் பெருமை மிக்க தொழிலதிபராக ஓடி ஒளிந்து தன்னை முன்னிலை படுத்திய  தெற்கத்திய தொழில் முனைவவோராக காட்டிக் கொண்டு வருபவர்

 வக்கீல் பரசும் ‘கிளையண்ட்’ சரசும் !  

ஆக தமிழ்நாட்டில் மட்டும் “செய்கின்ற தொழிலை ஈடுபாட்டுடன் செய்து வளர்ச்சி அடைந்தவர்கள்களின்.செய்யும் தொழிலை ஈடுபாட்டுடன் செய்து உயர்ந்தவர்களின“ வரிசையில் முதலிடத்தை பிடித்த முப்பெரும் (கொள்ளையர்கள்) மாமனிதர்கள் இவர்கள்..................


9 கருத்துகள்:


  1. போற்றப்பட வேண்டியவர்கள்தான்.

    பதிலளிநீக்கு
  2. ஆம் ஆம்,
    செய்யும் தொழிலே தெய்வம் - அதில்
    “திறமை“தான் உனது செல்வம்!
    என்ற பாட்டை அறிந்து கடைபிடிக்கிறார்கள்!
    பகிர்வு இன்னொரு சாட்டையடி!
    த ம 1

    பதிலளிநீக்கு
  3. அடுத்த தொழில் (கொள்ளை) முனைவோர்களுக்கு இவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்...திரு. கில்லஜி அவர்களே!!

    பதிலளிநீக்கு
  4. எத்தனை சாட்டையடி கொடுத்தாலும் அவர்களுக்கு வலிக்கவா போகிறது. ஓட்டுப்போடும் இயந்திரம் யோசிக்காதவரை இத்தகைய தொழில் (கொள்ளையர்கள்) முனைவோர்கள் தொடருவார்கள்...திரு.ஊமைக்கனவுகள் அவர்களே!!!

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு. யாழ்பாவணன் அவர்களே!!!!

    பதிலளிநீக்கு
  6. உண்மை என்று அறிந்தவற்றுக்கு நன்றி!! திரு. வேகநரி அவர்களே!!!

    பதிலளிநீக்கு
  7. தொழில் துறையில் நாடு முன்னேறுதுன்னு சொன்னாங்க ,இப்படித்தானா ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  8. இப்படித்தான்ஜி..நாடு முன்னேறுது....

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...