செவ்வாய் 23 2014

வெளி மாவட்டத்தில் கொள்ளையடிக்க...மலைக்கள்ளன் & கோ . கம்பெனிக்கு அனுமதி


படம்- மனு செய்யுமிடம்.
ஒரு ஏரியாவில் திருடியவர்கள் கொள்ளையடித்தவர்கள் மாட்டிக் கொள்வோம், பிடிபட்டுவிடுவோம் என்ற கணக்கு வழக்கில்  திருடும் ஏரியாவை மா்ற்றிக் கொள்வார்கள். இதற்க்காக இவர்களுக்கு எந்த நீதி மன்றமும் சரி, கட்டப் பஞ்சாயத்து போலீசும் சரி எந்த லைசென்சும் வெளிப்படையாக வழங்கியது கிடையாது.

இனிமேல் இவர்களுக்கும் கொள்ளையடித்த வழக்கில் இவர்களின் குருப்பின் மேல் வழக்கு இருந்தால். இவர்களும் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு போட்டு லைசென்ஸ் பெற்றுக் கொள்ளலாம். அதற்கு ஒரு முன்னோட்டமாக மதுரை உயர்நீதிமன்றத்தில்   கிரானைட் கொள்ளைக்கார மலைக்கள்ளன் அன்ட கோ கம்பெனிக்கு வெளிமாவட்டத்தில் கொள்ளையடிக்க லைசென்ஸ் வழங்கியுள்ளார் ஒரு நீதிபதி..

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் மலையையே  இல்லாமல் கொள்ளையடித்த மலைக்கள்ளன் கம்பெனியின் பங்குதாரர் ஒருவர் கிரானைட் கொள்ளை வழக்கு நிலுவையில் இருப்பதால் எங்களால் கொள்ளைத் தொழிலை நடத்த முடியவில்லை. அதனால் கொள்ளை அடித்த மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டத்தில் மலைக்கள்ளன் அன்ட.கோ கம்பெனிக்கு கொள்ளை அடிப்பதற்க்காக அனுமதி வழங்க வேண்டும் என்று மனு செய்தார்.

 இந்த வழக்கை விசாரித்த  மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி  “ வழக்கு நிலுவையில் இல்லாத  வெளிமாவட்டத்தில்” மலைக்கள்ளன் அன்ட. கோ கம்பெனி வங்கிக் கணக்கு தொடங்கவும், கிரானைட் கற்களை கொள்ளையடித்து ஏற்றுமதி செய்யவும்  உத்தரவு அளித்தார்.

மலைக்கள்ளன் அன்டகோ கம்பெனியின் மனுவுக்கு அரசு பதில் அளிக்கவும் உத்தரவு இட்டார்.

இந்த வழக்கில் “மனித உரிமை பாதுகாப்ப மையத்தின் இணை செயலாளரும், வழக்குரைஞமான வாஞ்சி நாதனை ஒரு மனுதாராக ஏற்க மறுத்துவிட்டார்.

மதுரையிலிருந்து சென்னைக்கு போக ஒரு வழியா இருக்கிறது என்பது மாதிரி, சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் கிரானைட் கொள்ளை குறித்து  விசாரனை செய்து அதன் அறிக்கையை தாக்கல  செய்ய தனி அலுவலராக முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியாளரான் திரு.சகாயத்தை தனி அலுவலராக நியமிக்கப்பட்டு விசாரனை நடைபெற்று வருகிற வேளையில்..

பூனை கண்ணை மூடினால் உலகமே இருண்டுவிட்ட கதையாக மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர். அதையும் எதையும் தெரியாதவர்போல் கிரானைட் கொள்ளை மலைக்கள்ளன் அண்ட கோ கம்பெனிக்கு வெளி மாவட்டத்தில் கொள்ளையடிக்க அனுமதி வழங்கியுள்ளார்.



இனி லைசென்ஸ் இல்லாத திருடர்களும் கொள்ளைக்காரர்களும் லைசென்ஸ் பெ்ற்று கொள்ளை அடிப்பதற்கு மனு செய்து கொள்ளலாம்.
கிரானைட்-ஊழல்

5 கருத்துகள்:


  1. மலையைத்தானே கொள்ளயடிச்சாங்கே,,, இனியும் பாருங்க, நாட்டையே வித்துப்புட்டு வேற நாட்டு சிட்டிசன் வாங்கிட்டு போயிடுவாங்கே,,,,
    த.ம 1

    பதிலளிநீக்கு
  2. அவிங்களத்தானே எல்லாரும் வாழ வைக்கிறாங்கே......

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...