சனி 30 2015

பெண் போலீஸ் .எப்போது ஆண் போலீசா..ஆனாள்..!!!



“மவனே..  எனக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியிருந்தா...”
படம்-viruvirupu.com
  அவள் அவனைப் பார்த்தாள்
அவளின் பார்வையில் தன்
பார்வை சந்திப்பதை தவிப்பதற்க்காக
தலை குனிந்து தரையை
பார்த்தான்.அவளை திருட்டு
பார்வையால் பார்த்தபோது
தலையில் கொண்டையும் தன்னைப்
 பார்க்கும் கண்களும் அதோடு
 காதில் தோடும் இல்லை என்றால்.................

இருக்கையில் அமரந்த பிறகு
அவன் பெயரைக் கேட்டாள்
அவன் தலை நிமிர்ந்து
அவளை பார்க்க நிமிர்ந்த
போது அவன்  பெயரைச்
சொல்லி  அவன் மனைவி
கொடுத்த புகார் மனுவை
 நீட்டினான் பாவி அங்குள்ளவன்.

அவள் படித்தாளோ இல்லையோ
அருகிலிருந்த கம்பை எடுத்து
விலாசி தள்ளி விட்டாள்.
அவள் அடிப்பதை பார்த்ததும்
அவன் வாய் பிளந்து நி்ன்றான்

இப்போது அவன் அவளை
ஆச்சரியமாய் பார்த்தான் கண்
சிமிட்டாமல்...பூ...போன்ற
கைக்கு இவ்வளவு பலமா...?

இப்போது அவள் அவனை
பார்த்தாள்... தனது போலீசு
லத்தியை   சுழற்றிய படி
அந்த லத்தியை நீட்டி
தொலச்சு பிடுவேன் தொலச்சு

 இப்போது அவனுக்கு அவள்
அருகில் நிற்கும்  தன்
மனைவி தெரியவில்லை அவன்
மனைவி அவனைப் பற்றி
சொல்லும் போதும் அவள்
பேசுவதை கேட்டு  அவள்
தன்னை பார்ப்பதையும் தன்னை
பார்த்துக் கொண்டே தன்
 மனைவிடம் பேசுவதையும் ஆச்சரியமாய்
ஆர்வமாய் கவனித்தான்.. பெண் 
போலீஸ்... எப்போது ஆண்
போலீசா ஆனாள்.....என்று......!!!
சிந்தித்தான் சிந்தித்தான் திரும்பவும்
அடி வாங்கும்  வரை.......!!!






14 கருத்துகள்:

  1. அடடே அடி வாங்கி விட்டவன் விட்ட பில்டப்பு ஸூப்பரப்பு....

    பதிலளிநீக்கு
  2. அடி வாங்கியவனுக்கு மயக்கம் இன்னும் தெளியலேயே...ப்பு..

    பதிலளிநீக்கு
  3. இப்படி அடி வாங்கியே அவன் முதுகு வைரம் பாய்ந்திருக்கும் போலிருக்கே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னது வைரமா....??? இருங்க அவன் முதுகை பார்த்துவிட்டு வருகிறேன்.

      நீக்கு
  4. இன்னும் நாலு போடு போடணும்...! ஹிஹி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி..அடி வாங்கியே அவன் முதுகு வைரம் பாய்ந்து இருக்குமுன்னு பகவான்ஜி சொல்லி இருக்காரு... இன்னும் நாலு போடு போடச் சொல்றிங்களே......

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களுக்கு எல்லாமே கனவாத்தான் தெரியுதுங்களா..... கனவு இல்லிங்க.... காவல் நிலையத்தில் நான் கண்டதுங்க.... குறிச்சொல்ல பாருங்க..அனுபவம்..ன்னு போட்டு இருப்பேன்..

      நீக்கு
  6. தோழரே!
    லத்தி சார்ஜ் செய்ய வேண்டிய
    வீடுகள் எவ்வளவோ உண்டு!
    த ம +1
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  7. வில்லங்கமான கதையாக இருக்கும் போல..!
    த ம 5

    பதிலளிநீக்கு
  8. இலக்கியச் சுவை சொட்டும்
    சிந்திக்கவைக்கும் பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...