வெள்ளி 18 2015

வந்தால்.....எல்லாம் மொத்தமாக வரும்............!!!!!!!!




மற்றவர்களுக்கு எப்படியோ..

அவருக்கு வந்தால்
எல்லாம் மொத்தமாக
வந்து சேரும்..

நோயில் விழமாட்டார்
விழுந்தால் பலநாள்
எழுந்திரிக்க மாட்டார்

பல நாள் கவனமாக
இருப்பார் அப்படியும்
ஒருநாள் கவனம்
மறந்து படு
அவஸ்தை படுவார்.

சிலர் தலைவலிதான்
பயங்கரம் என்பர்
வயித்துவலி வந்தவர்
வயித்தவலி  தான்
மோசமானது என்பார்
இப்படி ஒவ்வொரு
வலியும் அவரவர்க்கு
பிரதானமாக இருக்கும்
சிலருக்கு  எல்லாம்
மொத்தமாக வரும்

அந்தச் சிலரில்
இவரும் ஒருவர்
வராமல் வரும்
நோக்காடு மொத்தமாய்
வருவது போல்
செலவுகளும் மொத்தமாய்
வந்துச் சேரும்.

உறவினர் நண்பர்களின்
காதுகுத்து விழா.
பூப்புனித நீராட்டு
விழா.. புதுமனை
புகுவிழா..திருமணவிழா
இதோடு சேர்ந்து
தொழில் செய்யும்
இயந்திரத்தின் ரிப்பேர்
மூன்று டூவீலரின்
பொருள் மாற்று
சர்வீஸ் செலவு

நிரந்தரச் செலுவுகளுடன்
இவைகளும் மொத்தமாய்
வந்து சேறும்...
இவைகளை சமாளிக்க
இவர் வேலை
செய்த கூலியின்
காசு.துட்டு
பணம் மட்டும்
மொத்தமாய் வந்து
சேர்ந்ததாக சரித்திரம்
இல்லை.. ஏனென்றால்.
ஊரான் நாட்டுக்காரன்
மொத்தமாய் அள்ளி
செல்ல அனுமதிக்கும்
ஆளுவோர் நாடாக
இருக்கும் போது.....



16 கருத்துகள்:

  1. ஆளுவோர் நாடல்ல!! அவர்கள் வீடு இஸ்டப்படி அள்ளலாம்! இன்னும் அள்ளலாம்???

    பதிலளிநீக்கு
  2. அருமையாக அள்ளலாம் பலதை என்று அறிந்தவர்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு நாள் சாவோம் என்பதையும் அறிந்திருப்பார்கள் அல்லவா....

      நீக்கு
  3. கேட்கத்தான் நாதி இல்லை நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்க நாதி இருக்கிறது..அவர்களுக்கு பக்கபலமாக இருப்பதற்கு பதிலாக..நாம மட்டும் வாழ்க்கையில் முன்னேறிவிடலாம் என்ற சிந்தனை திணிக்்கப்பட்டு இருக்கிறது நண்பரே...

      நீக்கு
  4. ஊரான் நாட்டுக்காரன்
    மொத்தமாய் அள்ளி
    செல்ல அனுமதிக்கும்
    ஆளுவோர் நாடாக
    இருக்கும் போது.....//

    காலம் காலமாக இதுதானே இங்கு நடக்குது.....வேதனை...

    பதிலளிநீக்கு
  5. வர வேண்டியது வருவதில்லை;வேண்டாதது வருகிறது வண்டி வண்டியாய்

    பதிலளிநீக்கு
  6. சிறு தொழிலைக் கூட வாழ விடாமல் கெடுக்கும் அரசின் கொள்கை !மக்களுக்கு நல்லது செய்வதாக பீற்றிக் கொள்கிறது !

    பதிலளிநீக்கு
  7. பீற்றிக் கொள்வதில்தான் முதலிடம்..எல்லா . அரசுகளுக்கும்..

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...