ஞாயிறு 13 2015

பிச்சையும்..இலவசமும் பெற்றால் நரகம்தான்..

படம்-aveenga.blogspot.com
நாலு சந்திப்பு ரோடு
சிக்னலில் நாலு மூனு
ரெண்டு சக்கர வாகனங்கள்
நின்று  இருக்க.. இருவர்
மூவர் ஒவ்வொரு திசையில்
பிச்சை கேட்டு நடக்க...

இரு சக்கர வாகனத்தில்
இருந்த கனவான் ஒருவர்
தன் பனப்பெட்டியை திறந்து
அதில் ஒரு பத்து
ரூபாய் தாளை எடுத்து
தனக்கு பின்னால் அமர்ந்து
இருந்த பெண்ணிடம் நீட்ட

அந்த பெண்ணொ பாதுகாப்புக்கு
கணவனின் வயிற்றை பிடித்து
இருந்த கரங்களால் நீட்டிய
பணத்தை பெற்று பிச்சை
கேட்டவரின் உண்டியில் போட்டார்

இதை சைட் அடித்து
நின்ற மூனு சக்கர
வாகன ஓட்டி ஒருவர்

பிச்சை போட பணத்தை
எடுத்தவன் தான் போடாமல்
தன் மனையாளிடம் கொடுத்து
போடச் சொல்கிறானே இதில்
எதாவது விசயம் இருக்கும்
என நிணைத்து அவன்
சோசியன் ஒருவனிடம் கேட்க.

பெண் பிச்சை இட்டால்
 பாவம் செய்த கணவனக்கு
புன்னியம்  கிடைக்கும் எனறான்

அது கேட்டு சோசியனுக்கு
அறிமுக கார்டு அடித்து
கொடுக்க வந்தவன் கேட்டான்

அப்படி என்றால் ஆளுகின்ற
ஆட்சியாளர்கள் ஓடாத பேன்
 கிரைண்டர் உடைந்து போன
மிக்ஸி கொடுப்பது அவர்கள்
ஊழல் மறைந்து மோட்சம்
கிடைக்கத்தானா..என்று வினவ

ஆம் எனற் சோசியன்
பிச்சை மற்றும் இலவசம்
கொடுப்பது புன்னியத்துக்கும்
மோட்சம் கிடைக்கத்தான் என்றான்

இலவசம் கொடுப்பவனுக்கும் பிச்சை
போடுபவனுக்கும் புன்னியம் மோட்சம்
கிடைக்கும் என்றால் இலவசம்
வாங்குபவர்களுக்கும் பிச்சை கேட்பவர்களுக்கும்
 நரகம்தானே கிடைக்கும் என்றபோது

சோசியன் கண் சிமிட்டினான்...

குறிப்பு :- பிச்சை, இலவசம், அன்னதானம் போன்றவைகள்  வரிசையில் ”உதவி” என்பது  சேராதாம்....



13 கருத்துகள்:

  1. ஆஹா இது எங்கேயோ.. உதைக்கிறதே நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. ஹஹஹஹ கடைசியில் சொன்னது செம...இலவசம் எல்லாமே வேஸ்ட்...அதற்கு உருப்படியாக ஆட்சியாளர்கள் மக்களுக்குச் செய்தால் நல்லது..அது நடக்காத ஒன்று என்ன சொல்ல

    பதிலளிநீக்கு
  3. பாவ புண்ணியம் எல்லாம் இல்லை ,இரு தரப்புக்கும் வோட்டு பிச்சை தான் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வோட்டு பிச்சை எடுப்பவர்களுக்கு நரகம் கிடையாதே.....

      நீக்கு
  4. பிச்சை போடுவதும் தவறு
    பிச்சை எடுப்பதும் தவறு

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...