வியாழன் 03 2015

நொங்கு திண்டவன் ஓடிட்டான்...நோண்டி திண்டவன் மாட்டிக்கிட்டான்.

படம்-www.dinamani.com



“டேய்...... எங்கேயடா...அவிங்க....”

“யாருண்ணே...”

“  யாரா......?ஃ..அவிங்க தாண்டா... மழை வேண்டி.. கழுதைக்கும் கழுதைக்கும்  நாய்க்கும் விட்டைக்கும்  கல்யாணம் பண்ணி வச்சவிங்க......”

“அவிங்களாண்ணே.......இன்னவரைக்குமாண்ணே...இருப்பாங்கே... சிட்டா பறந்து  இருப்பாங்கேண்ணே.....”


“ மழை வேண்டி..யாகம் பண்ணினவங்கே.......”

“ அவிங்க எல்லாம்... வெளிநாட்டுக்கு யாகசம் கேட்டு போயிருக்காங்கண்ணே...”

“அப்போ ஒரு பயலும்  வெள்ளத்துல இல்லையாடா.....”

“   கல்யாணம் செஞ்சு வச்சவனும்.. யாகம் பண்ணினவனும் நாசமா போன மழையில சிக்காம  தப்புச்சுட்டுகாங்கண்ணே..... ....

“பாவிகள் தப்புச்சுட்டான்களா...”

“இவிங்க மட்டும்..பாவிங்க இல்லண்ணே..”

“பின்ன..இல்லீயா.டா... நம்ம தலநகரமே..இப்படி  நாசமா..போச்சுடா....”

“ மற்ற ஊர்கள வச்சுதானே தலநகரம்... கொஞ்சம் பின்னாடி திரும்பி பாருங்கண்ணே.....”

“என்னடா...சொல்ற...”

ஒங்களுக்கு தெரியாதது இல்ல..இருந்தாலும் சொல்றேன்.   தல நகருக்குஒரு அரை மணி நேரம் மின்சாரம்  நிறுத்தி வைத்தால்  வெளி நாட்டு, உள்நாட்டு கார்ப்ப ரேட் கம்பெனிகளின் ஊதுபத்தி பாதிக்குமுனு சொல்லி மத்த ஊர்களை எல்லாம் இரட்டுல..முழ்க வச்சங்களே.. ஞாபகமிருக்கா...???... இப்ப அந்த கார்ப்ப ரேட்டு வெண்ணைகளும்..அவிங்களுக்கு ஆதரவாக இருந்தவங்கேதாண்ணே  பாவிகள் ..


 அட, ஆமாடா...“யாகம் செஞ்சவன் பாவின்னா....இவிங்க மகா பாவிங்கடா..””


“அவிங்களும் இப்ப காணோம்ண்ணே...”

”............நொங்கு திண்டவன் ஓடிட்டான். நோண்டி திண்டவன் மாட்டிக்கிட்ட ” கதையாவுல இருக்கு....

அது கதையில்லண்ணே.. அது உண்மையிண்ணே .அந்த நிலமைதான்ண்ணே.....இப்ப  நம்ம தல நகர்ல்ல நடந்துகிட்டு இருக்கு...”

17 கருத்துகள்:

  1. உண்மைதான்.

    பழமொழியின் வாயிலாக நடப்பைச் சரியாகச் சொன்னீர்கள்.


    தொடர்கிறேன்.

    நன்றி

    பதிலளிநீக்கு
  2. அதை நினைத்து சந்தோசப் பட முடிய வில்லையே தோழரே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெப்படி.. பரிதவிப்பிலும் கவலையில் இருக்கும்போது சந்தோசம் பட முடியாது நண்பரே......

      நீக்கு
  3. படத்தில் இருகிறவாளைக் கேட்டால், மழை நிறுத்த என்ன? யாகம் செய்ய வேண்டுமென வேதத்தில் உள்ளதெனப் பாத்துச் சொல்லுவா!
    என்ன? யாகத்துக்கு குறைஞ்சது 10 லட்சமாகுமென்பாங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதிலிருந்து அவர்கள் பெரும் பித்தலாட்டக்காரர்கள் என்று தெரிந்து கொள்ளலாம் நண்பரே............

      நீக்கு
  4. ஏதெதற்கோவெல்லாம் கையை உயர்த்திக்காட்டி தீர்வு காணும், காவிகள்- நித்தியானந்தன், ஶ்ரீஶ்ரீஶ்ரீ,அம்மாக்கள்,பங்காருகள், இன்னுமொரு கலர் சட்டைக்காரர் - மற்றும் சங்கர மடத்தாள்கள், பரமசிவன் பார்வதியுடன் பேசும் மதுரையிலுள்ள ஒரு அரைக் கிறுக்கு - இந்த மழையை நிறுத்த அவங்க சாமிகளுடன் பேசமாட்டாங்களா?
    இன்னும் நித்தியானந்தன்- தன்னை வீடியோ எடுத்ததால் தான் சென்னைக்கு இறைவன் தண்டனை கொடுத்தானெனக் கூறவில்லை- மகிழ்வே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் முடிந்தபிறகு அவர்கள் கைங்கரியத்தை காட்ட பரிவாருங்களோடு வருவார்கள்...நண்பரே...........

      நீக்கு
    2. அப்டியே இதே கேள்விய அந்த ஏஞ்சல் டி வீ தாடிகக்காரர் , பால் தினகரன், TNTJ காரனுங்கள பாத்து கேக்கவேண்டியது தானே?

      நீக்கு
  5. பதில்கள்
    1. இது பதிலடி இல்லை நண்பரே..உள்ளக் குமுறல் நண்பரே.........

      நீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...