செவ்வாய் 08 2015

போதும்மடா ...சாமி.........


படம்www.pathivu.com







வந்தேறிகளான நாங்கள்
இல்லை என்றால்
என்ன .குந்த
வந்தவர்கள் நல்லா
 குந்துங்கடா..போயி

பட்ட துன்பம்
போதும்மடா...சாமி
சென்னையை விட்டு
சொந்த ஊரில்
சாக வழி
காமிடா சாமி......


செய்தி:--_-  சென்னை மழை வெள்ள பாதிப்பு, வதந்தி எதிரொலியால் சென்னையை காலி செய்த 3 லட்சம் பேர்....

 ‘

13 கருத்துகள்:

  1. இதுதான் உண்மை நிலை நண்பா அருமையாக சொன்னீர்கள்

    பதிலளிநீக்கு
  2. மூணு லட்சம்தானா ,கூடவே இருக்கும் :)

    பதிலளிநீக்கு
  3. பிழைக்க வந்தவன் தப்பிச்சுகிட்டான். மக்கள் உயிரோடு இருக்கனும்னு சொல்லுறவன் வாயிலயும் ஸ்டிக்கர் ஒட்டுறான் எப்படித்தான் உதவறது. ஒரு வழியும் தெரியல.

    பதிலளிநீக்கு
  4. அவலமான நிலையை யார் விரும்புவார்கள்??

    பதிலளிநீக்கு
  5. திரும்ப வந்தாகத்தானே வேண்டும்.

    “அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
    உற்றுழித் தீர்வா ருறவல்லர் – அக்குளத்தில்
    கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
    ஒட்டி யுறுவார் உறவு“

    குளத்தில் நீரில்லாவிட்டால், பறவைகள் பறந்து வேறிடம் தேடும்.
    ஆனால் போக்கிடம் இல்லாத கொட்டியும் ஆம்பலும்....????
    மடியின் மடிந்து, மீண்டும் துளிர்க்கும் காலம் வரும்வரை அங்கேயே காத்திருக்க வேண்டும்.
    இன்பத்தில் பங்கு கொண்டு துன்பத்தில் விட்டு ஓடிப்போகிறவர்கள் உறவல்லர்.
    இன்பத்தில் மகிழ்ந்தது போலவே துன்பத்திலும் இருந்து உதவுகின்றவர்களே உறவாவார் என்கிறாள் அவ்வை.

    தங்களின் பதிவு காணத் தோன்றியது.

    தொடர்கிறேன் வலிப்போக்கரே!

    நன்றி.

    பதிலளிநீக்கு
  6. இது தப்பு....இருந்து போராடி காடியிருக்கவேண்டும்...என் மனைவியும் பிள்ளைகளும் சென்னையின் வேளச்சேரியில் தான் இருக்கின்றனர்...வந்தேறிகளாக இருக்கலாம்...துன்பம் வரும்போது ஓடுகாளிகளாகவா இருப்பது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில தமிழினவாதிகள் ‘வந்தேறிகள்’ என்று வன்மத்துடன் விளிக்கின்றனர். இந்த ‘வந்தேறிகள்’ இல்லை என்றால் வந்தவர்கள் குந்தியிருக்கும் சென்னை மாநகரம் நாறிப்போகுமென்ற விபரம் தெரியவில்லையே நண்பரே........

      நீக்கு
  7. ஓ இப்படி வேறு சொல்லுகின்றார்களா??!!! வந்தாரை வாழவைக்கும் தமிழகம் அல்லவா? இங்கு பல இயங்குவதே வெளியிடங்களிலிருந்து வந்தவர்களால்தானே...

    நண்பரே! யார் வந்தாலும் வராவிட்டாலும் சென்னை நாறிக்கொண்டுதான் இருக்கின்றது...

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...