சனி 23 2016

அன்று செங்கப்பன் சொன்னது..இன்று நிஜமாகிவிட்டது.

படம்-nadunadapu.com


கப்பலோட்டிய தமிழன், முரடன் முத்து, கரணன் போன்ற படங்களை தயாரித்து இயக்கிய இந்த இயக்குநரின் மேற்படி படங்கள் வசூல் ரீதியாக தோல்வி அடைந்துவிட்டதால் கடன் பிரச்சினையில் சிக்கினார்.

அந்த கடன் பிரச்சினையில் இருந்த மீள்வதற்க்காக அன்று ரூ100க்கு சில்லரை காசுகளாக மாற்றி தன் பையில் வைத்துக்ககொண்டு அள்ளி அள்ளி கொடுத்த வள்ளல் என்றும் கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் என்று பெயர் பெற்ற கல்லாப் பெட்டியை நிறப்பும் நடிகனாக இருந்து வந்தவரை நம்பி முதன் முறையாக ஒரு படத்தை தயாரித்து இயக்கி எடுத்தார்.

அந்தப் படத்தில்... இன்று  ஒரு இனத்தையே சாராய போதையில்  தள்ளி அடிமையாக்கிய அந்த நடிகையை கல்லாப் பெட்டியை நிரப்பும் அந்த நடிகருடன் இணைந்து நடிக்க முதன் முதலில் பிள்ளையார் சுழி போட்ட பெருமை மேற்படி இயக்குநர்ர்யே  சேரும்


அந்தப்படத்தில் 14 வயதான அந்த நடிகையை அந்த நடிகருடன் நடிக்க வைத்தப் படத்தில் அந்த நடிகை தோன்றும் முதல் காட்சியில், செங்கப்பன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகன் சொல்வான் 

“ நீ ஆயிரம் அடிமைகளுக்கு சொந்தக்காரி ஆகி , ஆளப் போகிறாய் நொம்மா ”என்று...

அன்று அந்தப்படத்தில் செங்கப்பன் சொன்னது... இன்று நிஜமாகிவிட்டது. 

இன்று ஆயிரம் அடிமைகளுடன் ஒரு இனத்தையே... அடிமை ஆக்கி  “சாராய ராணி” பட்டத்துடன் ஆண்டு கொண்டு இருக்கிறார் அந்த நடிகை


13 கருத்துகள்:

  1. உண்மை நண்பரே பொருத்தமான வசனம்தான் கேவலமானவர்கள் அன்றே இதை எழுதிக் கொடுத்து விட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  2. பந்துலு தீர்க்கதரிசி :)

    பதிலளிநீக்கு
  3. அட!அப்படியா?வாக்குப்பலித்ததோ?

    பதிலளிநீக்கு
  4. செங்கப்பன் தீர்க்கதரிசியாக இருப்பாரோ!

    பதிலளிநீக்கு
  5. அட! ஆமாம்ல!!! கண்டுபிடித்துப் பகிர்ந்தமைக்கு நன்றி வலிப்போக்கன்...

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...