திங்கள் 28 2016

அநியாயம்.....அக்கிரமம்.....

வர...வர....நாட்டிலே
அநியாமும் அக்கிரமும்
பொருகிப் போச்சு....

ஆபிசர் சொல்றான்
ஓட்டுக்கு துட்டு
வாங்கினால் சிறையும்
அபராதமும் விதிக்கப்படும்..

வாய்பொத்தி மெய் பொத்தி
ஓட்ட மட்டும் போட்டு
விட்டு  விதியேன்னு
திரும்பி பார்க்கம
ஓடிப் போய்விடு........
என்று...........அட
தும்பை விட்டு
மாட்டின் வாலை
பிடிக்கிற கதையல்லவா
இருக்கிறது  இது
அநியாயம் அக்கிரமம்



ஆட்டு மந்தை
மாதிரி ஓட்ட
மட்டும் போட்டு
விட்டு அஞ்சு
வருடம் கொள்ளை
அடிக்கிறவனுக்கு உரிமை
கொடுக்கிறதான் தேர்தலாம்
இதுக்கு பேரு
ஜனநாயகமாம்.......


கட்சிக்காரன் சொல்றான்
ஒரு ஓட்டுக்கு
ஒரு லட்சம்
வாங்குன்னு அத
இன்னொருத்தன் ஆமா
ஒரு லட்சம்
வாங்குவது சரிதான்..
என்று...........


அட ஒரு
ஓட்டுக்கு ஒரு
லட்சம் தருகிற
அந்த பரோபகாரி
எவன்ய்யா அவன்
கேனப்பய கூட
ஒரு ஓட்டுக்கு
ஒரு லடசம்
தருவான அய்யா..

போன் தேர்தல்ல
 ஒரு ஓட்டுக்கு
ஐறூறு தர்ரேன்னு
வாக்குறுதி தந்து
ஏமாத்துன கட்சிக்காரன்கள்
தான்ய்யா சொல்றான்
எங்க கட்சி
ஆட்சிக்கு வந்தால்
நுற்றிபத்து என்ன
நூத்தி பதிஒன்று
வாக்கு உறுதியையும்
நிறைவேற்று......வோம்
என்று..................

தேர்தல் என்றால்
என்ன? ஜனநாயகம்
என்றால் எப்படி
இருக்கும் என்பது
பற்றி சிந்திக்காமல்
காசுக்காக வாய்
பொளந்து நிற்கும்
வாக்காளர்களை பார்க்கும்
போது.............

வரவர நாட்டில
அநியாயமும் அக்கிரமும்
பெருகிதான் போச்சு...













8 கருத்துகள்:

  1. அட ஒரு
    ஓட்டுக்கு ஒரு
    லட்சம் தருகிற
    அந்த பரோபகாரி
    எவன்ய்யா அவன்

    ஓட்டுக்கு
    இப்படி எல்லாம்
    ஏலம் கூறுறாங்களோ

    பதிலளிநீக்கு
  2. ஓட்டுக்கு துட்டு தந்தால்
    ஓட ஓட வெட்டுதான்
    கொடுக்கணும்...
    ஓட்டை விட்டு கொடுத்தல்
    குற்றம்...

    பதிலளிநீக்கு
  3. இவர்களிடம் கேட்டுப் பாருங்கள் ஓட்டளிப்பது ஜனநாயக கடமை என்பான்.

    பதிலளிநீக்கு
  4. கொள்ளை அடித்த காசில் பங்கு கொடுக்கிறான் ,வாங்கிக் கொண்டு ,வேற கட்சிக்கு வோட்டுப் போடுவதில் என்ன தவறு :)

    பதிலளிநீக்கு
  5. நன்றாகவே சொன்னீர்கள். பத்துப் பைசா கூட வாங்காமல், விலை மதிப்பற்ற நமது ஓட்டை அடுத்தவனுக்கு போட்டு, அவன் கோடி கோடியாய் கொள்ளையடிக்க, நாம் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டுமாம்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் ஐயா,தேர்தலில் நடக்கும் ஊழலை மிகச் சரியாக சொன்னீர் ஐயா.

    எனக்கு ஒரு ஐயம் இருக்கிறது ஐயா,தேர்தல் நேரத்தில் அனைத்து கட்சியினருமே கட்டாயம் ஒரு சிலருக்கு பணம் கொடுத்து தான் ஓட்டு கேட்கின்றனர் என்று ஊர் அறிந்த உண்மை தான்.இது தேர்தல் ஆணையத்திற்கும் தெரியும்.ஆனால் ஏன் இதற்கான நடவடிக்கையை யாருமே எடுப்பதில்லை ..???ஐயா.

    இதற்கான ஒரு விடையை எனக்கு தாருங்கள் ஐயா.நன்றி.

    பதிலளிநீக்கு
  7. தேர்தல் முறையை மாற்ற வேண்டும்.

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...