சனி 23 2016

திருடர்கள் மொழியில் வளர்ச்சி என்றால்...


கஞ்சி ஊத்த வக்கில்ல
என்னடா அரசாங்கம் நாட்ட
வெளி நாட்டுக்கு வித்துபுட்டு
என்று பாடினார்கள் புரட்சிப்
பாடகர் கோவனும் அவர்தம்
கலைக் குழு தோழர்களும்

பசி வந்தால் பத்தும்
பறந்து போகும் என்றார்கள்
பசியால் பட்டு அறிந்தவர்கள்

எயிட்ஸ் ஏபோலா போன்ற
உயிர்க் கொல்லி நோய்களை
விட பசியால் மாண்டவர்கள்
ஏராளம் என்கிறது அய்க்கிய
நாட்டு அமைப்பு 2013-ல்
வெளியிட்ட அறிக்கை ஒன்று

அன்றைய இந்தியாவில் 1970ல்
இருந்தே வறுமையை ஒழிப்போம்
ஒழிப்போம் என்று குயிலாகவும்
கூவினார்கள் காக்கையாகவும் கரைந்தார்கள்
இன்றுவரை பசியும்  ஒழியவில்லை
வறுமையும் ஒழியவில்லை இன்றுவரை

தேர்தல் திருடர்கள் மொழியில்
பசியும் வறுமையும் வளர்வதைத்தான்
 அவர்கள் வளர்ச்சி வளர்ச்சி
என்று அவர்கள் மேடைதோறும்
கூவுகிறார்கள்.கரைகிறார்கள் பிதற்றுகிறார்கள்.


8 கருத்துகள்:

  1. கூவலையும், கரையலையும் மக்கள் ஏன் நம்ப வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. இந்திராவின் வறுமையே வெளியேறு கோஷத்தைப் பார்த்து ,கவிஞர் அப்துல் ரகுமான் சொன்னது நினைவுக்கு வருகிறது !அது ....வெளியேறு என்றால் எருமையே வெளியேறாது ,வறுமையா வெளியேறும் ?

    பதிலளிநீக்கு
  3. தேர்தல் திருடர்கள் மொழியில்...

    அருமையான வெளியீடு

    பதிலளிநீக்கு
  4. தேர்தல் திருடர்களை ஒழித்தால்
    நாடு வளரும் என எனது கணக்கு...

    பதிலளிநீக்கு
  5. தேர்தல் முடியும்வரை அப்படித்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  6. தாது வருடப் பஞ்சம் நினைவிருக்கிறதா? மக்கள்தொகைப் பெருக்கத்தால் மக்கள் மரங்களை அழித்து விளைநிங்களை அழித்ததோடு மட்டுமல்லாமல் மழையையும் நிறுத்தி, மணல் திருடி ஆறுகளை ஒழித்து என்று செய்து பஞ்சத்துக்குக் காரணமாகிறார்கள். இதுவும் ஒரு விதிதான் போல! தொலைநோக்குள்ள, சுயநலமில்லாத அரசியல் வாதிகள் என்பது கிடையவே கிடையாதுபோல.

    பதிலளிநீக்கு
  7. மக்கள் ஏன் கூவலைக் கேட்க வேண்டும். நல்ல திட்டங்களுடன் நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லத் தெரிகிற தலைவரே இல்லையா இந்த நாட்டில்?? மக்கள் கூவல்களைக் கேட்காமல் சிந்தித்து ஓட்டளிக்க வேண்டும்..பார்ப்போம்

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...