ஞாயிறு 12 2016

வக்கீலாகி... நீதிபதியாக போறேன்..சார்,..!!

தம்பீ  நீ எத்தினியாவது படிக்கிற.....

பத்தாவது சார்........

பாசாகிட்டியா...?

இல்ல சார்...ஒரு பாடத்துல போச்சு சார்...

அப்படியா...!! சரி, தம்பி கவலப்படாத.. அடுத்த அட்மிண்டுல எழுதி பாசாயிரு..

சரிங்க சார்,



தங்கச்சி.... நீ எத்தினியாவதும்மா....??

பிளஸ்டூ சார்...

பாசாயிட்டியா....ம்மா..

பாசாயிட்டேன் சார்.

 வெரிகுட்... அடுத்து என்னவாக ஆகபு்போற...

வக்கீலாகப் போறேன் சார்....

என்னது வக்கீலா...!! சரி வக்கீலாகி....???

நீதிபதியாகப் போறேன்.சார்

நீதிபதியாகி என்னம்மா செய்யப்போறே...

மக்களுக்கு சேவை செய்யப்பேறேன் சார்.......

எப்படிம்மா....????

உரிமை, சனநாயகம், சுயமரியாதை என்று பீத்ததுகின்ற வக்கீல்களுக்கு எதிராக சத்தம்போட்டு பேசக்கூடாது, கண் புருவத்தை அசைக்கக்கூடாது, ஊர்வலம் போகக்கூடாது, முழக்கம் போடக்கூடாது...நீதிபதி செய்யிற ஊழல பத்தி பேசக்கூடாது. நாட்டு மக்களுக்கு  நீதி கொடுத்த குமாரசாமி, தத்து. போன்றவர்களை விமர்சிக்கக்கூடாது.ன்னு,.நீதிபதிக தீர்ப்பு சொல்ற வேலையை விட்டுபுட்டு  சட்டசபை, நாடாளுமன்றங்களுக்கு அனுசரனையாக நானும் இப்படியான சட்டத்தை நிறைவேற்றி இதன் மூலமா.... மக்களுக்கு சேவை செய்வேன் சார்.....இதுமாதிரியான சேவை நிறைய நிறைய.... நிறையவே  இருக்கு சார்....

எந்த மக்களுக்குமா...???

நம்ம மக்களுக்குத்தான் சார்.........


 ஆகா.. ஆகா.. பென்னடிமை தீர போராடிய அல்லிராணியை உன்னிடம் பார்க்கிறேன்ம்மா..... வாழ்க! வளர்க!!வாழ்த்துக்கள்ம்மா!!!

தாங்கியூ சார்,.........


4 கருத்துகள்:

  1. இந்தப்பெண்ணுக்கு எனது வாழ்த்துகளும் சொல்லிடுங்க நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. கர்ணன் பாதிப்பை விட்டு விட்டீர்களே...

    பதிலளிநீக்கு
  3. வக்கீல்கள்தான் வாய்தா வாங்குவார்கள். இப்போது அவர்களுக்கே வாய்தா வாங்க வேண்டும் போலிருக்கிறதே

    பதிலளிநீக்கு
  4. எனது சார்பாக வாழ்த்துகள் சொல்லிடுங்க

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...