வியாழன் 30 2016

ஜெனரல் டயர் இன்னும் சாகவில்லை..


சுட்டேன் சுட்டேன்
குண்டு தீரும் வரை
சுட்டேன் சுட்டேன்
இன்னும் குண்டுகள்
இருந்து இருந்தால்
எல்லோரையும் கொன்று
குவித்து இருப்பேன்
ஆங்கிலேய ஆட்சியை
எதிர்த்தால் என்ன
நடக்கும் என்று
அவர்கள் மனதில்
பயத்தை விளைவிக்கத்தான்
சுட்டேன் சுட்டேன்
 என்று கொக்கரித்தான்
ஜெனரல் டயர்

அந்த டயர்
இன்னும் சாகவில்லை
சென்னை உயர்
நீதி மன்றத்தில்
தலைமை நீதிபதியாக
அமர்ந்து இருந்து
 தமிழக வழக்குரைஞர்
அனைவரும்  பயம்
கொள்ளும் விதத்தில்
34(1) என்ற கருப்பு
சட்டத்தின் மூலம்
தான் இன்னும்
சாகவில்லை  என்று
பயம்  காட்டிக்
கொண்டு இருக்கிறார்




6 கருத்துகள்:


  1. அந்த டயர் ... ???

    http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

    பதிலளிநீக்கு
  2. அந்த கருப்பு சட்டத்தில் அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று குறிப்பைக் கொடுங்கள் ,அவர் டயரா,டியூப்பா தெரிந்து கொள்ள வசதியாய் இருக்கும் :)

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...