வெள்ளி 08 2016

நல்லா இருந்த ஊரும்..ஒரு சாராயக்கடையும்....

வாங்க  தம்பி..வாங்க..தம்பி... இந்த ஊரு ஒரு காலத்துல நல்லா இருந்த ஊரு தம்பி. சாதிமத வேறுபாடுகள் இருந்தாலும் அதுவால இந்த ஊரு நாசமா போனதில்ல தம்பி..

இந்த ஊருல...ஒரு பாப்பானோ, பிள்ளையோ இருந்தாலும்..அவிங்களால ஊரு ரெண்டு படாம இருந்த ஊரு தம்பி, எந்த கட்சியாக இருந்தாலும் அதால முட்டி மோதி சண்டையிட்டு போலீஸ் ஸ்டேசனுக்கெல்லாம் போகாத ஊரு தம்பி,

சொன்னா நம்ப மாட்டிங்க தம்பி, அரசாங்கம் இந்த ஊருல , என்னிக்கு சாராயக் கடையை திறந்ததோ.. அன்றையிலிருந்து இந்த ஊருக்கு சனியன் பிடித்து நாசமா போச்சு தம்பி...

வீரப்போர் புரிந்து நெஞ்சிலே வீரத் தழும்பு பெற்ற வீரத் தமிழனின் வாரிசசெல்லாம் சாராய தமிழனாக ஆகிட்டாங்க தம்பி,  புலியை முறத்தால அடிச்சு விரட்டிய வீரத் தமிழச்சிக எல்லாம்.. சாராயக் கடைய பாதுகாக்கும் போலீசிடம் லத்தி அடி வாங்கி ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் அலஞ்சுகிட்டு இருக்ககுதுக தம்பி,

என்ன செஞ்சும் சாராய சனியனை விரட்ட முடிய தம்பி, பொது நலத்துக்கு போராடியவங்கெல்லாம். இந்த ஊருக்காரங்கே ஒத்துழைப்பு கொடுக்காததினால... அவனவன் தன் சொந்த பொழப்ப பாக்க போயிட்டாங்க தம்பி.

ஒரு காலத்துல பல ஊருக்கு வழிகாட்டியா இருந்த ஊரு, இன்னிக்கு. சாராயக்கடையால நாசமா போச்சு தம்பி, நீங்க இருக்கிற ஊரு, கள்ளச் சாராயம் காய்ச்சி போலீஸ வண்டியிலேயே ஊரு ஊராக வித்த ஊரு தம்பி  உங்க ஊரும் நல்லா இருக்காதுன்னு தெரியும் தம்பி,

உங்க ஊரும், இந்த ஊரும் வேணான்னு நகரத்துக்கு போனாலும்.. அங்கு என்ன வாழுது. நகரம் நரகம் பிடிச்ச கதையாக ஆகிப்போச்சு தம்பி. இப்படியே போனா..நல்லா இருந்த ஊரு, நாசமா போனது மாதிரி, இந்த நாடும் இந்த நாட்டு மக்களும் நாசமா போவதை பார்க்க நீங்களும் நானும் இருக்க மாட்டோம் தம்பி.

மணி பணிரென்டாகிவிட்டது. இந்நேரம் கடைய திறந்திருப்பான்...குடிக்கிறவன் குடிக்காம திருந்தவதற்க்காக ரெண்டு மணி  நேரம் லேட்டா திறக்குறாங்கே.தம்பி .என்னடா எழவுன்னு கேட்டா..அரசாங்க உத்தரவுங்கிறான் தம்பி..

வாங்க தம்பி. கூட்டத்தோடு கூட்டமா போயி, நாமாலும் ஒரு கட்டிங் போட்டுட்டு வந்திருவோம்.. வாங்க தம்பி. அட..வாங்க தம்பி, குடிக்கிறது. தப்பே இல்லேன்னுதானே அரசாங்கமே கடைய திறந்திருக்கு...   தம்பி குடிக்கிறது தப்பே இல்ல ... குடிக்காம இருக்கிறதுதான் தப்பு தம்பி இதோட, குடிக்கிறவங்களை தடுக்கிறது, கடைய அடைடான்னு  என்று போராட்டம் பன்றதுதான் தம்பி  குத்தம்.. சாரயவிக்கிற அரசாங்கத்த எதிர்க்கிறதுதான்

அங்க பாருங்க தம்பி  நாத்தமெடுத்த வாசகத்த..“ குடி குடியை கெடுக்குமாம், குடிக்காமல் இருப்பது அரசாங்க வருமானத்தை கெடுக்குமாம் பாத்தீங்கல்ல அரசாங்கத்து  வந்த கொழுப்ப”  அப்படியே  குடிக்காமல் இருப்பது உடல் நலத்தையும் கெடுக்கும்னு  போடாமல் விட்டுருக்கான் தம்பி.

என்னதம்பி என்னய இப்படி பாக்குறிங்க... குடிக்கா பேசுறேன்னா பாக்குறிங்க போங்க தம்பி, ஒங்கிட்ட சொல்றதுக்கு என்ன  இரகசியம் இருக்கு... உங்க கிட்ட நான் இப்படி ஸ்டெடியா பேசுறென்னா.... காலைல எழுந்தவுடன் இறக்கிய சரக்குதான் தம்பி.

 எப்படி சரக்கு கிடைச்சிருக்கன்னா யோசிக்கிறீங்க..தம்பி, அட. போங்க தம்பி .விவரம் தெரியாம இருக்குறீங்க.....எதுக்கு பார்ன்னு ஒன்னு வச்சிருக்கான்... விவரம் தெரியாமல் இருக்கக்கூடாது தம்பி....




4 கருத்துகள்:

  1. அண்ணன் ரொம்ப விவரம்தான் :)

    பதிலளிநீக்கு
  2. தம்பியை கொன்னுட்டீங்க நண்பரே.....

    பதிலளிநீக்கு
  3. தங்கள் சிறந்த பதிவுக்கு எனது பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  4. காலம் கெட்டுப் போச்சு... ஊர் கெட்டுப் போச்சு..நாம் கெடலைன்னா எப்படி!

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...