சனி 09 2016

ஒரு போலீஸ் வழிப்பறி செய்த கதை,

நடு இரவு மணி இரண்டு..  பைக்கில் இருந்து இறங்கிய இருவர் ஒரு போஸ்டரை ஓட்டுவதற்கு தயாராக இருந்தனர்.

அந்த நேரம் ஒரு போலீஸ் வந்து ரெம்ப மரியாதையாக ..“டேய்.. என்னடா செய்யிறீங்க என்றான்.. அதற்கு அவர்கள் போஸ்டர் ஒட்டுறோம் என்றார்கள்
என்னது போஸ்டரா... என்னடா போஸ்டர் என்று வினவினான். அவர்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் சார் என்றார்கள்... “எங்கே காட்டு பார்ப்போம் என்றான். அதற்கு அவர்கள்... ஒட்டின பிறகு பாத்துகங்க சார்” என்றுவிட்டு கண்ணீர்அஞ்சலி போஸ்டரை ஒட்டிவிட்டு போலீஸ்காரனை பார்த்தார்கள்.

அவன் அந்த போஸ்டரை படித்து பார்த்துவிட்டு, போத்தி ராஜா.. சரி..அதுக்கு பின்னாடி ஆசாரி ன்னு ஏன்டா போட்டேங்க..ஏய்..நில்லுங்கடா... என்றுவிட்டு அவர்களுக்கு அருகில் வந்து.. பைக்கு சாவியை எடுத்துக் கொண்டான்....

சாதிப் பெயரைபோட்டு போஸ்டர் ஒட்டக்கூடாது தெரியுமா...? என்று வினவினான்.... தேவர், நாடார், பிள்ளை, நாயுடு, இப்படி பல சாதி போஸ்டர் ஏற்கனவே நிறைய பேரு ஒட்டியிருக்காங்கல சார் என்று இருவரும் சொன்னபோது,

அது அப்ப.... இப்ப இப்படி சாதிப் பெயர் போட்டு ஒட்டக் கூடாது தெரியுமா..? எவ்வளவு படிச்சு இருக்கீங்க...  வாங்க ஸ்டேசனுக்கு  என்றார்.

போலீசைக் கண்டு அரண்டு போன இருவரும் அவர்களது செல்போனில் தெரிந்தவர்களுக்கு போன் செய்தனர்.. அவரிடம் விபரத்தை சொன்னார்கள். போனில் பேசியவர் போலீசை பேசச் சொன்னபோது. போலீசிடம் போனை கொடுத்தார்கள்.

போலீசு, செல்போனை வாங்கிப் கெத்தாக பேசினான்.... இன்ஸ்பெக்டர் உத்தரவு போட்டு இருக்கிறார்... அதனால்தான் நிப்பாட்டி வச்சிருக்கேன் என்றார். பிறகு..சரி. சரி... முடியாது..முடியாது பேசிவிட்டு போனை அவர்களிடம் தந்தார்.

தம்பிகளா...!! இந்த ஒருவாட்டி உங்கள மன்னிச்சு விட்டுடுறேன்...இன்ஸ்பெக்டருக்கு தெரிந்தால் ..உங்களுக்கு கம்பிதான்... அதனால... செல்போனில் பேசியவர்க்காக  அனுப்பி விடுகிறேன். உங்க ஏரியாவுக்குள்ளயே  ஒட்டங்கப்பா... என்றபடி. அவர்கள் கொடுத்த ரூபாயை எண்ணிப் பார்த்தவர்.... ஏய்..என்னயா. குறையுது?.   வேணாம் வேணாம் நடங்க என்றபோது.. திரும்பவும் அவர்கள் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு, சரிப்பா...பாத்துப்போங்க..... என்றவர் வண்டியின் சாவியைக் கொடுத்தார்.

வண்டிச் சாவியை வாங்கிக் கொண்டு விரைவாய் ஸ்டார்ட செய்து வண்டியை கிளப்பி சென்று மறைந்தனர்.அவர்கள் இருவரும்.

மறுநாள் போஸ்டர் ஒட்டியவர்களுக்கும்  அவர்களின் நண்பர்களும் உறவினர்களும்  தெரிந்தது.அழகாய் சட்டம் பேசி 500ரூபாய்  வழிப்பறி செய்தது.  போலி போலீஸ் என்று....

6 கருத்துகள்:

  1. காசை யாரிடம் பறி கொடுத்தால் என்ன ,ஒண்ணுதானே :)

    பதிலளிநீக்கு
  2. போலி போலிஸிடம் ஏமாந்தால் என்ன ? நிஜ போலிஸிடம் ஏமாந்தால் என்ன இரண்டும் ஒன்றுதான்

    பதிலளிநீக்கு
  3. இழப்பை ஈடு செய்ய எவர் வருவார்?

    பதிலளிநீக்கு
  4. தமிழக போலீஸின் வழிப்பறி தொழிலை போலிகள் செய்துள்ளனர்.

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...