அண்ணே...... நேத்து பேப்பர பாத்தீங்களா..ண்ணே....????
வேலையில பாக்கலேடா...... ஆமா...என்ன போட்டு இருந்தாங்கே....
தூத்துக்குடியில ஒரு பயங்கரம்ண்ணே.....
என்னது தூத்துக்குடியிலா...மணல் கொள்ளையன் விவகாரமாடா...?
அது இல்ணே்ணே.....
பின்னே......
சர்ச்சுல சாமி கும்பிட்டு இருந்த போது ஒரு தலையா காதலிச்ச டீச்சர போட்டுத்தள்ளிவிட்டு, அவனும் தூக்குல மாட்டிகிட்டு செத்து போனாண்ணே ..
ஒருத்தன்...
அவனாவது பரவாயில்லடா... கர்த்தரு எதுக்கும் உதவ மாட்டாருன்னு. நெணச்சி நெணச்சவ..கிடைக்காத விரக்தியில போட்டுத்தள்ளிவிட்டு அவனும் தூக்கு கயிறுல மாட்டிக்கிட்டான்...
நம்ம நாட்டில பாரு, மத்தியிலும்... மாநிலத்திலும் ஆட்சிக் கட்டிலில் உக்காந்துகிட்டு.. பரதேசி பண்டாரங்க .கூத்தாடிக ஆடுற ஆட்டத்துக்கு காரணமானவிங்க., இன்னும் சாகம இருக்காங்கே அதுதாண்டா இப்ப படு பயங்கரமா இருக்கு......
யார்ண்ணே....அவிங்கே....?
நல்லா கேட்ட போ..... அதாண்டா ஓட்டு போடும் எந்திரமான. வாக்காள ..பெரு மக்கள்.....கொலைகாரனையும் கொள்ளக்காரியையும் தேர்தெடுத்துவங்களை சொல்றேண்டா.....?ஃ
எவன்ண்ணே சாகாம இருக்கப்போறாங்கே....ஒரு கூட்டம் தூக்கு கயிறுயில தொங்கப் போறேன்னு போராட்டம் நடத்துது.. இன்னொனு...உண்ணாவிரதம் இருந்து சாகப்போறேன்னு கத்துதுண்ணே......மற்றதுக எவன் செத்தா நமக்கென்னான்னு ரெம்ப சந்தோசமா இருக்குன்ண்ணே.. அதுவும் எதுவும் சாகாமே இருக்காதுண்ணே.... சாவுறதலிலும் நோகாம சாகனும்முனனு இருக்குதுண்ணே..
சரியா.. சொன்னடா....
???
பதிலளிநீக்குஇப்படியெல்லாம் யோசிக்கக் கூடாதுன்னுதானே டாஸ்மாக்கை திறந்து வச்சிருக்காக :)
பதிலளிநீக்குநாட்டு நடப்பை காட்டி உள்ளீர்கள் நன்று
பதிலளிநீக்குசாவுறதலிலும்
பதிலளிநீக்குநோகாம சாகனும்முன்னு
இருக்குதுண்ணே...
ஆனால்,
நோக வைச்சுச் சாகடிக்க
அவரவர் செய்த
நல்வினை, தீவினை இருக்கே!