சனி 29 2016

பறவைகளுக்கு மனிதன் சொன்ன கதை..







ஒரு பக்கம் காக்கைளும் மறுபக்கம் குருவிகளும்  தங்களைவிட ஓரறிவு பெற்றவர்களால் தாங்கள் படும நிலைமைகளை  சொல்லி   தங்களுக்கு தொந்திரவு கொடுக்காத தங்களுக்கு பழக்கமான தாங்கள் வசிக்கும் இடத்துக்கு வீட்டுக்கு சொந்தக்காரனான அந்த மனிதனிடம் கரைந்தன கத்தின  கூப்பாடு போட்டன...

அவைகளின் கூப்பாடுகளை கேட்ட அந்த மனிதன்..உங்களை புரிந்தவர்களால் மட்டுமே அவர்களால் உங்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை.. மனிதர்களில் ஒரு பிரிவையை ஒதுக்கி கொன்று ரத்தம் குடிக்கும் காட்டேறி மனிதர்களால் உங்களை புரிந்து கொள்ளமுடியாது. அவர்களால் எந்த வகையிலும் உங்களுக்கு நண்மையே கிடையாது... இன்று ஒரு நாள் அல்லது நாளை ஒரு நாள் உங்களுக்கு ஏற்பட்ட இந்த இன்னல் முடிந்துவிடும் அதுவரையில் தாங்கள் அந்தக் கொடியவர்களால் ஏற்படும் இன்னல்களை தாங்கிக் கொள்வதைவிட இப்போதைக்கு வேறு வழியில்லை  என்று சொல்லி அவர்களுக்கு ஏற்படும் ஒலி இன்னல்கள் ஏற்பட்ட கதை என்ன என்பதை சுருக்கமாக சொன்னான். அந்த மனிதன்.

விஸ்னு என்ற பெயர் கொண்டவனாம் பூமியை பாயாய் சுருட்டும் சக்தி உள்ளவனாம்....நிணைத்த மாத்திரத்தில் பல்வேறு உருவம் எடுப்பவனாம்.

கரைந்த ,கத்திய காக்கைகளும், குருவிகளும் தங்கள் இன்னல்களை மறந்து ஒரு கணம் சிரித்தன.... என்ன சிரிக்கறீங்க...

அப்படித்தான் அந்த கெடுகெட்ட கயவர்கள்.  இல்லாததையும் பொல்லாததையும் எழுதி பரப்பி விட்டு உண்மை, வரலாறு என்று அடித்து சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்..  

அந்த விஸ்ணு என்பவன் நரகாசுரன் என்பவரை சண்டையில் வென்று கொன்று வெற்றி வாகை சூடியதால்.  தலைக்கு முழுகி,  புத்தாடை அணிந்து வெடி வெடித்து கொண்டாடுகிறார்கள். இந்த வெடி வெடிக்கிறதுக்கு பேரு தீபாவளியாம்... வெடி வெடிப்பதால் உங்களுக்கு வலியாக இருப்பது.. அவர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது.

வென்றவனின் கூட்டத்தோடு தோற்றவனின் கூட்டமும் சேர்ந்து  தன்மானம் இழந்து சுயமரியாதை கெட்டு கொண்டாடாடுவதால்தான் உங்களுக்கு ஏற்படுகிறது பெரும் பிரச்சனை.

தோற்றவனின் வம்ச வழியினர்களின் பெரும்  பகுதி தெரிந்தோ தெரியாமலோ கருப்பு ஆடுகளாக மாறிவிட்டனர். இந்த கருப்பு ஆடுகளும் ஒருநாள் வென்றவர்களால் வெட்டப்படும் என்பது அந்த கருப்பு ஆடுகளுக்கு தெரிந்தும்...பச்சோந்தி கூட்டமாக துரோக கூட்டமாக மாறிவிட்டது.

உங்களின் நரகாசுரன் வாழ்ந்த நாட்டை வெடி என்னும் கரும்புகையால் மாசு படுத்துகிறார்கள். உங்களை ..அதிர்ந்து  படபடத்து போகுமளவுக்கு வெடி வெடித்து கதற வைக்கிறார்கள்... நரகாசுரனின் உண்மையான வாரிசுகள் ஒருநாள் இதற்கு முடிவு கட்டுவார்கள்.. அப்போது உங்கள் சந்திதிகள் எந்த தொந்தரவும் இல்லாமல் காலத்தை கடப்பார்கள்.

உங்களுக்கு ஏற்ப்படுகின்ற  தொந்தரவுகள் யாரால். எவரால் உண்டாக்கப்படுகின்றன என்று உங்கள் சந்நதியினர்களுக்கு சொல்லி வையுங்கள்..அவர்களை அடையாளம் காட்டுிவிட்டுச் செல்லுங்கள்...... என்று மனிதன் சொல்லி முடிக்கும்வரை அமைதியாக மனிதனை பார்த்துக் கொண்டியிருந்த அந்தப் பறவைகள்   தொடர்ச்சியாக வெடிச் சத்தம் . கேட்டதால் எல்லாம் பற்ந்து அந்த மனிதனின் வீட்டுக்குள புகுந்து தங்கள் வீடுகளில் ஓடி ஒளிந்தன.


4 கருத்துகள்:

  1. ஆஹா இதுதான் நரகாசுரன் கதையா ?

    பதிலளிநீக்கு
  2. பாடித் திரிந்த பறவைகளைக் கூட பதுங்கச் செய்த இந்த நாள் நல்ல நாளாம் :)

    பதிலளிநீக்கு
  3. இந்த கருப்பு ஆடுகளும் ஒருநாள் வென்றவர்களால் வெட்டப்படும் என்பது அந்த கருப்பு ஆடுகளுக்கு தெரிந்தும்...பச்சோந்தி கூட்டமாக துரோக கூட்டமாக மாறிவிட்டது.

    பதிலளிநீக்கு
  4. சிந்தனைக்கு விருந்தான
    சிறந்த பதிவு

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...