செவ்வாய் 08 2016

அறிந்து கொள்ளுங்கள்-1

இரசியப் புரட்சியின் நூற்றாண்டு..

1917ஆம் ஆண்டு நவம்பர் 7ல் இரசியாவில் மார்க்சிய தத்துவத்தை வழிகாட்டியாகக் கொண்டு தோழர் லெனின் தலைமையில் சோசலிச புரட்சி வெற்றிடைந்தது. அந்த இரசியப் புரட்சியின் நூற்றாண்டு 2017ஆம் ஆண்டு.

இரசியப் புரட்சி பூமிப் பந்தின் 5ல் ஒரு பகுதி மண்ணில் ஒரு சொர்க்கத்தை படைத்தது. சமத்துவமான ஒரு சோசலிச கட்டமைப்பை உருவாக்கியது. மக்களின் அணைத்து தேவைகளையும் பெறுவதற்க்கான ஒரு சமூக அமைப்பை உருவாக்கியது.

இப்படியான ஒரு  சொர்க்கத்தை, சோசலித்தை இரசியாவில் படைத்துக் காட்டுவதற்கு வழிகாட்டியாக இருந்த மார்க்சியத்தை நடைமுறைக்கான சித்தாந்தம் என நிருபித்துக் காட்டினார் தோழர் லெனின்.

பாட்டாளி வர்க்கத்தின் சித்தாந்தமான மார்க்சியத்தை பூமாலை தொடுப்பது போல இலகுவாக  தொடுக்கவில்லை.

இந்த மார்க்சிய சித்தாந்த்தை உருவாக்குவதற்கு தோழர்கள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், ஜென்னி மார்க்ஸ் ஆகியோரின் உழைப்பு ஈடு இணையற்றது.

மார்க்சுக்கு முன்னால் இருந்த சித்தாந்த வாதிகள்? அறிஞர்கள், உலக சமூக பிரச்சினைகளுக்கு விளக்கம் தந்தார்கள், வியாக்கனம் செய்தார்கள்.. அதன் மூலம் கற்பனையான சோசலித்தை மக்களுக்கு போதித்தார்கள், முதலாளிகளின் சுரண்டலுக்கும் கொடுமைகளுக்கும் ஒடுங்கி ஒன்றி வாழ்வதற்கே  வழிகாட்டியாக அவர்கள் இருந்தார்கள்.

ஆனால் பாட்டாளி வர்க்க சித்தாந்த ஆசான் மார்க்ஸ் முதலாளிய தத்துவ சமூகத்தை தலைகீழாக  புரட்டி போடும் பாட்டாளி வர்க்க புரட்சிக்கு வழிகாட்டினார். அவர் உருவாக்கிய சித்தாந்தமே மார்க்சிய சித்தாந்தம். அந்த பேராசான் 1818-ம் ஆண்டு மேமாதம் 5ந்தேதி பிறந்தார். அவர் பிறந்து2017ம் ஆண்டுவரை இரு நூற்றாண்டாகிறது.

இவற்றோடு, 1949ம்ஆண்டு அக்டோபரில் தோழர் மாவோவின் தலைமையில் நீண்டகால மக்கள் யுத்தப் பாதையில் இரத்தம் சிந்தி உயிர் தியாகம் செய்து மலர்ந்தது மக்கள் சீனம். 1966-ல் சோசலித்தை நோக்கி முன்னேறிய செஞ்சீனத்தை முதலாளிய தத்துவ பாதைக்கு இழுத்து செல்ல முயன்ற அதிகார வர்க்கத்தின் கம்பலை முறியடித்த சீனப் பண்பாட்டுப் புரட்சிக்கு ஐம்பதாமாண்டு..

1967ம் ஆண்டு இந்திய புரட்சி வானில் சிவப்பு நட்சத்திரமாய் தோன்றியது நக்சல்பாரி எழுச்சி. அது போலி கம்யூனிச இயக்கத்தை அம்பலப்படுத்தி இந்தியாவில் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு பாதை வகுத்து கொடுத்தது. வசந்தத்தின் இடி முழக்கமாக தோன்றிய நக்சல்பாரி எழுச்சிக்கு ஐம்பதாமாண்டு.


இந்தாண்டு..,


பேராசான் மார்க்ஸ் பிறந்த தின இரு நூற்றாமாண்டு
இரசியப் புரட்சியின் நூற்றாண்டு
மக்கள் சீனத்தின் பண்பாட்டு புரட்சிக்கு ஐம்பதாமாண்டு
இந்திய புரட்சியின் விடிவெள்ளி சிவப்பு நட்சத்திரம் தோன்றிய நக்சல்பாரி எழுச்சியின் ஐம்பதாமாண்டு..



3 கருத்துகள்:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...