புதன் 30 2016

சிட்டாய் ஓடி மறைந்த பெண்.......

அண்ணே.. வேல இல்ல
உங்க ஆபிசில எனக்கு
ஒரு வேல போட்டு
கொடுங்கண்ணே எனறு அந்த
பெண் கேட்ட போது....

உனக்கு என்னம்மா குறைச்சல்
கணவரோ கொத்னார் நீயோ
சீத்தாள். உன் மகனோ
ஆங்கில வழி பயிலும்
மாணவன் வேலை முடிந்த
உடன் கையில் கூலியை
பெறும் நீ எங்கே...

வரும் வேலையை அவசர
அவசரமாக முடித்துக் கொடுத்து
கூலிக்காக மாதக் கணக்காக
எதிர் பார்த்துக காத்திருக்கும்
நான் எங்கே என்
ஆபிசிலா  உனக்கு வேலை
வேண்டும் வேலை தருகிறேன்
ஆனால் ஒரு கண்டிசன்
செய்த வேலைக்கு எனக்கு
எப்போது கூலி கிடைக்கிறதோ
அப்போது தான் உன்
கூலியும் கிடைக்கும் என்ற
போது......அந்தப் பெண்
சிட்டாய் ஒடி மறைந்தாள்.....

6 கருத்துகள்:

  1. நிலைமை அப்படித்தான்... பல இடங்களில் பணி நீக்கம்...

    பதிலளிநீக்கு
  2. மிகவும் இரசித்தேன்
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  3. வியர்வைக் காயுமுன் கூலியைக் கொடுத்து விடு என்பதெல்லாம் வெறும் பேச்சுக்குத் தானா :)

    பதிலளிநீக்கு
  4. என் கூலி
    உங்க கூலி
    கிடைத்த பிறகென்றால்...
    என்றதும்
    ஓட்டம் பிடித்தாளோ அவள்!

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...