புதன் 21 2016

அந்த நிகழ்வுக்குப்பின்.............











எங்கள் தெருவுக்கு
அடுத்த தெருவில்
இரண்டு பணம்
கொடுக்கும் இயந்திரங்கள்
அதில் ஒன்று
சென்ற மாதத்திற்கு
முன் மாதத்தில்
இருந்தே பகலும்
இரவுமாய் ஓய்வறியாமல்
வந்தவர்களுக்கு பணம்
கொடுத்து சிவந்த
கரமாய் காட்சி
அளித்த வேளையில்

திடிரென்று  கொடுக்கும்
பணத்தை வாங்க
எங்கள் தெருவரை
வரிசை வரிசையாய்
மக்கள் கூட்டம் .
ஜெ..ஜெவென்று
இருந்தது தெரு

ஒருநாள் பணம்
கொடுக்கும் இயந்திரம்
இறந்துவிட்டது என்று
துக்கத்துடன் அழுது
மாலை அணிவித்தனர்
தெரு மாதர்கள்.

அந்த நிகழ்வுக்குப்பின்
தெரு வாசிகளும்
துக்க முகத்துடனே
காட்சி  தருகிறார்கள்


கடந்த ஒருவாரமாக
அந்த இயந்திரம்
குந்தியிருந்த இடம்
பூட்டியே கிடப்பதால்
தெருவே வெறிச்
சோடி கிடக்கிறது..




5 கருத்துகள்:

  1. வாரத்தில் ஏழுநாளும் ,இருபத்து நான்கு மணி நேரமும் செயல்பட்ட atmக்கு வந்த கதி :)

    பதிலளிநீக்கு
  2. தங்களின் தெருவிற்கு அருகில்மட்டுமா
    எங்கெங்கும் காணும் காட்சி அல்லவா

    பதிலளிநீக்கு
  3. அஞ்சலி செய்வது நமது கடமை நண்பரே

    பதிலளிநீக்கு
  4. ஏ.ரி.எம். செயலிழந்தால்
    நிலைமை என்னாகும்?
    அதைப் படித்தேன்
    இங்கே

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...