சனி 24 2016

திருத்தவே முடியாத மூடர்கள்....



இன்று விவசாயிகள்
தினம் என்றார்கள்
அவர்கள்...........

விவசாயிகளா..யார்
அவர்கள் என்றார்கள்
இவர்கள்..............

விவசாயிகள் இந்த
நாட்டுக்கே சோறு
போட்டவர்கள என்றார்கள்
அவர்கள்...........................

எங்களுக்கு விவசாயியும்
தெரியாது சோறும்
தெரியாது எங்களுக்கு
தெரிந்தது எல்லாம்
பாட்டில் சாராயம்
ஒரு பிரியாணி
பொட்டலம் கொடுக்கும்
அந்த அம்மாவத்தான்
தெரியும் என்றார்கள்
அவர்கள்...................

அது உங்களை
பெற்ற அம்மா
இல்லை அவள்
உங்களை கெடுக்கும்
சதிகாரி என்றார்கள்
அவர்கள்...................

வாயை மூடு
பாட்டில் சாராயமும்
ஒரு பொட்டலம்
பிரியாணியும் கைச்
செலவுக்கு இரு
நூறு ரூபாய்
கொடுக்கும் தெய்வத்தை
பழிக்காதே என்றார்கள்
இவர்கள்....................

பெறாத பிள்ளைகளான
உங்களுக்கு சாராயத்தை
ஊத்தி கொடுத்த
புன்னியவதி  செத்து
விட்டார் என்பது
தெரியுமா? என்றார்கள்
அவர்கள்....................

அந்த அம்மா
செத்து போனால்
என்ன எங்களுக்கு
இன்னொரு சின்னம்மா
வந்து விட்டார்கள்
என்றார்கள் திருத்தவே
முடியாத மூடர்களான
இவர்கள்....................



4 கருத்துகள்:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...