வெள்ளி 30 2016

புல்லரிப்புக்கு.. ஒரு புல்லு வாங்கித் தரட்டுமா..தலைவரே..?

“என்ன தலைவா..நேற்று..ஆளையே  காணோம்“....

“எப்போதிலிருந்து..................

“யாரையோ  கேக்கிற மாதிரி கேட்கிற“......

“நீங்கதானே தலைவா, நேற்றிலிருந்து ஆளையே..காணோமுன்னு சொன்னீங்க..”


“நா...ன்..சொன்னது..ஒன்னத்தான்  தலைவா...”

“ சே.....என்னத்தானா......  உங்களுக்குத்தான்..தெரியுமே..? கழுத கெட்டா..கம்யூட்டருன்னு”


“ அங்கத்தான் காணோமே....”

“ஓ..... பதிவு போடாததப்பத்தி சொல்றீங்களா...தலைவரே...”

“யப்பா.....புரிய வைக்கிறதுக்குல்ல   தொண்டைத்தண்ணி போயிரும்போல...”

“ தலைவரே... நீங்க... தலைய சுத்தி மூக்க தொடாம....நேரிடியா... மூக்கத் தொட்டுயிருந்தா...இந்த மரமண்டைக்கு சட்டென பதிவாயிருக்கும்”


“ சரிச்சரி...இப்போ பதிவாகியிருக்குல்ல.... சொல்லுங்க..தலைவரே...”

“ சாமி ...கும்பிட கோயிலுக்கு போனதால..... பதிவு போடல..தலைவரே...”


“ என்னது.... சாமி  கும்பிட  கோயிலுக்கு போனீங்களா...!ஹா....ஹா.....ஹா...ஹா.ஹா.......ஹா.....” என்னா தலைவரே... எங்கிட்டயே ரீல் விடுறிங்களா...”

“ உண்மையைத்தான் சொல்றேன் தலைவரே...! இதுக்கெல்லாமா பொய் சொல்வாங்க...தலைவரே...”


“அது இல்ல தலைவரே..உங்களுக்குத்தான்..சாமி கும்பிடுவது, கோயிலுக்கு போவது பிடிக்காதே..!பொண்டாட்டி .....இருந்தாலாவது... அவுகளுக்கு துணைக்கு போனேன்னு சொல்லி தப்பிக்கலாம்..ஒங்களுக்கு அந்த கொடுப்பினையும் இல்ல... அதான் தலைவரே.....”

“ தலைவரே...நீங்க  எதை.. சாமி. கோயிலுன்னு சொல்றீங்க.”

“ஆகா....தலைவரு..கேட்கிற  ..கேள்வியப்பாரு...?????”

“ தலைவரே.... நீங்க.. மார்கழி மாத முருகன் அடிமை, அய்யப்பன் விசுவாசிகள்  கும்பிடும் சாமிகளையும். அவர்கள் செல்லும் கோயில்களை பத்தி நிணைக்கிறேன்”..


“ ஆகாகா..... தலைவரு..கரக்கெட்டா... கண்டுபிடிச்சட்டாருப்பா....”

“அடடா.., தலைவருக்கே...புரிய வைக்கனும் போலிருக்கே........”

“ என்ன..தலைவரே....யோசனை...குட்டு வெளிப்பட்டு போச்சுன்னா...”

“அது..இல்ல.. தலைவரே... நான் சொல்றத கோபப் படாம கேளுங்க..தலைவரே..”

“ சரி, சொல்லுங்க... கோபப்படல....”

“ நான்  கோயிலுன்னு சொல்வது கழிப்பறை,..சாமி கும்பிடுவது..என்பது கழிப்பறையான கோவிலுக்குள் சென்று அமர்ந்து கழிவுகளை கழிப்பதுதான் சாமி கும்பிடுவது....... நேற்று இன்னொரு தலைவர் வீட்டில் கொடுத்த விசிடேபிள் பிரியாணியை உண்டதால்  வயிற்றுக் கோளாறாகி அது பக்தியாக..சிறு நேரத்தில் பக்தி முக்தியாகி... பதிவு போடும் வேளையில் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டதால்  நேற்று பதிவு எதுவும் போடவில்லை. தலைவரே... அதனால்தான் நேற்று என்னை தாங்கள காணமுடியவில்லை...தலைவரே..........


“ அடப்பாவி ..தலைவரே..... உங்க மரமண்டைக்குள்..இவ்வளவு  ஞானம் இருக்கிறதா...  தலைவரே...!!!!”

“ ஏதோ..காலம் போன வேளையிலாவது... எனக்கு இப்படியோரு ஞானயோதம்
தோன்றுகிறதே.... அத..நிணச்சு பெருமைப் படுங்க  தலைவரே.....”


“ உடம்பெல்லாம் புல்லரிப்பதோட, ரெம்பவும் பெருமையாக இருக்குது தலைவரே..”..

“ புல்லரிப்புக்கு.. ஒரு புல்லு வாங்கித் தரட்டுமா.... தலைவரே.....”


” அத்தாடீ...... அதுக்கும்..எதாவது வச்சிருப்பிங்க  தலைவரே.....”

“ அப்ப..வரட்டுமா.... தலைவரே......இப்ப நாம..பறிமாறிக் கொண்ட அறிவ ... ..நாளை பதிவுல... பாருங்க....தலைவரே......”

”!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!...............................”


3 கருத்துகள்:

“மார்ச் 8 உலக மகளிர் தினம்-”

                                                              கிளாரா ஜெட்கின். உண்மையான ஜனநாயகம், சமத்துவம் நோக்கி மனிதகுலத்தை முன்னெடுத்துச...