ஞாயிறு 01 2017

ஆச்சரியமான ஆச்சரியம்மா இருக்குது கணேசு....

ஏ....ங்..கணேசு...... தலைவருகிட்ட கோயிலப்பத்தியும் சாமியப்பத்தியும் விலா வாரியா...பேசியதை..கதையா.... எழுதிட்ட..... தலைவரு  அவரோட செல்போன்ல படிக்கச் சொல்லி காட்டினாருப்பா.. ...ஆமா.... உன் வீட்டில சாமிய கும்பிடுவதற்கு கோயில கட்டிட்டீயா...... நீ..சாமி  கும்பிடுவதற்கு வயல் வெளிப்பக்கமும்... ஒருநாள்  வயல் வெளியில சாமி கும்பிட்டப்ப  புதுசா வீடு கட்டியிருந்தவங்கே  கல்லக் கொண்டு எறிஞ்சதானால... ஆத்துப்பக்கம் போனதாக கேள்வி பட்டேனே.... ... எப்படி உன் வீட்டுல கோயில கட்டினே.. உன் வீட்டுக்கருகில் கோயில கட்டும்போது... உன் சித்தப்பன் பொண்டாட்டிய தடுத்துல உம்மேல பத்தி  இழுத்ததா போய் புகார் கொடுத்தாலே.... அதை மீறி எப்படி கணேசு கோயில் கட்டுன..... ரெம்ப ஆச்சரியப்பா....... உன் தெருவிலே இருக்கிற தெரு நாட்டாமையும் தெரு முகப்பில இருக்கிற  காளியம்மன் தெருக்கோயிலுக்கு பூசாரியா இருக்கிற..அந்த குருசாமியும் எப்படிய்யா உன்ன கட்டவிட்டாங்கே...........

உங்க ஏரியாவுல முன்பு குடியிருந்த செல்லக் கன்னு கதை கதையா சொன்னான் கணேசு.....செப்பு டாங்கிக்காக சிமெண்ட் உறையை .. தெருப் பொம்பளை எல்லாம் ஆசை நாயாகியா வச்சுஇருக்கிற பூசாரி தெருவுக்குள்ளேயே கொண்டு போக முடியாம  தெருப் பொம்பளைகளை தூண்டிவிட்டு மறிக்க வைத்ததும்,  உன் சித்தப்பன் பொண்டாட்டி அவ பேரு கூட.... ஞாபத்துக்கு வரமாட்டுது கணேசு.... சரி விடு கணேசு பெயரு வரலாட்டி.... அந்த பொம்பள கழிப்பறை கோயில கட்ட குழி தோண்டவிடாமா   மறிச்சதும், தெரு நாட்டாமையான தெரு பூசாரியும் ரோட்டுல இருந்து சிமெண்ட் உறை தடுத்து நின்றதும்...

இவ்வளவு அநியாயம் செய்தும் நீ கோபப்படாம.... வந்த போலீஸ்காரன் கிட்ட எல்லா விபரத்தையும் சொல்லியும்... வந்த போலீஸ்காரன் ஊரோடு ஒத்துப்போ என்று சொன்னதும்.. நீ ஊரோடு ஒத்து போகமுடியாது என்று சொன்னதும் ஒரு வாரமாக  உன்னை போலீஸ் ஸ்டேசனுக்கும் வீட்டுக்கும் இழுத்தடித்ததும். தெரு முகப்பில் இருந்த சிமெண்ட உறைஇரண்டை  பூசாரிபய ஆட்கள்“ உடைத்துவிட்டதும்.....சோர்வுற்று பயந்து பின்வாங்காமல்....போலீஸ் காரனும், உன் தெருக்காரனும் இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்று  கடைசியாக கோயில் கட்டி விட்டதை சொன்னான் கணேசு.....

பலவித தடைகற்களை போட்டும் நீ கோயில் கட்டியதை தடுக்க முடியாத அந்த பூசாரி பய தெருப்பாதையை தனது பாதை என்றும் ரோடு போடக்கூடாது என்றும் நீ பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கக்கூடாது என்று கோர்ட்டிலே வழக்கு போட்டு விட்டானாமே..... ஆமா செப்டாங்கி நிறைந்துவிட்டால் என்ன செய்வே.... அப்போதும் பூசாரி பய எதாவது பன்னுவானே...கணேசு

ஏற்கனவே... புறம் போக்கு இடத்துல கோயிலையயும் கட்டிவிட்டு, தெருப் பாதை செல்லும் பிரதான இடத்தில நிழல் குடையும் நீளமாக  கட்டிவிட்டதால் கழிவு நீரை இந்த வழியா கொண்டு போக விடமாட்டோமுன்னு சொல்லப் போறான் கணேசு....

தெருக் கோயிலுக்கு பின்னாடி இருக்கிற பெரிய கட்டிடம் அந்தக் கோயிலில் கிரகம் எடுத்து சாமியாடுபவன் என்று சொன்னான். அதோடு மாநகராட்சியில அந்தக் கட்டிடக்காரன் உதவி கமிசனராக இருக்கானமே.....அந்தக் உதவிக் கமிசனர்காரன் உன்னை உண்டு இல்லைன்னு பாக்குறானாமே.. கணேசு.... பாத்து கவனமாக காய நகர்த்து கணேசு.... எங்களப்போல..கூட்டாளின்னு வச்சக்க  உன்னப்போல பயந்துகிட்டு இருக்கமாட்டோம்..வக்காளி செத்தாலும் பரவாயில்லடா... நம்மல வாழ விடாத பயல வெட்டி சாய்ச்சு பிடுவோம்.... பாவம்... உன்ன நெணச்ச பாவமா இருக்குது... நேர்மைக்கு. காலமில்லன்னு சொலற்து.. சும்மா இல்லேன்னு தெரியுது... நாங்க வந்து ஞாயத்த பேசினாக்கூட... சாதியச் சொல்லி திட்டிப்பிட்டாங்கன்னு புரளி கிளப்பி போலீசுக்கு போவாங்கே.........

எப்படியோ...சாமாளி..... உங்க தெருக்காரங்க.... புதுவித சாதிக்காரன் ஆன  ராமதாசு மாதிரி  வளர்ந்து வாராங்கே.....அதாவது பாப்பாபட்டி கீரிப்பட்டி மாதிரியின்னு சொல்லலாம்   . நீ... உன் மொழியான கழிப்பறை கோயில் கட்டியதை கேள்விப்பட்டதும் ஆச்சரியமான ஆச்சரியம்மா  இருக்குது.கணேசு....

6 கருத்துகள்:

  1. நிலைமையை நினச்சா கஷ்டமாத்தான்இருக்கு கணேசு :)

    பதிலளிநீக்கு
  2. இனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் !

    எனது புத்தாண்டு பதிவு : நடப்பவை நன்மைகளாகட்டும் !
    http://saamaaniyan.blogspot.fr/2017/01/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...