வியாழன் 13 2017

இப்படியும் ஒரு அதிர்ச்சி.......














தோழர் எங்கே
என்று கேட்டு
சிலர் வாந்தார்கள்

வந்தவர்களிடம் வீட்டில்
உள்ளவர்கள் தோழர்
தண்ணி அடிக்கிறார்
என்று சொன்னார்கள்

வந்தர்கள் அதிர்ச்சி
அடைந்து என்னது
தோழர் தண்ணி
அடிக்கிறாரா எங்கே
என்று ஒருவர்
கேட்க மற்றவர்
இந்தத் தெரு
சாராயக் கடையைத்தான்
அடைத்து விட்டார்களே
என்று சொல்ல...

வீட்டில் உள்ளவர்கள்
அதிர்ச்சி அடைந்து
அய்யா சாமிகளா..
தோழரு அந்தத்
தண்ணிய அடிக்கலைய்யா
நாலு நாளைக்கு
ஒரு தடவை
வரும் குழாய்
தண்ணிய அடித்துகிட்டு
இருக்காரு அங்கே
போயி பாருங்க  
என திசையை
கை காட்ட

வந்தவர்கள் போய்
பாரக்க தோழர்
வேக வேகமாய்
குழாயில் தண்ணி
அடித்துக் கொண்டு
இருந்தார்.சீக்கிரம்
நின்று விடுமாம்..

5 கருத்துகள்:

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...