வியாழன் 20 2017

பிரச்சினை இன்றி சாராயக்கடை தொழில் சிறக்க...

சார். போராட்டம்
மறியல் போன்ற
பிரச்சினை இன்றி
சாராயக்கடை தொழில்
சிறக்க ஒரு
வழி இருக்குசார்,
சொல்லட்டுமா சார்.

சார் அப்படி
என்னை ஏளனமாக
பார்க்காதிங்க  சார்

குடியை விடு
படிக்க விடு
மாதிரி எதுவும்
இல்ல சார்


நான் சொல்ற
வழியை பின்
பற்றினால் சாராயக்
கடை தொழில்
எந்த பிரச்சினை
இன்றி  சும்மா
பிச்சுகிட்டு போகும்
சார்.....சொல்லட்டும்மா...


சார்.நான்
சொல்ற வழியை
குடியை விடு
படிக்க விடுன்னு
கிண்டலுக்கு சொல்றேன்னு
நிணைக்காதிங்க சார்.

நல்லா கவனமா
கேளுங்க  வேணுன்னா
குறிச்கூட வச்சுகுங்க..

சாலையோரக் கடைய
மூடிட்டு குடியிறுப்பு
பகுதியில வச்சா
இப்படித்தான் மறியல்
ஆர்ப்பாட்டம்  சாராய
பாட்டில் உடைப்பு
பறிப்பு போன்ற
பிரச்சினை எல்லாம்
வரும்.மக்கள்
எல்லாரும் நம்ம
போலீசு படைக்கு
பயந்து போயி
இருந்தாலும் சில
குடியின்னே என்னான்னு
தெரியாத சில
சில்லு வண்டு
பேர்வழிகள்தான் சார்
சும்மா கிடக்கும்
மக்கள உசுப்பி
விடுறாங்க சார்.

முறைக்காதிங்க சார்
சொல்றேன் சார்
ஏன் அவசரப்
படுறிங்க அந்த
வழியைத்  தானே
சொல்ல வர்றேன்

சார் கிராமப் பகுதியில
இருக்கிற சாராயக்
கடையை எல்லாம்
அந்தந்த கிராம
அலுவலகத்திலும் டவுனை
ஒட்டியுள்ள கடைகளை
ஆர் ஐ அலுவலகத்திலும்
கூட்டம் அதிகமாக
இருக்கும் கடைகளை
எல்லாம் மாவட்ட
ஆட்சியர் அலுவலகத்திலும்
அதிக வருவாய்
தரும் கடைகளை
அந்தந்த காவல்
நிலையங்களிலும்  எலைட்
மற்றும் உயர்ரக
சாராய கடைகளை
எல்லாம் போலீஸ்
ஆணையர் மற்றும்
எஸ்பி அலுவலகத்திலும்
திறந்து வைத்தால்
எந்த பிரச்சினையும்
இல்லாம நாம
கல்லா கட்டலாம்
சார். மறியல்
ஆர்ப்பாட்டம் அது
இதுன்னு எந்த
பிரச்சினை இல்லம
நம்ம சாராயக்கடை
தொழிலும் சர்வதேச
அளவுக்கு சும்மா
பிச்சுகிட்டு ஓடும்
சார். உங்க
அம்மா மேல
சத்தியம் சார்
எவனைப்பத்தியும் நிணைக்காம
உங்க அம்மா
மாதிரி தகிரியமா
மனசு வைத்து
உத்தரவு போட்டால்
எல்லாமே ஜெயம்
ஆகும் சார்
அப்புறம் பாருங்க
எல்லாருடைய கல்லாப்
பெட்டிகளும்  எந்தவித
பிரச்சினை இல்லாம
நிரம்பி வழியப்
போவதை கண்கூடா
பாப்பீங்க சார்..

சார் மனசு
வைத்தால் எல்லாம்
முடியும் சார்....


6 கருத்துகள்:

  1. அதானே ,இருக்கும் இடத்தை விட்டுட்டு எதுக்கு இல்லாத இடம் அலையணும் :)

    பதிலளிநீக்கு
  2. நல்ல அறிவுரை பிரச்சனையும் இல்லை )))

    பதிலளிநீக்கு
  3. இதுவும் நல்ல யோசனையாகத்தான் இருக்கு மனசுல வச்சுக்கிட்டேன் நண்பரே...

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...