திங்கள் 24 2017

வாருங்கள் லெனினை படிப்போம்....

1919ம் வருடம் ரசியா முழுவதும்மிகப் பெரிய உணவு பற்றாக்குறை ஏற்ப்பட்டுவிட்டது அதனால் ரேசன் முறை கொண்டுவரப்பட்டது. நாட்டின் அதிபர் முதல் சாதாரண மக்கள் வரை ஒரே அளவிலான ரொட்டி கொடுக்கப்பட்டது. ரொட்டி வியோகிப்பவர் ஒருநாள் லெனின் அலுவலகத்தில் சமையல் பொருப்பில் இருந்த பெண் தோழரிடம் லெனினுக்கான ரொட்டியை கொடுக்கும்போது வழக்கமாக கொடுப்பதைவிட கூடுதலாக கொடுத்துவிட்டார். அந்த பெண் தோழரோ இன்றைக்காவது லெனினுக்கு கொஞ்சம் கூடுதலாக ரொட்டியை கொடுத்துவிடலாம் என நிணைத்து கூடுதலாக ரொட்டியை தைட்டில் வைத்துவிட்டு லெனின் தன்னை பாராட்டுவார் என்று காத்திருந்தார்.

ரொட்டி வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதை பார்த்த லெனின். ரொட்டி அதிகமாக இருக்கிறதே, யார் கொடுத்தார்கள். எதற்க்காக முறையை மீறி எனக்கு மட்டும் சலுகை காட்டுகிறீர்கள் என கடுமையாக கேட்டார். இனி ஒருபோதும் இப்படிச் செய்யாதீர்கள் என்று கடிந்து கொண்டார்.

லெனின் மிகவும் குறைவாகத்தான் சாப்பிடுகிறார். மிகவும் மெலிந்து போய்விட்டார் என்ப தை அறிந்த விவசாயிகள். உடனடியாக தங்களது கிராம கூட்டத்தை கூட்டி உடனே லெனினுக்கு உணவு அனுப்ப வேண்டுமென்று முடிவு செய்து, தங்களிடம் இருந்த மாவில்? ஆளாளுக்கு பங்கு கொடுத்து, மிகவும் சிறப்பான முறையில் உணவு பண்டங்களை தயார் செய்து அனுப்பினார்கள்.

இதைப்போல பல ஊர்களிலிருந்தும் வண்டி வண்டியாக வந்த உணவுப்பொருள்களை கண்டு திகைத்துப்போன லெனின், குழந்தைகள் எல்லாம் பட்னியாக கிடக்கிறார்களே! எனக் கவலையாக இருந்தது.... இதையெல்லாம் பள்ளிகளுக்கு அனுப்பி விடுங்கள்” என்று உத்தரவிட்டார்..

அரசாங்கத்தின் தலைவராக இருப்பதால் மக்களை விடசலுகைகள் பெற எந்தத்த தனித் தகுதியும் கிடையாது“ மக்களைப் போல்,அவரகளைவிடவும் கீழ் நிலையில் வாழ்வதே சரி என்பதே.. அந்த மக்கள் தலைவரின் கொள்கையாக இருந்தது.

 பல நாட்களாக  சரியாக சாப்பிடாத காரணத்தால்  கூட்டத்திலே மயங்கி விழுந்த விவசாயத்துறை மந்திரியும் லெனினோடு இருந்தார். மக்கள் தலைவர்  எவ்வழியோ  பிறரும் அவ்வழியே என்பதற்கு உதாரணமாக இருந்தார்கள் அந்தத் தோழர்கள்..

.உலகத்திலேயே மிகப்பெரீய்ய ஜனநாயக நாடு என்ற பீத்தித் திரியும் இந்தீய மக்களின் பிரதிநிதிகள் என்று கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உணவுக்கூடம்தான் நாட்டிலேயே மிகவும் மலிவான, தரமான்,உயர்வகை உணவு கிடைக்குமிடம். ஆனால் நாட்டில் பாதி மக்கள் இராப்பட்டினி கிடக்கிறார்கள். குழந்தைகளும்,கரப்பிணி பெண்களும் இரத்தச் சோகையோடு இருக்கிறார்கள். இன்னொரு பக்கத்திலோ  கேடிக்கனக்கான  டன்கள் உணவு தானியங்கள் வெயிலிலும் மழையிலும் நனைந்து, புழு பூச்சிகளுடன் எலிகளும் உண்டு கொீழுத்து வருகின்றன. இந்த நிலையிலும் உணவு பாதுகாப்பு என்ற பெயரில் சட்டம் கொண்டுவந்து மக்களின் உணவு முறையையே பறிக்கிறார்கள்..இந்த ஆட்சியைத்தான் மக்கள் ஆட்சி என்று காதில் பெரிய பூவை சுற்றுகிறார்கள். மக்களோடு மக்களாய் பட்னி கிடந்த லெனினும் அவர் வழி தோழர்களும்  மக்களின் சேவர்கள் என்று உணர வைத்தார்கள். எப்படியாவது மக்களை நன்றாக வாழ வைக்க வேண்டும் என்பதே அவர்களது இலட்சியமாக இருந்தது. அந்த லட்சியதிற்கு மார்க்சியம் என்ற தத்தவம் அவர்களை வழி நடத்தியது.  இங்கோ  முதலாளிகள் கொள்ளை அடிக்க வழி திறந்து விடுவதே செல்ஃபி  பித்தன் மோடியின் லட்சியமாக இருக்கிறது. சுரண்டலையே நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவம் வழி நடத்துகிறது.

பத்து இட்சம் ரூபாய்க்கு உடை தைத்து அதை ஒரு முறை மட்டுமே பயன்படுத்துகிறார். செல்ஃபி மகான்  பிரதமர் மோடி . மக்களுக்கும் தம் தோழர்களுக்கும் நல்ல  துணியெடுக்க வேண்டுமென அக்கறை காட்டியவர்  மக்கள் தலைவர் தலைவர் லெனின்.

லெனின் உடையை சுத்தம் செய்யும் பணியாளர்  வருத்தப்பட்டு நின்றபோது லெனின் அவரிடம் சொன்னார்.“ நம்நாட்டு மக்கள் செவ்வம் படைத்தவர்களாக ஆன்பின், நான் எனக்கு புதிய ஆடையை வாங்கிக் கொள்கிறேன் உங்களுக்கு தொந்திரவு இருக்காது என்றார் லெனின்...  மக்கள் தலைவர் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்....

மக்களின் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்து வைக்கின்ற சோசலித்தை படைக்கப் போராடிய லெனின், எந்த நேரத்திலும் மக்களை சந்திக்க தயாராக இருந்த மாபெரும் தலைவர் லெனின் மார்க்சிய- லெனினியம் எனும் தத்துவமாக  மக்களுக்காக காத்திருக்கிறார்.லெனினின் கனவை நணவாக்க, சுரண்டலே இல்லாத உலகத்தை படைக்க... வருங்கள் லெனினை படிப்போம்



6 கருத்துகள்:

  1. அவர் மக்களுக்காக போராடியவர் ,இவர்கள் பதவிக்காக போராடுபவர்கள் ,ஒப்பிடுவதே தவறு :)

    பதிலளிநீக்கு
  2. லெனின் - மோ(ச)டி ஒப்பீடு வேண்டாம் நண்பரே....

    பதிலளிநீக்கு
  3. அரசாங்கத்தின் தலைவராக இருப்பதால் மக்களை விடசலுகைகள் பெற எந்தத்த தனித் தகுதியும் கிடையாது“ மக்களைப் போல்,அவரகளைவிடவும் கீழ் நிலையில் வாழ்வதே சரி என்பதே.. அந்த மக்கள் தலைவரின் கொள்கையாக இருந்தது.

    இவரல்லவா தலைவர்
    படிக்கப் படிக்க நெகிழ்ந்து போயிவிட்டேன் நண்பரே

    ஆனாலும் இதுபோன்றத் தலைவரைப் பெறுவதற்கானத்
    தகுதியினை நாம் இழந்துவிட்டோம் என்றுதான் நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  4. லெனின் பற்றிய தகவல் அருமை

    பதிலளிநீக்கு
  5. அறியாத தகவல்களை அறிந்துக் கொண்டேன் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  6. நம்மைப் பொறுத்துத்தானே நமக்குத் தலைவர்கள் அமைவர்?

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...