ஞாயிறு 18 2017

சொர்க்கத்திலிருந்து நரகத்துக்கு .




அன்று ..............

என் வேலை
என் உழைப்பு
என் அப்ரைஸ்
என்று நரகத்திலிருந்து
சொர்க்கத்துக்கு போனவர்கள்

இன்று..............

என் சம்பாத்தியம்
என் குடும்பம்
என் எதிர்காலம்
என்ற சொர்க்கத்திலிருந்து
நரகத்திற்கு தள்ளப்
பட்டு இருக்கிறார்கள்..

வேலை கொடுப்பதல்ல
இலாபம் ஈட்டுவதே
மூலதனத்தின் நோக்கம்
என பொட்டில்
அடித்து புரிய
வைக்கிறது ஐ.டிதுறை


குறிப்பு---ஏழு ஐ.டி முன்னணி நிறுவனங்கள் இந்தாண்டு 56.000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளாதகவும் அடுத்த மூன்றாண்டுகளில் இரண்டு லட்சம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப போகிறதாம்....

4 கருத்துகள்:

  1. ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியா,ஒரு நிறுவனத்தை வளர்ப்பது,
    வேதனை

    பதிலளிநீக்கு
  2. யூனியன் கூட வேண்டாம் என்று மிதப்பில் இருந்தவர்கள் சிந்திப்பார்களா ?

    பதிலளிநீக்கு
  3. இவர்களைவிட கவலைக்குரியது சவூதிஅரேபியா, கத்தாரில் வேலையிழக்கும் இந்தியர்கள். இவர்களுக்கு சொந்த நாட்டில் வாழ வழியேற்படுத்தி கொடுப்பது அரசின் அவசிய கடமை

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...